88.
|
வையக
மலர்ந்த தொழின்முறை யொழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய வொன்னார் தேயத் |
5
|
துளங்கிருங்
குட்டந் தொலைய வேலிட்
டணங்குடைக் கடம்பின் முழுமுத றடிந்து
பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி யண்ட ரோட்டிச் |
10
|
சுடர்வீ
வாகை நன்னற் றேய்த்துக்
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ
டுருகெழு மரபி னயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக |
15
|
வியலுளை
யரிமான் மறங்கெழு குருசில்
விரவுக்கணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிறு வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயி லலைத்த கல்கால் கவணை
நாரரி நறவிற் கொங்கர் கோவே |
20
|
உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்
வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயிற்
றுவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய |
25
|
புனன்மலி
பேரியா றிழிதந் தாங்கு
வருநர் வரையாச் செழும்பஃ றாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பட் |
30
|
புகன்ற
மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை |
35
|
அருவி
யருவரை யன்ன மார்பிற்
சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ
மாகஞ் சுடர மாவிசும் புகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே |
40
|
உறுகா
லெடுத்த வோங்குவரற் புணரி
நுண்மண லடைகரை யுடைதரும்
தண்கடற் படப்பை நாடுகிழ வோயே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - கல்கால் கவணை (18)
(ப
- ரை) வையகம் மலர்ந்த தொழிலென்றது வையகத்திற்
பரந்த அரசர் தொழிலென்றவாறு.
தொழின்முறை
ஒழியாது (1) கொற்றமெய்திய (14) என முடிக்க.
2. கடவுட் பெயரிய
கானமென்றது விந்தாடவியை.
கடவுளென்றது ஆண்டு உறையும் 1கொற்றவையினை. கடவுளினென
விரிக்க. கல்லுயரவெனத் திரிக்க.
12. அயிரையென்றது 2அயிரைமலையுறையும் கொற்றவையினை.
18. 3கல்
கால் கவணையென்றது கற்களைக் கான்றாற்போல
இடையறாமல் விடும் கவணென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, ‘கல்கால்கவணை’ என்று பெயராயிற்று.
23. துவைத்த
தும்பையென்றது எல்லாராலும் புகழ்ந்து
சொல்லப்பட்ட தும்பைப்போரென்றவாறு.
4நனவுற்றுவினவும்
(23) தெய்வம் (24) என்றது அத்தும்பைப்
போரை நினக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும்
கொற்றவையென்றவாறு.
தெய்வத்துக்
கூட்டமுன்னிய (24) யாறு (25) என்றது
அத்தெய்வம் கூடியுறைதலையுடைய அயிரைமலையைத் தலையாகக்
கொண்டு ஒழுகப்பட்ட யாறென்றவாறு. தெய்வம்
கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப்பட்டது.
25. இழிதந்தாங்கென்றது
அவ்வியாறு மலையினின்று இழிந்தாற்
போலவென்றவாறு.
சிறப்ப (27)
விளங்குதி (38) என முடிக்க.
30. பொறியென்றது
உத்தம இலக்கணங்களை. பொறியோடு
சாந்தமொடுவென ஒடுவை இரண்டற்கும் கூட்டியுரைக்க. ஒடு:
5வேறு வினையொடு. 31. கோதையென்றது முத்தாரத்தினை.
சூடிச் சுமந்து
(31) என்னும் வினையெச்சங்களை வரையன்ன
(35) என்பதனுள் அன்னவென்பதனொடு முடிக்க.
விற்குலைஇ (32)
வேங்கை விரிந்து (34) என்னும்
வினையெச்சங்களைத் திரித்து வில்குலவ வேங்கைவிரியத்
திருமணிபுரையும் (32) உருகெழுகருவிய பெருமழை சேர்ந்து (33)
விசும்புறு சேட்சிமை (34) அருவியருவரை (35) என மாறிக்கூட்டி,
இதனை 6குறைவுநிலையுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு
வேங்கைப்பூ உவமமாகவும் கோதைக்குத் திருவில் உவமமாகவும்
பூணிற்கு அருவி உவமமாகவும் சாந்திற்கு உவமமில்லையாகவும்
உரைக்க. இவ்வாறு இடர்ப்படாது மலையை உரைப்பினும்
அமையும்.
38. விளங்குதியென்பது
ஈண்டு முன்னிலையேவல்.
40. உறுகால்
எடுத்த புணரியெனக் கூட்டுக.
பெரியோர் மருக (14), மறங்கெழு குருசில் (15), கொங்கர்
கோவே (19), பொலந்தேர்க் குருசில் (20), தொண்டியோர் பொருந
(21), பெரும (22), சேயிழை கணவ (36), நாடுகிழவோய் (42), ஈங்கு
நிற்காண்கு வந்தேன் (39); நீ நீடு வாழ்வாயாக (22) ; பல தாரம் (26)
கொளகொளக் குறையாமற் சிறப்ப (27) மகளிர்நாப்பட் (29) பன்னாள்
ஞாயிறுபோல விளங்குவாய் (38) என மாறிக்கூட்டி வினைமுடிவு
செய்க.
