86.
|
உறலுறு
குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை
வென்வேற் பொறைய னென்றலின் வெருவர
வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான் |
5
|
நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்
தில்லோர் புன்கண் டீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சிற்
பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும் |
10
|
புனல்பாய்
மகளி ராட வொழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே. |
இதுவும்
அது. பெயர் - வெந்திறற் றடக்கை (2)
(ப
- ரை) 1. உறலுறுகுருதியென்றது நிலத்திலே உறுதல்
மிக்க
குருதி யென்றவாறு.
‘உறலுறு’
(1) என்பது முதலாக முன்னின்ற அடைச்சிறப்பான்
இதற்கு, ‘வெந்திறற் றடக்கை’ (2) என்று பெயராயிற்று.
5.
நிலைஇயவென்றது ஈண்டு வினையெச்சம்.
12.
வருவானியென்றது வினைத்தொகை. வானியென்பது ஓர்யாறு.
இளஞ்சேரலிரும்பொறையை
எல்லாரும் வெருவரச் (3)
செருக்களம் புலவக் (1) கொன்றமர்க்கடந்த தடக்கைப் (2)
பொறையனென்று சொல்லுகையாலே, (3) யான் அவனை
வெப்பமுடையான் ஒருமகனென்று முன்பு கருதினேன்; அஃது
இப்போது கழிந்தது (4) ; அப்பொறையனாகிய பாடுநர் புரவலன்,
ஆடுநடையண்ணல் யான் தன்னொடு கலந்திருந்தவழித் தன்னாட்டு
(8) வானியென்னும் யாற்றுநீரினும் (12) சாயலனாயிருந்தான்றான் (13)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வன்மைமென்மைச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-3.
நிலத்திலே உறுதல் மிக்க இரத்தத்தால்
போர்க்களம் புலால் நாற்றம் வீசும்படி பகைவர் சேனையை கொன்று
போரிடத்தில் வஞ்சியாது எதிர்நின்று வென்ற கொடிய திறலையுடைய
பெரிய கையையும் வெற்றியைத் தரும் வேலையும் உடைய
சேரனென்று உலகத்தார் சொல்லுதலால் அச்சம் பொருந்துதல் வர.
4.
வெம்மையையுடைய ஆண்மகனென்று முன்பு
எண்ணியிருந்தேன்: அஃது இப்பொழுது நீங்கிற்று ; மன் :
கழிவுப்பொருளில் வந்தது.
5.
நல்ல புகழை நிலைநாட்டும்பொருட்டு, அகன்ற
இடத்தையுடைய உலகத்தில்.
6-8.
பொருளில்லாதவருடைய துன்பம் நீங்கும்படி பொருளைக்
கொடுக்கும், தருமத்தையே ஆராய்தல் மிக்க அன்பையுடைய
மனத்தால் பாடுவோரைப் புரத்தலில் வல்லவன்; பிறரை
வெல்லுதலைப்பெற்ற ஒழுக்கத்தையுடைய தலைவன் ; ஆடு - வெற்றி.
9.
ஓடக்கோல் நிலைபெறுதல் இல்லாத ஆழமான
இடத்தின்கண்ணாயினும், “கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்”
(அகநா. 6 : 6)
10-11.
நீரிற் பாய்ந்த மகளிர் ஆடுதலால், அவர் காதினின்றும்
கழன்ற பொன்னாற் செய்த அழகிய குழை யென்னும் அணி மேலே
தெரிதற்கு இடமான ; புனலாடு மகளிர் குழை கழலுதல் :
“வண்டலாயமொ டுண்டுறைத் தலைஇப், புனலாடு மகளி ரிட்ட
பொலங்குழை” (பெரும்பாண். 311 - 2 )
12-3.
சந்தனமரம் வருகின்ற வானியென்னும் ஆற்றுநீரினும்
நிச்சயமாகப் பொறையன் இனிய தண்ணிய மென்மையை யுடையான்.
ஆறு சந்தனமரம் கொணர்தல் : “அகிலு மாரமும், துறைதுறை
தோறும் பொறையுயிர்த் தொழுகி “ (பொருந.
238 - 9)
நீரினும்
இனிய சாயல் ; ஈர முடைமையி னீரோ ரனையை”
(பதிற். 90 : 14) ; “நீரினும் இனிய சாயற்,
பாரி” (புறநா. 105 :7 - 8.்
குறிப்புரை)
(பி
- ம்) 2. அமர்கடந்த. (6)
|