90.
|
மீன்வயி
னிற்ப வானம் வாய்ப்ப
அச்சற் றேம மாகி யிருடீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத்
துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக் |
5
|
கழிந்தோ
ருடற்றுங் கடுந்தூ வஞ்சா
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி |
10
|
மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தர
வாள்வலி யுறுத்துச் செம்மை பூஉண்
டறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறன்மருக
ஈர முடைமையி னீரோ ரனையை |
15
|
அளப்பரு மையி னிருவிசும் பனையை
கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை
பன்மீ னாப்பட் டிங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபி னயிரை பரவியும் |
20
|
கடலிகுப்ப
வேலிட்டும்
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய
கொற்றத் திருவி னுரவோ ரும்பல் |
25
|
கட்டிப்
புழுக்கிற் கொங்கர் கோவே
மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே
எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீ்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய |
30
|
விரவுமொழிக்
கட்டூர் வயவர் வேந்தே
உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு
மாண்வினைச் சாப மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின் |
35
|
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிந்து
விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும |
40
|
வீங்குபெருஞ்
சிறப்பி னோங்குபுக ழோயே
கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற்
பழன மஞ்ஞைமழைசெத் தாலும்
தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் |
45
|
கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச்
செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக்
காவிரிப் படப்பை நன்னா டன்ன
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை |
50
|
வண்டார்
கூந்த லொண்டொடி கணவ
நின்னாள், திங்க ளனைய வாக திங்கள்
யாண்டோ ரனைய வாக யாண்டே
ஊழி யனைய வாக வூழி
வெள்ள வரம்பின வாகென வுள்ளிக் |
55
|
காண்கு
வந்திசின் யானே செருமிக்
குருமென முழங்கு முரசிற்
பெருநல் யானை யிறைகிழ வோயே. |
துறை
- காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் - வலிகெழு தடக்கை (33)
(ப
- ரை) 2. அச்சமென்பது கடைக்குறைந்தது. இருள்
-
துன்பம்.
3.
தோன்றி இன்பம் பெருகவெனக் கூட்டுக.
3-4.
தந்துணைத் துறையென்றது பார்ப்பார் முதலாயினார்
தத்தமக்கு அளவான துறைநூல்களை. 4. கற்றென்றதனைக்
கற்கவெனத் திரிக்க.
5.
கழிந்தோர் - வலியின் மிக்கோர். 7. தந்தென்றது
இடவழுவமைதி.
9.
வையத்துப் பகலாற்றியென்றது வையத்தார்கண்ணே நடுவு
நிலைமையைச் செய்தென்றவாறு.
11.
செம்மைபூண் டென்றதுசெவ்வையைத் தான்பூண்டென்றவாறு.
12.
அறனென்றது அறக்கடவுளை. நன்காண்டவென்றது
வலித்தது.
20.
கடலிகுப்பவென்றது கடலைத் தாழ்க்கவேண்டியென்றவாறு.
அருப்பம்
வௌவி (22) மிடல் சாய்த்து (21) எனக்கூட்டுக.
23.
பெயரென்றது பொருளை.
25.
கட்டிப்புழுக்கு - கட்டியொடு கூட்டின அவரைப்பரல்
முதலான புழுக்கு. 26. மட்டப்புகா - மதுவாகிய உணவு.
27.
எழாத் துணைத்தோள் - போரில் முதுகிட்டார்மேற்
செல்லாத இணை மொய்ம்பு. 33. ஞாண் பொர - நாண் உரிஞுதலால்.
இவ்வடைச்சிறப்பானே
இதற்கு, ‘வலிகெழு தடக்கை’ என்று
பெயராயிற்று.
மொய்ம்பினையுடைய
(34) தடக்கை (33) என மாறிக் கூட்டுக.
35.
பாண்டிலென்றது பாண்டிலையுடைய பக்கரையை.
