| ஆறிரு தோளவை யறுமுகம் விரித்தவை நன்றம ராயமோ டொருங்குநின் னடியுறை இன்றுபோ லியைகெனப் பரவுதும் | 70 | ஒன்றார்த் தேய்த்த செல்வநிற் றொழுதே. கடவுள் வாழ்த்து. நல்லச்சுதனார் பாட்டு. கண்ணகனார் இசை. பண் காந்தாரம். |
68-70. எமக்கு விரும்பின சுற்றத்தோடு கூடிநின் அடிக்கண் உறைதல் இன்றுபோல என்றும்இயைகவென்று பரவுதும். (பி - ம்.) 69 ''இன்றுபொலிகென'' குறிப்புரை 3. (மேற்.) ''தைப்பமை சருமத்து'' என்றதுசான்றோர் செய்யுட்கண் வடசொற் கிளவி சிதைந்துவந்தது (தொல்.எச்ச. 6 ந.); இ. வி.175. 7. போழ்புனையடையல்: ''''போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன்'''' (கண்ணப்ப தேவர் திருமறம்) 3-7. துவர்நீர்.....அடையல்: ''''குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம் துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கி'''' (திருநா. தே. சாய்க்காடு) 8. கொள்ளல் - மதித்தல்: உரை.அவுணருக்குத்துணையாக மதித்த மா: ''''சூருடை முழுமுதலென்றது சூரபன்மாத் தனக்கு அரணாகவுடைய மாவின் முதலென்றவாறு'' பதிற்.11 : 5 உரை. 9. புள்ளொடு பெயரிய பொருப்பு : 5 : 9-10 குறிப்புரை. 10. பரி.14 : 22. 11. பரி.5 : 81. 13. மத நாற்றத்திற்கு உவமையாகக் கூறப்படும் பூக்களையுடைய ஏழிலைப்பாலையும் இலகடமும் சூழியும் கூறப்பெற்றமையின் பரங்குன்றம் யானையாக உருவகஞ் செய்யப் பெற்றமை புலனாகின்றது. 16. 15 : 65-6. 18. சுடுபொன் ஞெகிழம் : ''''காலவை சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு பொடியழற் புறந்தந்த செய்வுறு கிண்கிணி'''' (கலித்.85 : 1-2) ''''யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே'''' (சிலப். 20 : 69) 20. நறாமகிழ்தட்ப : 21 : 57; குறள்1090. 19-20. இங்கே சொல்லப்பட்டது துடிக் கூத்து; 21 : 60-61 64; ''''கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம்பன்னாள் குறிக்கொண்டு- பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளை நின்றாடும் தொடுகழன் மன்னன் றுடி'''' (பு. வெ. 359) |