பக்கம் எண் :


441


பெய்யத் தொடங்கிய குளிர்ச்சிமிக்க மலையிலே; கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங்கோட்டு - மூங்கில் நெருங்கிப் பரந்த மிக உயர்ந்த நெடிய சிகரத்தின் கண்ணே; இலங்குவெள் அருவி வியன்மலைக் கவாஅன் - விளங்கிய வெளிய அருவியையுடைய அகன்ற மலைப்பக்கத்தில்; இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறுநெறி - வழிப் போகுவார் யாருமில்லாத நீர் விளங்கிய சிறிய நெறியிலே; கடுமா வழங்குதல் அறிந்தும் - கொடிய சிங்கமுதலிய விலங்குகள் இயங்குவதனை அறிந்துவைத்தும்; நடுநாள் வருதி - இரவு நடுயாமத்தில் நீ வாராநின்றனை; யான் நோகு - இதற்கு யான் நோகா நின்றேன் அல்லேனோ?; எ - று.

    (வி - ம்.) அமலுதல் - நெருங்குதல். தளி - மழை.நீ இரவில் வரும் ஏதத்துக்கு யாம் அச்சமுறாதபடி வரைந்து பிரியாது உறைய நினைந்தா யல்லை யென்பாள், நயந்தனை யருளாயென்றாள்.

    உள்ளுறை :- சூடுவாரின்றி வேங்கையின் நறிய மலர் கற்பாறையில் உதிர்தல் போல நீ வரைந்துகொண்டு அருகிருந்து நலனுகர்ந்திலை; ஆதலின் தலைவியின் நலன் இழக்கலாயிற் றென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - ஏதஞ்சொல்லி வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) ஆசிரியர் பெயர் "சோருமருங் குமரனார்" என்றுங் காணப்படுகின்றது; உறைஇ - உறைத்து; பெய்து. இறுத்தல் - நெடிதுநிலை பெறல். நயந்தனை : முற்றெச்சம். அயம் - நீர். கடுமா - அரிமாமுதலிய ஆற்றலொடு புணர்ந்த வல்விலங்குகள்.

(257)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, தோழி செறிப்பறிவுறீஇயது.

    (து - ம்.) என்பது, பகற்குறி வந்த தலைவனைத் தோழி நெருங்கிக் கொண்கனே! எம் தலைவியின் வளை கழல்வதனை அறிந்த அன்னை அவளை இல்வயிற் செறித்து ஓம்புவளாயினள்; இங்கு யான் தமியேனாய் வந்து போகின்றேன்' என வரைவு தோன்ற உரையாடா நிற்பது.

    (இ - ம்.) இதுவுமது.

    
பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் 
    
செல்வல் கொண்க செறித்தனள் யாயே 
    
கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் 
    
திருவுடை வியனகர் வருவிருந்து அயர்மார் 
5
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 
    
கொக்குகிர் நிமிரல் மாந்தி எற்பட