காழெஃகம்
பிடித்தெறிந்தும் (37) விழுமத்திற் புகலும் (38)
என்றதற்குப் பகைவரென்னும் பெயரை வருவித்து, காம்பையுடைய
வேலைப் பிடித்தெறிந்து அப்பகைவர்க்கு இடும்பை செய்கையிலேயே
விரும்புமென்றவாறு.
ஆலும்
(42) நாடு (47) என முடிக்க.
45.
ஏறு மாறு சிலைப்பவென்றது ஏறுகள் ஒன்றற்கொன்று
மாறாக முழங்கவென்றவாறு.
நன்னாடன்ன
(47) ஒண்டொடி (50) என முடிக்க.
மருக
(13), உம்பல் (24), கொங்கர் கோவே (25), குட்டுவரேறே
(26), பூழியர் மெய்ம்மறை (27), மரந்தையோர் பொருந (28), வயவர்
வேந்தே (30), வயவர்பெரும (39), ஓங்குபுகழோய் (40), ஒண்டொடி
கணவ (50), இறைகிழவோய் (57), ஈரம் உடைமையின் நீரோரனையை
(14) அளப்பருமையின் விசும்பனையை (15); கொள்ளக்
குறைபடாமையின் முந்நீரனையை (16); பூத்த சுற்றமொடு பொலிந்து
தோன்றுதலையுடையை (18); ஆதலால் நினக்கு அடைத்த நாட்கள்
உலகத்தில் திங்களனையவாகவென்றும் நின்னுடைய திங்கள் (51)
யாண்டனையவாக வென்றும் நின்னுடையாண்டு (52)
ஊழியனையவாகவென்றும் நின்யாண்டிற்கு ஒப்பாகிய அப் பல்லூழி
தம் அளவிற்பட்டபலவாய் நில்லாது (53)
வெள்ளவரம்பினவாகவென்றும் நினைத்து (54) நின்னைக்
காண்பேன்வந்தேன் (55) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் தண்ணளியும் பெருமையும்
கொடையும் சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று.
‘ஒளிறு’
(6) என்பது முதலாக நான்கடியும், ‘அறன்வாழ்த்த’ (12)
என்பது முதலாக இரண்டடியும், ‘கடலிகுப்ப’ (20) என்பது முதலாக
இரண்டடியும், ‘காழெஃகம் பிடித்தெறிந்து’ (37) என ஓரடியும்
வஞ்சியடியாக வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.
‘நின்னாள்’
(51) என்பது கூன்.
(கு
- ரை) 1. நட்சத்திரங்கள் தாம் இருத்தற்குரிய
இடங்களிலே
இருப்ப அதனால் மழை பருவம் பெய்யாமற்காலத்திற் பெய்ய’’
‘’வியனாண்மீனெறி யொழுக’’ (மதுரைக். 6)
2.
உயிர்க்கு அச்சம் இல்லாமல் காவலாகித் துன்பம் தீர்ந்து:
‘’அச்சமறியா தேம மாகிய, மற்றை யாமம்’’ (மதுரைக்.
652-3) அச்சு:
அச்சமென்பதன் கடைக்குறை; ‘’நகையச் சாக நல்லமிர்து கலந்த’’
(பரி. 3 : 33); ‘’அச்சா றாக வுணரிய வருபவன்’’
(கலித். 75 : 20)
3-4.
இன்பம் உண்டாகிப் பெருகும்படி அந்தணர் முதலியோர்
தமக்கு அளவான துறைநூல்களைக் குறையாதபடி நிறையக் கற்று.
சேரநாட்டில் கல்வி நிறைந்ததைக் கூறியபடி. 8. மு. மதுரைக்.
72, 124.
5-8.
வன்மையில் மிக்கோர் போர்செய்யும் மிக்க வன்மைக்கு
அஞ்சாத, விளங்குகின்ற வாளையுடைய வலிய அரசர்
ஆண்யானைகளோடு அணிகலன்களைத் திறையாகக் கொடுத்துத்
தம்முடன் பழமையைச் சொல்லி நீ ஏவிய தொழிலைச்செய்ய.
களிறொடு கலம் தருதல்: ‘’இருங்கண் யானையொ டருங்கலத்
துறுத்துப் பணிந்துவழி மொழிதலல்லது’’ (தொல்.
புறத். 6, இளம்.
மேற்.)
9.
அகன்ற பூமியில் நடுவுநிலைமையைச் செய்து; பகல் - நடுவு
நிலைமை; ‘’நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்’’
(பட்டினப்.
206 - 7). 10. அழியாத பலவகையான புகழ் அகன்ற
ஆகாயத்திலே பரவ. பல்புகழ்: பதிற். 12
: 8, உரை. ஊர்தல் -
பரத்தல்; ‘’அழலம்பூ நறவார்ந் தழலூர்தர’’ (சீவக.
939)
11-3.
வாளின் வலியைப் பகைவரிடத்தே உறுவித்துச்
செவ்வையை மேற்கொண்டு, அறக்கடவுள் வாழ்த்தும்படி நன்கு
ஆண்ட வெற்றியையுடைய மாந்தரனென்னும் சேரவரசனது,
விறலையுடைய வழித்தோன்றலாக உள்ளாய். விறலென்றது பிறரினும்
மேம்பட்டுத் தோன்றுதல்; ‘’விறன்மலை’’ (கலித்.
8 : 6)
14.
அன்புடைமையினால் நீரோடு ஒத்தனை. 15. நின் சூழ்ச்சி
அளப்பதற்கு அருமையின் பெரிய ஆகாயத்தைப் போன்றனை (புறநா.
2 : 2-7);‘’விசும்பி னன்ன சூழ்ச்சி’’ (தொல்.
உவம. 6,பேர்.மேற்)
16.
என்றும் வறியோர் தாமே கொள்ளச் செல்வம்
குறைபடாமையால் மேகம் முகந்துகொள்ளக் குறைபடாத
கடலைப்போன்றாய் (பதிற். 45 : 19 -
22, 88 : 26-7;
மதுரைக். 424-5)
வீரரும்
வறியோரும் கொள்ளவும் செல்வம் குறையாமை:
‘’கன்றும் வயவ ரினங்கள் பலகவர்ந்தும், என்றும் வறிஞ
ரினங்கவர்ந்தும் - ஒன்றும் அறிவரிதா நிற்கு மளவினதா லம்ம,
செறிகதிர்வேற் சென்னிதிரு’’ (தண்டி. 72,
மேற்)
17-8.
பல நட்சத்திரங்களுக்கு நடுவே சந்திரனைப்போலப்
பொலிவு பெற்ற சுற்றத்தோடு விளங்கித் தோன்றுதலை யுடையை.
பூத்த சுற்ற மென்றது இயலிசை நாடகங்களாலும் இனிய
வார்த்தைகளாலும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் மகளிர் திரளை;
கலை நிறைந்தமை பற்றிச் சேரனுக்குத் திங்கள் உவமையாயிற்று
(சிறுபாண். 220, ந); ‘’பன்மீ னடு வட்டிங்கள்
போலவும், பூத்த
சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி ‘’ (மதுரைக்.
769-70);
‘’கோன்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்றமொத்தே’’ (சீவக.
882)
19.
அச்சம் பொருந்திய இயல்பினையுடைய அயிரைமலையில்
எழுந்தருளியிருக்கும் துர்க்கையை வழிபட்டும். 20. கடலின்
வன்மையைத் தாழ்க்கவேண்டி வேலை ஏற்றி நடப்பித்தும்.
21-2.
மலையிலுள்ளனவும், மருத நிலத்திலுள்ளனவும் ஆகிய
அரண்களைக் கைப்பற்றி, மாறுபட்டோருடைய வன்மையைக்
கெடுத்தும். நிலம் - மருதநிலம்; ‘’அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி’’
(மதுரைக். 149)
23.
பெயர் பொருள் என்னும் பொருளில் வந்தது (பதிற்.
21 : 1, உரை); முருகு. 269, ந.; பெருங்.
1. 35 : 113, 3. 10 : 18.
23-4.