இதனாற் சொல்லியது
அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச்
சிறப்பும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1, பூமியில் பரவிய அரசர்க்கு உரிய தொழிலின்
முறையில் தவறாமல்.
2. விந்தையென்னும்
கடவுளால் பெயர்பெற்ற காட்டோடு
கல்லுயரும்படி ; கடவுளென்றது துர்க்கையை ; விந்தாடவி :
“மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத் தடவி” (பெருங்.
5. 3 : 52).
உயர்ந்து - உயர; எச்சத்தி்ரிபு.
3-4. தெளிந்த
கடல் வளைந்த அகன்ற இடத்தையுடைய
உலகத்தில்்தம் பெயர் திசைகளில் சென்ற பகைவர் அழியும்படி.
5. காற்றால்
அசைகின்ற பெரிய கடலரணினது வன்மை
கெடும்படி வேலை ஏற்றி நடப்பித்து; “வயங்குமணி யிமைப்பின்
வேலிடுபு, முழங்கு திரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே”,
“கடலிகுப்ப வேலிட்டும்” (பதிற். 45 :
21-2, 90 : 20). 6.
தெய்வத்தன்மையையுடைய கடம்பமரத்தின் அடியை வெட்டி
(பதிற். 11 : 12-3, உரை)
7. போர் செய்தற்குக்
காரணமான வன்மையை அடைந்த
கழுவுளென்பான் புறங்கொடுத்து ஓடுதலைப்பெற்று. கழுவுள் ; பதிற்.
71 : 17, உரை. 8. அச்சத்தையுடைய அரசர் உடல் துண்டாகும்படி
அழித்து.
9. காலால் விரைந்து
செல்லுதலில் வல்ல குதிரைகளையுடைய
இடையரை ஒட்டி. 10. ஒளிவிடும் பூக்களையுடைய வாகையென்னும்
காவல் மரத்தையுடைய நன்னனை அழித்து. நன்னனும் வாகை
மரமும் : பதிற். 40 : 14-5, உரை.
12 : பதிற். 90 : 19.
11 - 2. பகைவரது
இரத்தத்தைத் தெளித்துக் கலந்த
திரட்சியையுடைய சோற்றின் பிண்டங்களால் அச்சம் பொருந்திய
இயல்பினையுடைய அயிரைமலையிலுள்ள துர்க்கையை வழிபட்டு.
அயிரைமலையிலுள்ள துர்க்கை: பதிற்.
3-ஆம் பதிகம், 8; 79 : 17-8;
90 : 19. குருதி கலந்த சோற்றை மடையாக அளித்தல்: பதிற்.
30 : 37, 79 : 16 - 7.
13-4. முடியுடைய
அரசரும் குறுநிலமன்னரும் வழிபட்டு
வணங்கும்படி வெற்றியை யடைந்த பெரியோரது வழியில் உள்ளாய்.
ஒழியாது (1)
எய்திய மருக (14) என முடிக்க.
15. அகன்ற பிடரிமயிரையுடைய
சிங்கத்தைப்போன்று வீரம்
பொருந்திய தலைவனே; “அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்”
(பட்டினப். 298)
16. ஒன்றோடொன்று
கலத்தலையுடைய முரசுகள் ஒலிக்கின்ற,
வரிசையாக அமைத்த கேடக வரைப்பினையும்.
17. உலாவுதலையுடைய
களிற்றினிடத்தே வெல்லும் கொடிகள்
அசையும் பாசறையையும்.
16-7.முழங்கும்
பாசறை, வரைப்பிற் பாசறை, நுடங்கும்
பாசறையெனத் தனித்தனியே இயைக்க.
18-9. பகைவரது
அரிய மதிலை வருத்திய கல்லைக்
கக்கினாற்போல வீசும் கவணையும், நாரால் அரிக்கப்பட்ட
கள்ளையுமுடைய கொங்கு நாட்டிலுள்ளார்க்குத் தலைவனே.
நாரரி நறவு :
பதிற். 11 : 15, உரை.
20. மாறுபடுவோரைக்
கெடுத்த, பொன்னாற் செய்த
தேரையுடைய தலைவனே. 21. வளைந்த கடலின் ஒசையாகிய
முழவினையுடைய தொண்டியென்னும் கடற்றுறைப்
பட்டினத்துள்ளார்க்குத் தலைவ. ஐங்குறு.
171 : 3; புறநா.
17 : 13, 48 : 4.
பொருநன் - தான்
பிறர்க்கு உவமிக்கப் படுபவன். தொண்டி
- மேல் கடற்கரையிலுள்ளதும் சேரர்க்குரியதுமான ஓரூர்.
22. பெருமையை
யுடையாய், நீ நெடுங்காலம் வாழ்வாயாக.
22-4. நின்னிடத்து,
எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்டதும்
பைப்போரில் மெய்ம்மையுற்று நினக்கு வெற்றி தருதற்கு வினவுகின்ற,
மாற்றுதற்கு அரிய துர்க்கையென்னும் தெய்வம் கூடிவாழ்தலையுடைய
அயிரைமலையினின்றும் தோன்றிய. 25. நீர்மிக்க பேரியாறு என்னும்
பெயரையுடைய ஆறு பூமியிலே இறங்கினாற்போல.
