பக்கம் எண் :


532


     உள்ளுறை:- வேட்டுவனாலே பார்வையாகக் களைந்து வைக்கப்பட்ட குருகு இண்டங்குழை வருடப் பைதலவாய், மாறி நிற்குமென்றது, நம்மால் இல்லின்கண் வைகுமாறு விடப்பட்ட தலைவி வருந்தித் தோழி தேற்ற மாரிக்காலத்தைக் கழியா நிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.

     (பெரு - ரை.) வாடைப் பெரும்பனிக்கு அமர்ந்தனள் என்னள் கொல் என இயைத்துக் கொள்க. அற்சிரக் காலையிலே வீசும் வாடைப் பெரும்பனிக்கு என இயைத்தலுமாம். அற்சிரம் பனிப் பருவமுமாம். என்னை? "வெண்மழை யரிதிற் றோன்றும் அச்சிரக்காலை" சிலப் - ஊர் காண் - 105 என்பவாகலின் இனி, "அற்சிரம் யாந்தன் னுழையமாகவும்" என்றும் பாடம்.

(312)
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ப் புனம் அழிவுரைத்துச் செறிப்பறிவுறீஇயது.

     (து - ம்,) என்பது, தலைமகன் ஒரு சிறைப்புறமாக வந்திருப்பதனை யறிந்த தோழி அவன் விரைவில் வரையுமாறு தலைவியை நெருங்கித் "தோழீ! தினை கொய்யும்பதங் கொள்ளும்; அதனால் நாம் மீண்டு மனையகம் புகுவேம் போலத் தோன்றா நின்றது; அங்ஙனமானால் நம்முடைய தடை நீக்கிச் சென்று முன்பு நம்மைக் கைவிட்ட காதலனை எவ்வாறு அணைகிற்போம் என நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.

    
கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் 
    
பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் 
    
தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து 
    
ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇக் 
5
காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு 
    
யாங்கா குவங்கொல் தோழி காந்தள் 
    
கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் 
    
கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின் 
    
மீள்குவம் போலத் தோன்றுந் தோடுபுலர்ந்து 
10
அருவியின் ஒலித்தல் ஆனா 
    
கொய்பதங் கொள்ளுநாங் கூஉந் தினையே. 

     (சொ - ள்.) தோழி கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினை - தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக்