பக்கம் எண் :

12

40நனிமுரல்வளை முடியழிபிழிபு
தலையிறுபு தாரொடு புரள
நிலைதொலைபு வேர்தூர்மடல்
குருகு பறியா நீளிரும் பனைமிசைப்
பலபதி னாயிரங் குலைதரை யுதிர்வபோல்
45நில்லா தொருமுறை கொய்பு கூடி
ஒருங்குருண்டுபிளந்து நெரிந்துருள்புசிதறு
பளறுசொரிபு நிலஞ்சோரச்
சேரா ரின்னுயிர் செகுக்கும்
போரடு குருசினீ யேந்திய படையே
50ஒன்னா ருடங்குண்ணுங் கூற்ற முடலே
பொன்னேர் பவிரழ னுடக்கத னிறனே
நின்னது திகழொளி சிறப்பிரு டிருமணி
கண்ணே, புகழ்சா றாமரை யலரிணைப் பிணையல்
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
55நோன்மை நாடி னிருநிலம் யாவர்க்கும்

40. ''முரறல்'' உயிருள்வழி அடையாய்வந்தது.

40 - 49. நின்றநிலையில்தொலைந்து வேரும் தூரும் மடலும் குருத்தும் பறியாதநீண்ட கரிய பனைமிசைப் பலபதினாயிரங்குலைகள்அதன் தலையினீங்கித் தரைக்கண் உதிர்வனபோலத்தலைகள் வலியழிந்து சாய்ந்து ஒன்றும் உடன்மிசைநில்லாமற் கொத்தாக இற்றுத் (பி - ம்.விதறித்)தரித்த தாரொடு புரளும்படி ஒரு காலத்திலே கொய்தல்பெற்றுஉடனே உருண்டு பிளந்து நெரிந்துபின் வேறுவேறாய்உருண்டு சிதறி அளறு சொரிந்து நிலத்தின்கட் சோரஅவுணருயிரைச் செகுக்கும், நீ ஏந்திய ஆழிப்படை.

43. பறியாப்பனை எனச் சினைவினைமுதன்மேனின்றது.

50. ஒன்னாரை உடங்குண்ணும் அப்படையின்உடல் கூற்றத்தையொக்கும்.

51. அதன் நிறம்,சுடுகின்ற பொன்னோடு எழுந்து விளங்குகின்ற அழல்நுடக்கத்தையொக்கும்.

52. நின் ஒளி, சிறப்பினையுடையஇருண்ட நீலமணியை ஒக்கும்.

53. நின் கண், தாமரையலர்இரண்டைப் பிணைத்தனை ஒக்கும்.

54. நின்வாய்மை, தப்பாது வருகின்ற நாளை ஒக்கும்.

55. நின்பொறை,நிலத்தையொக்கும்.

(பி - ம்.)44''தலைத்தரை'' 51 ''நுடக்கத்தினிறறெ'', ''நுடக்கினிறறெ''52 ''பிருட்டிரு''