471

5. முல்லை

(48) பாணன் பத்து


471. எல்வளை நெகிழ மேனி வாடப்
   பல்லித ழுண்கண் பனியலைக் கலங்கத்
   துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்
   அதுமற் றுணர்ந்தனை போலாய்
   இன்னும் வருதி யென்னவர் தகவே.

      எ-து பருவவரவின்கண் தூதாகிவந்த பாணன் கூறியவழித்
தோழி சொல்லியது.

      குறிப்பு. பல்லிதழ் உண்கண் ; ஐங். 170 : 4, குறிப்பு. பனியலைக்
கலங்க-பனி அலைத்தலாற் கலங்க. மன்ற-தெளிவுப்பொருளை
உணர்த்துவதோர் இடைச்சொல். மறம்-வீரம். அவர் தகவு என்.
?துறந்தோன்,? ‘குருசில்? ‘அவர்? என்பன ஒருமை பன்மை மயக்கம்,
ஈண்டு ‘பாண? என்னும் விளிப்பெயரை அதிகாரத்தால் வருவிக்க. ( 1 )