பக்கம் எண் :


638


அயல் வீட்டு மாதர்கள் எம்முடைய நெற்றியிலுண்டாகிய பசலையைக் குறித்துப் பலவாய இழிந்த பாடல்களைக் குறிப்பாக எவ்விடத்தும் பாட; ஈங்கு ஆகின்று - இவ்வாறு இழிதகவெய்தப் பண்ணியது கண்டாய்; எ - று.

     (வி - ம்.) முழவின் பாணிபோல எனவும் புண்ணுறுநர் போல எனவுங் கூறி அவற்றின் வினை கூறாமையின் "வந்த" (தொல். பொ. சூ. 276) என்றதனால் இல்லாத வினை வருவித் துரைக்கப்பட்டது, இப் பாட்டின் கருத்தைத் தழுவி "நாடாது நாட்டலிற் கேடில்லை" என்றார் (791) குறளினும். சிறுமனை சிதைத்தல் மைந்தர்க் கியல்பு. "மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய, கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி" என்றார். (51) கலியினும். இது, துன்பத்துப் புலம்பல். தோழி கூற்றுக்கு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல். தலைவி கூற்றுக்கு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) "நாடாது நட்டலிற் கேடு பிறிதில்லை" என்பாள் நாடாது இயைந்த நண்பு என்றாள்.

(378)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது.

     (து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகன் நன்கு மதித்து விரைந்து வரைதல் காரணமாகச் சேட்படுக்குந் தோழி அவனை நெருங்கி, நீ காதலித்த இளமகள் தான் பருக வெடுத்த பாலைக் குரங்கின் குட்டி பறித்ததனால் அழுதலிற் கண்கள் நீர்நிரம்பிய நீலம்போன்றன; வயிற்றின் அறைந்து கோடலின் கைவிரல்கள் காந்தளிதழ் போன்றன; இவ்வளவு அறியாமையுடையாள் நினது துயரை எவ்வாறு போக்குமென அவளது பேதைமை காட்டி மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பேதைமை யூட்டலும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) காப்புக் கைமிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்,) என்பது, இல்வயிற் செறித்துக் காவலோம்பிய பொழுது வருந்திய தலைவியை வினாவிய தோழிக்கு, அவள் இன்ன காரணத்தால் கண் நீலமொத்தன விரல் காந்தளொத்தன வென்று கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்.) இதற்கு, "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் 
    
குன்றுழை நண்ணிய முன்றில் போகாது