478

5. முல்லை

(48) பாணன் பத்து


478.நீடின மென்று கொடுமை தூற்றி
   வாடிய நுதல ளாகிப் 1பிறிதுநினைந்
   தியாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச்
   சொல்லிய துரைமதி நீயே
   முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே.

     எ-து பிரிந்துறையும் தலைமகன் தலைமகள்விட்ட தூதாய்ச்
சென்ற பாணனை, ‘அவள் சொல்லிய திறம் கூறு? எனக் கேட்டது.

     குறிப்பு. நீடினம்-காலந்தாழ்த்தோம். தூற்றி-பலரறியப்
பேசி. யாம் வெம்காதலி-நாம் விரும்பும் தலைவி. நோய்மிகச்
சாஅய்-பிரிவு நோயால் மிக மெலிந்து. முல்லை-முல்லைப்பண் : முல்லை
மாலையுமாம். பாண. காதலி தூற்றி, நினைந்து, சாஅய்ச் சொல்
லியது எமக்கு உரைமதி.

     (மேற்.) மு. இது தூதுகண்டு தலைமகன் கூறியது. (தொல்.
அகத். 48, இளம்; 41, ந.). (பி-ம்) 1 ‘பெரிது நினைத்?, ‘பெரிது
நினைந்? ( 8 )