அவ்வரண்களிலே பெற்ற பெருமையுள்ள பொருள்களைப்
பரிசில் பெறுவார் பலருடைய கையிலே இருத்திய, வெற்றியால் வரும்
செல்வத்தையுடைய வலியோருடைய வழித்தோன்றலே.
25.
சர்க்கரைக் கட்டியோடு கூட்டின அவரை முதலியவற்றின்
விதையாகிய உணவினையுடைய கொங்கர்களுக்குத் தலைவனே.
26.
கள்ளாகிய உணவினையுடைய குட்டநாட்டிலுள்ளார்க்குத்
தலைவனே. மட்டம் - கள்; ‘’தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்’’
(பதிற். 42 : 12); ‘’மட்டம் பெய்த மணிக்கலத்
தன்ன, இட்டுவாய்ச்
சுனைய’’ (குறுந். 193 : 1 - 2)
27.
போரில் முதுகு காட்டி ஓடினார் மேல் செல்லாத
இனையான தோள்களையுடைய பூழிநாட்டார்க்குக் கவசம்போன்றாய்
(மதுரைக். 177,ந.)
பூழியர்
மெய்ம்மறை: பதிற். 73 : 9.
28.
ஒலிக்கின்ற நீர்ப்பரப்பினையுடைய மரந்தை
நகரத்திலுள்ளாருக்குத் தலைவனே. மரந்தை: ‘’குட்டுவன் மரந்தை’’
(குறுந். 34 : 6); ‘’குரங்குளைப் புரவிக்
குட்டுவன், மரந்தை
யன்னவென் னலந்தந்து சென்மே’’ (அகநா.
376 : 17 - 8).
பொருநன் - தான் பிறர்க்கு உவமிக்கப் படுவான். 29 : பதிற்.
15 : 9.
29-30.
வெள்ளிய பூவையுடைய வேளைச்செடியோடு
சுரைக்கொடி இடந்தோறும் கலப்பச்செய்த, பலவாக
வேறுபடுதலையுடைய மொழிகளையுடைய பாசறையிலுள்ள வீரர்க்கு
அரசே.
விரவுமொழிக்
கட்டூர்: ‘’விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக்
கொளீஇ’’ (அகநா. 212 : 14); ‘வேறுபல்
பெரும்படை நாப்பண்பாடை
வேறுபட்ட பலவாகிய பெரிய படைக்கு நடுவே’ (முலைப்.
43, ந.)
31.
கரையிலே வந்து உலாவுதலையுடைய கடலைப்போன்ற,
பகைவரால் தடுத்தற்கு அரிய சேனையோடு.
32.
மாட்சிமைப்பட்ட தொழிலையுடைய வில்லை மார்பிற்
பொருந்த வளைத்து.
33-4.
நாண் உராய்தலால் தழும்பு விளங்கிய வன்மை
பொருந்திய பெரிய கைகளையும் நீண்டு அலங்கரித்தாலொத்த
ஏந்திய திரண்ட தோள்களையு முடைய. ‘’வலிதுஞ்சு தடக்கை’’
(புறநா. 54 : 14); ‘’ஆவஞ்சேர்ந்த புறத்தை
தேர்மிசைச், சாவ
நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்........................வலிய
வாகுநின் றாடோய் தடக்கை’’ (புறநா. 14
: 8 - 11)
35-6.
நட்சத்திரங்கள் பூத்தாற்போன்ற விளங்குகின்ற
மணிகளையுடைய வட்டமான பக்கரையையும் மெல்லிய மயிரையுடைய
கவரியையும் அணிந்த குதிரையின் மேற்கொண்டு.
குதிரைக்குக்
கவரியணிதல்: ‘’முரசுடைச் செல்வர்புரவிச் சூட்டு,
மூட்டுறு கவரி தூக்கி யன்ன’’ (அகநா 156
: 1 - 2); ‘’ஒருதனிமா,
ஞாங்கர் மயிரணியப் பொங்கி,’ (பு. வெ.
90). 39. பதிற். 65 : 4.
