|
|
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே- |
|
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை, |
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
|
கல் கெழு கானவர் நல்குறு மகளே. |
உரை |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி |
|
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து |
|
எல்லாரும் அறிய நோய் செய்தனவே- |
|
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் |
|
பரீஇ வித்திய ஏனல் |
|
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! |
உரை |
|
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார் |
|
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ; |
|
அழியல் வாழி-தோழி!-நன்னன் |
|
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய |
|
ஒன்றுமொழிக் கோசர் போல, |
|
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. |
உரை |
|
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர் |
|
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, |
|
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் |
|
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் |
|
வேனில் ஆனேறு போலச் |
|
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. |
உரை |
|
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார் |
|
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- |
|
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! |
|
வெண் கோட்டு யானை சோணை படியும் |
|
பொன் மலி பாடலி பெறீஇயர்!- |
|
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? |
உரை |
|
தலைமகன் வரவுணர்த்திய பாணற்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார் |
|
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
|
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
|
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
|
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
|
தண் வரல் வாடை தூக்கும் |
|
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. |
உரை |
|
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலம்கிழார் |
|
அம்ம வாழி, தோழி!-யாவதும், |
|
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து |
|
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை |
|
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் |
|
அரிய கானம் சென்றோர்க்கு |
|
எளிய ஆகிய தட மென் தோளே. |
உரை |
|
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி |
|
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி, |
|
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!- |
|
நோதக்கன்றே-காமம் யாவதும் |
|
நன்று என உணரார்மாட்டும் |
|
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே. |
உரை |
|
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார் |
|
கான யானை தோல் நயந்து உண்ட |
|
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
|
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
|
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
|
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
|
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
|
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
|
சொல்லாது ஏகல் வல்லுவோரே. |
உரை |
|
பொருள்வயின் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |
|
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, |
|
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, |
|
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது |
|
அஞ்சுவது உடையளாயின், வெம் போர் |
|
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி |
|
முனை ஆன் பெரு நிரை போல, |
|
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே. |
உரை |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார் |
|