பக்கம் எண் :

128

பொய்யாட லாடும் புணர்ப்பி னவரவர்
90தீயெரிப் பாலுஞ் செறுதவமுன் பற்றியோ
தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்
நீயுரைத்தி வையை நதி;
ஆயிடை மாயிதழ் கொண்டோர் மடமாதர் நோக்கினாள்
வேயெழில் வென்று வெறுத்ததோ ணோக்கிச்
95சாய்குழை பிண்டித் தளிர்காதிற் றையினாள்
பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்
குவளை குழைக்காதின் கோலச் செவியின்
இவள்செரீஇ நான்கு விழிபடைத்தா ளென்று
நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே
100கொற்றவைகோ லங்கொண்டோர் பெண்;
பவள வளைசெறித்தாட் கண்டணிந்தாள் பச்சைக்
குவளைப் பசுந்தண்டு கொண்டு;
கல்லகா ரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா வென்பாள்போ னெய்தற் றொடுத்தாளே
105மல்லிகா மாலை வளாய்;

93. ஆயிடை - அவராடுதற்கண்.

93 - 6. வேயழகைவென்று மிக்கதோளழகை........யு........நீலத்தைச் செவித்தாராகஅணிந்து ஒரு மடமாதைப் பார்த்தாள்; அவள்குறிப்பறிந்து அப்பொழுது அம்மாது குழைத்த பிண்டியதுசாய்ந்த தளிரைத் தன்காதின்கண் அணிந்தாள்;அணிகின்றாள் அப்பாய்குழையையுடையாள் அணிந்தநீலமெல்லாம் அத்தளிரின் செம்மையால்இளவெயிலாம்படி யணிந்தாள்.

97 - 8. குழைக்காதினையுடையகோலச்செவிக்கட் குவளையை இவள் செருகி.

99. திலகம் செம்மையால்நெருப்பாகிய நெற்றிவிழியாயிற்று.

100. கொற்றவை கோலங்கொண்டதுஅவற்றின் மிக்க விழி காட்டுதற்கு.

101 - 2. பவளவளையைக் கையிற்செறித்தாளொருத்தியைக் கண்டு வேறொருத்திகுவளைப்பூவினது மரகதம்போலும்பச்சைத்தண்டைக்கொண்டு தன் கையை யணிந்தாள்.

103. கல்லகாரம் - குளிரி. 104.நில்லென்பாள் போல்

இகவென்னுமசை இகாவெனஈறுதிரிந்தது.

104 - 5. வேறொருத்தி மல்லிகைமாலையின்கண் நெய்தலைவிரவித்தொடுத்தாள்.
____________________

(பி - ம்.)93 ''கொண்டுநேர்மடமாதர்'' 95 ''சாய்குழைப்பிண்டித்'' 101 ''டண்டணிந்தாள்''102 ''குவளைத்தண்டு'' 105 ''வாளாய்''