15 | .............லைத்தவ மணமுர செறிதரத் தானைத் தலைத்தலை வந்துமைந் துற்றுப் பொறிவி யாற்றுறி துவர்புகை சாந்தம் எறிவன வெக்குவ வீரணிக் கேற்ற நறவணி பூந்துகி னன்பல வேந்திப் | 20 | பிறதொழின.......ம் பின்பின் றொடரச் செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர் ஈரமை வெட்சி யிதழ்புனை கோதையர் தாரார் முடியர் தகைகெழு மார்பினர் மாவுங் களிறு மணியணி வேசரி | 25 | காவு நிறையக் கரைநெரி பீண்டி வேலாற்று மொய்ம்பனின் விரைமல ரம்பினோன் போலாற்று முன்பிற் புனைகழன் மைந்தரொடு தாரணி மைந்தர் தவப்பயன் சான்மெனக் காரணி கூந்தல் கயற்கட் கவிரிதழ் | 30 | வாரணி கொம்மை வகையமை மேகலை |
(பரி - ரை.) * * * * 18 - 9. ........ய நறவு. 19. ஆணி-ஆபரணம்.......... 20. பின்னே பின்னே தொடர முற்பட்டு. 21 - 2. மகளிர் செறிந்த தொடைத்தொழிலாற்பொலிந்த.....மாலையராய் வாடாமையமைந்த.........சக........கோதையராய். 23. மைந்தர் தாரார்ந்த முடியராய்ச் சுற்றிய மாலைபொருந்திய மார்பினராய். 24. வேசரி - கோவேறுகழுதை. 25. நெரிய ஈண்டி..........காவின்கண் நிறைய. 26 - 8. வேற்போரைச் செய்யும் மொய்ம்பினையுடையோனாகிய முருகனைப்போல ஆற்றலோடுகூடிய வலியினையும் புனைகழலையுமுடைய மைந்தரும் விரைமலரம்பினோனாகிய காமனைப்போலத் தாரையும் அழகினையுமுடைய மைந்தரும் செய்த தவத்துப்பயன் பெரிதென்று கண்டார் கூற. 29. கவிர் - முருக்கு. 30. கொம்மை - இளமுலை. வகைவகையாகக் கோத்த மேகலை. சான்மென (28) என்னும் வினையெச்சம். இனிய நகையினையும் (31) உடையவென இரண்டாவதனொடு விரிந்த பெயரெச்சவினை கொண்டது. |