| நின் சுரத்தலும் வண்மையு மாரியுள நின் புரத்தலு நோன்மையு ஞாலத்துள நின் நாற்றமு மொண்மையும் பூவையுள | | 30 | நின் தோற்றமு மகலமு நீரினுள நின் உருவமு மொலியுமா காயத்துள நின் வருதலு மொடுக்கமு மருத்தினுள அதனால் இவ்வு முவ்வு மவ்வும் பிறவும் ஏம மார்ந்தநிற் பிரிந்து | | 35 | மேவல் சான்றன வெல்லாம் சேவலோங் குயர்கொடி யோயே சேவலோங் குயர்கொடி நின்னொன் றுயர்கொடி பனை |
27. சுரத்தல் - கொடுக்கக் கொடுக்கப்பொருள் வளர்தல். வண்மை - கொடை. 28. புரத்தல் - தாங்குதல். நோன்மை- பொறை. 29. பூவை - பூவைப்பூ. 30. தோற்றம் - வெளிப்படுதல்.அகலம் - பெருமை. நாராயணனென்னும் திருநாமம் நீரின்கட்காணப்படுதலாகிய இக்காரணம்பற்றி வந்தது. 31. உருவம் - ஞானக்கண்ணாற் காணப்படும்உருவம் ஒலி - சொல்; ஆகாயத்துளவென்றார் அதன் பண்பாகலின். 32 வருதல் - அவதரித்தல் ஒடுக்கம்- மீண்டு சென்று அடங்குதல். மருத்து - காற்று 33-5. இவையும் உவையும் அவையும்பிறவுமாய் நின்கணின்று பிரிந்து நின்னால் ஏமமுற்றனவெல்லாம்பின்னும் நின்னொடு மேவலமைந்தன. என்றது உலகுயிர்களின் தோற்றமும்நிலைபேறும் ஒடுக்கமும் நின்கண்ணவென்றவாறாம். இவையென்றது நணியவற்றை; உவை யென்றதுஅவற்றிற் சேயவற்றை; அவையென்றது அவற்றினும் சேயவற்றை;பிறவென்றது காணப்படாதவற்றை. 37-42. சேவலோங்கு உயர்கொடியையுடையநின்னுயர்கொடி ஒன்று பனை. இவ்வண்ணம் பலகொடியுளவேனும்நின் ஒன்றாக உயர்ந்த கொடியை அக்கொடிகள் ஒன்றுதலின்று;தன்...................ம் பாம்பின் விடத்தையும் உடலையும்உயிரையும் உண்ணும் உவண மாதலால். (பி - ம்.)34 ''நிற்பிரிந்த'' |