26. நின்பால்
இரத்தற்பொருட்டு வருவோர்க்கு எல்லையில்லாது
கொடுக்கும் செழுமையான பல பண்டம்.
27. கொள்ளக்
கொள்ளக் குறையாமல் இடந்தோறும் மிகும்படி.
28-9. சித்திரத்தைப்போன்ற
அழகையுடைய, பகைவர்க்கு அச்சம்
பொருந்திய நீண்ட அரண்மனையில், கொல்லிப்பாவையைப் போன்ற
வடிவழகையுடைய மகளிரது நடுவே (பதிற்.
61 : 3 - 4)
சேரனுக்குச் சூரியனை
(38) உவம கூறினமையின் மகளிருக்கு
நெருஞ்சிப்பூவை உவமையாகக் கொள்க (பெருங்.
2. 4 : 14 - 5)
30. நூல்களிற்
சொல்லிய மாட்சிமைப்பட்ட மூன்று
வரிகளோடும், விளங்கிய சந்தனத்தோடும்: “வரையகன் மார்பிடை
வரியுமூன்றுள” (சீவக. 1462). சாந்தமொடு
என்பதிலுள்ள ஒடுவைப்
பொறியென்பதனோடும் கூட்டுக. மார்பிற் பொறியும் சந்தனமும் :
பதிற். 48 : 11 - 2, உரை.
31. குளிர்ந்த
ஒளி பரவுகின்ற முத்தமாலையைச் சூடி, பேரணி
கலங்களை அணிந்து. கமழ்தல்: பரவுதல் என்னும் பொருளது;
“வியலிடங்கமழ, இவணிசை யுடையோர்க் கல்லது” (புறநா.
50 : 13-4)
என்புழிப்போல.
32-3. இந்திரவில்லை
வளைத்து அழகிய நீலமணியைப் போன்ற
நிறம் பொருந்திய, மின் முதலிய தொகுதிகளையுடைய பெரிய மேகம்
சேரப்பெற்று.
32-5. திருவில்
தோற்றுதலும், திருமணி புரைதலும்
மேகத்திற்குரியன. மழை சேர்தலும், வேங்கை மலர்தலும்.
அருவியுடைமையும் மலைக்குரியன.
34-6. வேங்கைப்பூக்கள்
மலரப் பெற்று, ஆகாயத்தைப்
பொருந்தும் உயர்ந்த சிகரங்களையும், அருவிகளையும் உடைய அரிய
மலையைப் போன்ற மார்பினையுடைய, நெடுந்தூரத்தே விளங்குகின்ற
நல்ல இசையையுடைய சிவந்த ஆபரணங்களை அணிந்தோளுடைய
கணவ. சேணாறு நல்லிசை : மதுரைக்.
209 ; புறநா. 10 : 11.
சேயிழை கணவ: அனைத்தும் ஒரு பெயர்.
37-8. பூமிக்கும்
சுவர்க்கத்துக்கும் நடுவேயுள்ள இடம்
ஒளியடையும்படி, பெரிய ஆகாயத்தில் உயர்ந்து செல்லும்
சூரியனைப்போலப் பல காலம் விளங்குவாயாக. மாகம் : பரி.
1 : 47,
பரிமேல்.
39. யான் இவ்விடத்தே
நின்னைப் காண்பேனாகி வந்தேன்.
40-42. மிக்க
காற்று எழுப்பிய ஓங்கிவருதலையுடைய அலை.
நுண்ணிய மணலையுடைய நீரையடைந்த கரையிடத்தே வந்து
உடைகின்ற, குளிர்ந்த கடற்பக்கத்தையுடைய நாட்டுக்கு உரியோய்.
மருக (14), குருசில்
(15), கோவே (19), பொலந்தேர்க் குருசில்
(20), பொருந (21), சேயிழை கணவ (36), யான் நின்னைக் காண்பேன்
வந்தேன் (39); சிறப்ப (27), மகளிர்நாப்பண் (29), ஞாயிறுபோல
விளங்குதி (38) என முடிக்க.
(பி
- ம்) 27. சிறந்து. (8)
1“விந்தியமலையிலுறைதல்பற்றித்
துர்க்கைக்கு விந்தையென்று
ஒரு பெயர் வழங்கும்.
2பதிற்.
3-ஆம் பதிகம்; 79 : 18, 90 : 19.
3“கல்லுமிழ் கவண்”
(சிலப்.
15 : 208) என்பது
பொறிவகைகளுள் ஒன்று.
4நனவு - மெய்ம்மை
(பதிற்.
85 : 12, உரை.)
5பொறிக்கும் சந்தனத்திற்கும்
தொழிலின்மையின் வேறுவினை
ஒடுவாயிற்று.
6“மிகுதலுங் குறைந்தலு
தாழ்தலு முயர்தலும், பான்மாறுபடுதலும்
பாகுபா டுடைய” (தண்டி,
32) |