(து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் துனிகொண்ட தலைமகளது ஊடல் தீர்க்குமாறு பாணனை விடுப்ப வந்தானை நோக்கிய தோழி "பாணனே! தலைவி ஈன்ற அணிமையால் முயங்குதற்குரியளல்லள்; ஆதலால் ஊரனைப் பரத்தையர் சேரிக் கண்ணே கொண்டு செல்வாயாக; எம்மைத் தொழாதே கொள்; பயனில கூறற்க" என மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பாணர்................பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" என்னும் விதிகொள்க.
| நெய்யும் குய்யும் ஆடி மையொடு |
| மாசு 1 பட் டன்றே கலிங்கமும் தோளும் |
| திதலை மென்முலைத் தீம்பால் 2 பிலிற்றப் |
| புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே |
5 | வாலிழை மகளிர் சேரித் தோன்றுந் |
| தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் |
| பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ் |
| எழாஅல் வல்லை ஆயினுந் தொழாஅல் |
| கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப் |
10 | பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப் |
| புரவியும் பூணிலை முனிகுவ |
| விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே. |
(பாடம்) 1. | பட்டின்று. 2. | பிலிற்றா; பனிற்ற. | |