பக்கம் எண் :

228

இருந்தகையூரமர்ந்த செல்வநின்
திருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுது (இதுதரவு)
ஒருசார் அணிமலர் வேங்கை மராஅ மகிழம்
பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி
மணிநிறங் கொண்ட மலை;

10

ஒருசார் தண்ணறுந் தாமரைப் பூவினிடையிடை
வண்ண வரியிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப
விண்வீற் றிருக்குங் கயமீன் விரிதகையிற்
கண்வீற் றிருக்குங் கயம்;
ஒருசார் சாறுகொ ளோதத் திசையொடு மாறுற்

15றுழவி னோதை பயின்றறி விழந்து
திரிநரு மார்த்து நடுநரு மீண்டித்
திருநயத் தக்க வயல்;
ஒருசார் அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி
விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித்
20திறத்திற் றிரிவில்லா வந்தண ரீண்டி
அறத்திற் றிரியா பதி;

(இவை நான்கும் கொச்சகம்)


ஆங்கொருசார் உண்ணுவ பூசுவ பூண்ப வுடுப்பவை
மண்ணுவ மணிபொன் மலைய கடல
பண்ணிய மாசறு பயந்தரு காருகப்
25புண்ணிய வணிகர் புனைமறு கொருசார்
விளைவதை வினையெவன் மென்புல வன்புலக்
களம ருழவர் கடிமறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனிகூடு மின்பம்
இயல்கொள நண்ணி யவை;

(இது கொண்டு நிலை)

30வண்டு பொரேரென வெழ
வண்டு பொரேரென வெழும்
கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக்
கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர

 

(பி - ம்.) 6 ''தொழுதே'' 8 ''சிவந்து'' 11 ''வண்டுண்வரி'' 13 ''கயல்'' 14 ''காறுகளோதத்திரையென'' 16 ''திரிதருமாரித்து நகரு'' 18 ''புரைதவம்'' 21 ''றிரியாப்பதி'' 28 ''ஆங்கு'' 32 ''கதர்வபிற்''