பக்கம் எண் :

126

தார்வாரை யகலத்தவ் வேரணி நேரிழை
ஒளிதிகழ்தகை வகைசெறி பொறி
65புனைவினைப்பொலங் கோதை யவரொடு
பாக ரிறைவழை மதுநுகர்பு களிபரந்து
நாகரினல் வளவினை வயவேற நளிபுணர்மார்
காரிகைமது வொருவரினொருவர் கண்ணிற் கவர்புறச்
சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி
70உம்ப ருறையு மொளிகிளர்வா னூர்பாடும்
அம்பி கரவா வழக்கிற்றே யாங்கதை
காரொவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்
நீரொவ்வா வையை நினக்கு;
கனைக்கு மதிர்குரல் கார்வான நீங்கப்
75பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து

ஐம்புலன்களாலும் இன்பம்நுகர்தற்கு இடனாயிற்றென்றவாறு.

64-5. ஒளிதிகழாநின்ற கட்டுதல்வகைமை செறிந்த மூட்டுவாய் புனைந்த தொழிலையுடையஅரிமாலையென்க.

வினைத்தொகை அடுக்கு.

பரந்து (66) தெவி (69) என்னும்செய்தெனெச்சங்கள் கவர்புற (68) என்னும்வினைமுதல்வினைகொள்ள அச்செயவெனெச்சம்வழக்கிற்று (71) என்னும் பிறவினைகொண்டது.

71. ஆங்கு அதையென்பன அசை.

இத்துணையும் வையையைப்படர்க்கையாக்கிக் கூறி மேல் எதிர்முகமாக்கி.

72 - 3. வையாய்! இவ்வாறுகார்காலத்துக்கலங்கி வேனிற்காலத்துத்தெளிதலான் இந்நீர்மை எஞ்ஞான்றும்ஒத்திருக்கின்றதில்லை.

எனப் பழிப்பாள்போலப்புகழ்ந்து மேல் தைந்நீராடல் கூறுகின்றாள்:-

74-7. கார்வானம் அதிர்குரல்நீங்கப் பனிமிகுதலாற் குளிரால் நடுங்குதலையுடையமுன்பனிப்பருவத்து ஞாயிறுதெறாத கடைமாரியையுடையமார்கழிமாதத்துத் திங்கள் மறுவொடுநிறைந்ததிருவாதிரை நாளின்கண்.
_________________________

(பி - ம்.)64-5. ''பொறிபுனை'' 67''நனிபுணர்மார்''