85.
|
நன்மரந்
துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென |
5
|
முன்றிணை
முதல்வர் போல நின்று
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய |
10
|
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வூரினும் பலவே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நாடுகா ணெடுவரை (7)
(ப
- ரை) 3. ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச்செய்யப்
பொருந்தாத மேற்கோள். சென்னியர் பெருமானை யென்பதனுள்,
1இரண்டாவது விகாரத்தால் தொக்கது.
4.
முத்தைத் தம்மென - முன்னே தம்மினென; 2முந்தை
முத்தையென வலித்தது.
முதல்வர்போல
(5) அறம் புரிந்து வயங்கிய (9) என முடிக்க.
9-10.
அறம்புரிந்து வயங்கிய கொள்கையென்னாது மறம்புரி
யென்றது அறத்திற்கு இடையீடுபட வருவழி அதனைக் காத்தற்கு
அவ்வறக்கொள்கை மறத்தொடு பொருந்துமென்றதற்கு.
7.
நாடுகாண் நெடுவரையென்றது தன்மேல் ஏறி நாட்டைக்
கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய 3ஓக்கமுடைய மலையென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, ‘நாடுகாணெடுவரை’ என்று
பெயராயிற்று.
8.
4சூடாநறவு : மதுவிற்கு வெளிப்படை.
கொள்கையைப்
(10) பாடிய (12) என இரண்டாவது விரித்து
முடிக்க.
5நனவிற்
பாடிய (12) என்றது வயங்கிய செந்நாவினாலும் (10)
உவலை கூராக் கவலையில் நெஞ்சினாலும் (11) மெய்ம்மையாற்
பாடிய (12) என்றவாறு.
கபிலன்
(13) என்ற தொடைக்கேற்ப, நவிலப்பாடிய (12)
என்பதூஉம் பாடம்.
இளஞ்சேரலிரும்பொறை,
சென்னியர்பெருமானுடைய (3)
நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டுதந்து (1)
அச்சென்னியர்பெருமானை (3) எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து
தம்மினெனத் தம் படைத் தலைவரை ஏவச் சென்னியர்பெருமான்
படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல்
செல்வக்கடுங்கோவாழியாதனென்பவன் (4) நாடு காணெடுவரையின்
(7) நாண்மகிழிருக்கைக்கண்ணே (8) தன் முன்றிணை
முதல்வரைப்போல (5) அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய (9)
மறம்புரி கொள்கையைப் (10) பாடின (12) கபிலன் பெற்ற ஊரினும்
பல (13) என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.
சென்னியர்பெருமானைத்
தம்மென மாறவேண்டுதலின்
மாறாயிற்று.
இனிப்
பிறவாறு மாறிப் பொருளுரைப்பாரும் உளர்.
இதனாற்
சொல்லியது அவன் முன்னோருடைய
கொடைச்சிறப்பொடு படுத்து அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-4. சேரன் தன் படையாளருக்குக் கூறியது.
1.
நல்ல மரங்கள் நிறைந்த நாடுகள் பலவற்றை எமக்குக்
கொண்டு தந்து. 2. பொன்னாற் செய்யப்பட்டு விளங்கும்
அலங்கரிக்கும் தொழில் விளங்கும் பேரணிகலங்களை அணிந்த.
4. தம்: தாருமென்பதன் விகாரம் (பொருந.
101, ந.)
3-4.
எம்மொடு பொருந்தாத மேற்கோளையுடைய சோழர்
தலைவனை எம்முன்னே தாருங்களென்று நீ சொல்ல, நின்படையாளர்
முன் சோழன் படையாளர் தோற்றுப் போட்ட வெள்ளிய வேல்கள்.
ஒன்னா: ஒன்றாவென்பதன் மரூஉ. முத்தை : முந்தை என்பதன்
வலித்தல் விகாரம்; “முத்தை முதல்வி யடிபிழைத் தாயெனச், சித்திர
முரைத்த விதூஉந்திப்பியம்” (மணி. 19 :
13-4). படையைப் போடுதல்
தோல்விக் குறிப்பு.
5.
தனக்கு முன்னிருந்த தன் குலத்து முன்னோர்களைப் போல
நிலை பெற்று (பதிற். 72 : 4). மு.
பதிற். 14 : 20.
நின்று
(5) பணிய வயங்கிய (9) கொள்கை (10) என இயையும்.
7.
நாடுகாணெடுவரை : “நாடுகா ணனந்தலை” (மலைபடு.
270); பெருங். 2. 10 : 70 - 74. 6 -
7. இனிய நீரையுடைய சுனைகள்
நிலை பெற்ற மலைவளத்தையுடைய, பெரிய பக்கங்களைப் பெற்ற
சிகரங்கள் பல ஆகாயத்தே விரிந்த, தன்மீது ஏறி நாடுமுழுவதும்
காணக்கூடிய உயர்ச்சியைப் பெற்ற நன்றாவென்னும் மலையிடத்தில்.
8.
சூடப்படாத நறவினையுடைய. விடியற்காலத்தே யிருக்கும்
ஓலக்க விருப்பில் ; சூடாநறவு : மதுவிற்கு வெளிப்படை ;
“சூடாநறவொடு காமம் விரும்ப” (பரி.
திரட்டு. 1 : 56)
9-10.
அரசவைகள் பணியும்படி அறத்தையே விரும்பி
விளங்கிய, வீரத்தை விரும்பிய கொள்கையை, விளங்குகின்ற
செவ்விய நாவினாலும்,
நாவிற்
(10) பாடிய (12) என இயையும்.
11.
இழிவு மிகாத கவலையில்லாத மனத்தாலும் ; உவலை -
இழிவு: “உவலைச் சமயங்கள்” (திருவா.) “சிறுமனிச
ருவலையாக்கை”
(திருவாய்மொழி 1. 5 : 8)
12-3.
மெய்ம்மறையாற் பாடிய நல்லிசையையுடைய
கபிலனென்னும் புலவர் பெற்ற ஊரினும் பல ஆகும். நல்லிசைக்
கபிலன்: “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறநா.
53 : 12).
கபிலன் பெற்ற ஊரென்றது செல்வக் கடுங்கோ வாழியாதன் நன்றா
வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம்
காட்டிக்கொடுத்த ஊர்களை.
இட்டவேல்
(4) ஊரினும் பல (13) என முடிக்க. பகைவர் இட்ட
வேல் இன்ன பொருளினும் பல வென்றல்: “இன்முகங் கரவா
துவந்துநீ யளித்த, அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க் குடகட
லோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே”
(புறநா. 130 : 4 - 7) (5)
1உயர்திணைப்
பெயரிடத்து ஒழியாது வரவேண்டுமென்பது
விதியாதலின் இங்ஙனம் கூறினார்.
2இட்டவென்பதற்கேற்ப
வலித்தல் விகாரம் பெற்றது.
3ஓக்கம்
- ஓங்குதல் : மலைக்குரிய ஓங்கலென்னும்
பெயர்ப்பொருள் இங்கு அறியத்தக்கது.
4சூடப்படும்
நறவம்பூவும் உண்மையின் சூடாநறவு மதுவிற்கு
ஆயிற்று.
5நனவு
- மெய்ம்மை (புறநா. 41
: 11, உரை)
|