பக்கம் எண் :

223

ஏரணி யிலங்கெயிற் றின்னகையவர்
சீரணி வையைக் கணிகொல்லோ வையைதன்
நீரணி நீத்த மிவர்க்கணி கொல்லெனத்
தேருநர் தேருங்காற் றேர்தற் கரிதுகாண்
35தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின்
மண்கணை முழவி னின்க ணிமிழ்விற்
கெதிர்வ பொருவி.......மேறுமா றிமிழ்ப்பக்
கவர்தொடை நல்யா ழிமிழக் காவிற்
புகர்வரி வண்டினம் பூஞ்சினை யிமிர
40ஊதுசீர்த் தீங்குழ லியம்ப மலர்மிசைத்
தாதூது தும்பி தவிர்பல வியம்ப
..........துடிச்சீர் நடத்த வளிநடன்
மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க
ஆங்கவை தத்தந் தொழின்மாறு கொள்ளும்
45தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையாற்
கோடுளர் குரற்பொலி யொலிதுய லிருங்கூந்தல்
..................... .... ................. புரைதீர் நெடுமென்
தோடாழ்பு தழைமலர் துவளா வல்லியின்

32 - 5. அவ்விருதிறத்தாரையும் கரையையும்வையையுஞ் சேர்கின்ற கட்புலனாகிய அழகு தேர்தற்குஅரிது.

காணென்பது (34) முன்னிலையசை.

36 - 7. மார்ச்சனையையுடைய முழவின் இனியகண்ணின் இமிழ்விற்கு எதிரேவிண்ணின்கட்டம்மிற்........மறாதினகண் உரும்ஏறுமாறாய் முழங்க.

38. கவர்தொடை - விரும்பப்படும்பாலைக்கோவை.

39. பூக்களையுடைய சினைக்கண்ணே இமிர.

தாளததி ..............னமகளிரா................நத.

42. வளியாகிய நடன்.

இவ்வாற்றான் ஆண்டுள்ள...............னொன்றோடொன்று மாறுகொள்ளு நதி........ ...........

46. கொத்துக்களாற் பொலிந்து தழைத்துஅசைகின்ற கரிய கூந்தலையுடைய.

47 - 8. பொருந்தியவிறை.............தோளிற்றாழ்ந்துதழையும்...........கொடி................................