பக்கம் எண் :

229

மிளிர்மின் வாய்ந்த விளங்கொளி நுதலார்
35ஊர்களிற் றன்ன செம்ம லோரும்
வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத்
தொளியிழை யொதுங்கிய வொண்ணுத லோரும்
புலத்தோ டளவிய புகழணிந் தோரும்
நலத்தோ டளவிய நாணணிந் தோரும்
40விடையோ டிகலிய விறனடை யோரும்
நடைமட மேவிய நாணணிந் தோரும்
கடனிரை திரையிற் கருநரை யோரும்
சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரும்
மடையர் குடையர் புகையர்பூ வேந்தி
45இடையொழி வின்றி யடியுறையா ரீண்டி
விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும்
துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும்
இருகே ழுத்தி யணிந்த வெருத்தின்
வரைகெழு செல்வ னகர்;
50வண்டொடு தும்பிபும் வண்டொடை யாழார்ப்ப
விண்ட கடகரி மேகமொ டதிரத்
தண்டா வருவியொ டிருமுழ வார்ப்ப
அரியுண்ட கண்ணாரொ டாடவர் கூடிப்
புரிவுண்ட பாடலொ டாடலுந் தோன்றச்
55

சூடு நறவொடு காம மகிழ்விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப
இனைய பிறவு மிவைபோல் வனவும்
அனையவை யெல்லா மியையும் புனையிழைப்
பூமுடி நாகர் நகர்;

(இவையும் கொச்சகம்)

60மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி அவிர்நிமிர் புகழ்கூந்தற்

(பி - ம்.) 34 ''மின்மினிவாய்ந்த'' ''நுதலாளூர்'' 35 ''லோருமவ்வாய்'' 41 ''மேவுநாணிழந்தோரும்'' 42 ''கடனுரை'' 43 ''தொடர்மதிக்'' 47-8. ''புரைதாவிரு'' 51 ''கடதடமேகம்'' 54 ''டாறுந்தோன்ற'' 55 ''கூடு'' ''காமமுகிழ்'' 56 ''கூடா'' 60''மொலிபொலி''