எ-து ‘அவன் குறிப்பிருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்
தல்லது வரையமாட்டான் போன்றிருந்தது? எனத் தலைமகள் கூறக்
கேட்ட தோழி அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்
லியது.
(ப-ரை.) தாயிழந்த குருளையோடே தினையை உண்டு கேழல்
உறங்குகின்ற இத்தன்மையையுடைய நாடனாதலால் இவ்வாறு
நிகழ்தல் கூடாதென்பதாம்.
குறிப்பு. தாயை இழந்த. குருளையொடு-குட்டிகளோடு, உணீஇ-
உண்டு. உயர்சிமை-உயர்ந்த உச்சியின்கண். நன்மலை நாடன்
நம்மை விட்டுத் துறந்து பிரிதல் என் பயக்குமோ.
(பி-ம்.) 1 ‘வளமலி சிறுதினை யுணீஇய கானவர்? ( 8 )