| எரிஅகைந்து அன்ன வீததை இணர |
| வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய |
5 | தேம்பெய் தீம்பால் வௌவலின் கொடிச்சி |
| எழுதெழில் சிதைய அழுத கண்ணே |
| தேர்வண் சோழர் குடந்தை வாயில் |
| மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த |
| பெயலுறு நீலம் போன்றன விரலே |
10 | பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனாது |
| ஆடுமழை தவழுங் கோடுயர் பொதியின் |
| ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த |
| காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே. |