37
- 9. காம்பையுடைய வேலைப் பிடித்து எறிந்து
பகைவர்க்குத் துன்பத்தைச் செய்தலில் விரும்பும் நீங்காத
ஆண்மையுடைய, நிலையாமை தம் நெஞ்சிலே மிக்க வீரர்க்குத்
தலைவனே.
காழெஃகம்:
மதுரைக். 739; மலைபடு.
129; புறநா. 354 : 2.
40.
உயர்ந்த பெரிய சிறப்பினையுடைய, மற்ற அரசரினும்
மேம்பட்ட புகழை யுடையோய். 41. உழவர் தண்ணுமை: அகநா.
40 : 13 - 4, 204 : 10; புறநா. 348 :
1.
41-2.
வயலிலுள்ள உழவர் தண்ணுமைப்பறையை வாசித்தால்,
பழனத்திலுள்ள மயில் அதனோசையை மேகத்தின் ஓசையென்று
எண்ணி ஆடும். ஆலும் (42) நாடு (47) என இயையும்.
43-4.
குளிர்ந்த நீரில் ஆடுவோரது முழக்கத்தோடு கலந்து,
கொடிய போரைச் செய்யும் வீரரது தெளிந்த தடாரிப்பறை ஒலிப்ப.
45.
சோற்றையுடைய நல்ல வீடுகளில் ஏறுகள் ஒன்றோடு
ஒன்று மாறாக முழங்க (மதுரைக். 672)
46-7.
செழுமையான பலவாக இருந்த கொழுவிய பல குளிர்ந்த
வயல்களையுடைய காவிரிப்பக்கத்தையுடைய நல்ல சோழ நாட்டைப்
போன்ற.
49.
ஆறிய கற்பு: ‘ஆறிய கற்பும் சீறிய கற்புமெனக் கற்பு
இருவகை’, (சிலப். பதிகம், 38 - 54, அடியார்.)
‘’ஆறிய
கற்பினடங்கிய சாயல்’’ (பதிற். 16 :
10). 50. ஒண்டொடி கணவ:
பதிற். 14 : 15. உரை.
48-50.
தொழில்வளம் பொருந்திய சிலம்பினையும், அடங்கிய
கொள்கையையும், அறக்கற்பினையும், தெளிவாக அறியப்பட்ட நல்ல
புகழையும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய ஒள்ளிய
தொடியை அணிந்தோளுடைய கணவனே.
51.
நின்வாழ்நாட்கள் மாதத்தைப்போன்றன வாகுக.
51-2.
மாதங்கள் ஆண்டைப்போன்இறு ஒரு தன்மையவாக.
52-3.
ஆண்டுகள் ஊழிப்போன்றன வாகுக.
53-4.
‘’ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலக மேழும்
ஏழும்வீ வுற்ற ஞான்று மின்றென விருத்தி யென்றாள்’’ (கம்ப.
உருக்காட்டு. 72); ஐங்குறு. 281 : 1.
53-5.
ஊழிகள் வெள்ளமென்னும் பேரெண்ணின் எல்லையை
யுடையனவாகுக என நினைத்து, யான் நின்னைக் காண்பேன்
வந்தேன்.
57.
இறைகிழவோய்; பதிற். 54 : 17.
55-7.
போர்க்களத்தில் மேற்பட்டு, இடியைப்போல முழங்கும்
முரசினையும், பெரிய நல்ல யானைகளையும் உடைய
இறையாதற்றன்மையை யுடையோய்.
(பி
- ம்) 27. திணித்தோள். 28. இலங்குநீர்ப்.
29. மயங்கிய.
34. வான்று புனைந்தன்ன. 37. காழ்மூழ்கப். (10)
இதன்பதிகத்து
விச்சி (4) என்பான் ஒரு குறுநிலமன்னன்.
வஞ்சி மூதூர்த் தந்து (9) என்றது அவர்களை வென்றுகொண்ட
பொருள்களை; பசுவும் எருமையும் ஆடுமென்பாரும் உளர்.
11-2.
அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசுமயக்கி
என்றது தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும்
அறநெறி அறிவானாகப் பண்ணியென்றவாறு.
|