| நின்னொன் றுயர்கொடி நாஞ்சில் | | 40 | நின்னொன் றுயர்கொடி யானை நின் ஒன்றா வுயர்கொடி யொன்றின்று விடமுடை யரவினுட லுயிருருங் குவணம் அவன் மடிமேல் வலந்தது பாம்பு பாம்புதொடி பாம்பு முடிமேலன | | 45 | பாம்புபூண் பாம்பு தலைமேலது பாம்புசிறை தலையன பாம்பு படிமதஞ் சாய்த்தோய் பசும்பூணவை கொடிமே லிருந்தவன் றாக்கிரை யதுபாம்பு கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும் | | 50 | கொடுமையுஞ் செம்மையும் வெம்மையுந் தண்மையும் உள்வழி யுடையை யில்வழி யிலையே போற்றா ருயிரினும் போற்றுந ருயிரினும் மாற்றே மாற்ற லிலையே நினக்கு மாற்றோ ரும்மிலர் கேளிரு மிலரெனும் |
41. ஒன்றாதல் - முதலாதல்; ஒன்றுதல்- ஒத்தல். 43. இன்னும் அது கடவுட்கொடியென்பதுதோன்ற''அவன் என உயர்திணையாற் கூறினார்; செய்யுளாகலிற்சுட்டுப்பெயர் முற்கூறப்பட்டது. 43. வயிற்றின்மேல் உதரபந்தமாய்வலந்தது. படியை மடியகத் திட்டான்(நான்மணிக். கடவுள்.) என்புழியும் வயிறு மடியெனப்பட்டது. 44. முடிமேலன - கண்ணிகள். 45. பூண் - கழுத்திற் பூண்பது. தலைமேலது- சூட்டு. 46. சிறகுகளின் தலையிடத்தன. விகாரத்தால்ஒற்றுக் குறைந்தது. 47. பகைவர் மதங்கெடுத்தோய்! பசும்பூணவை- பொன்னிறத்தவை. 48. தாக்கிரை - எறிந்தெடுக்கும்இரை. இதனாற் கருடனுக்கு அறனுடைமையும்மறனுடைமையும் கூறப்பட்டன. 49 - 54. கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும்அருளும் கோட்டமும் செப்பமுமாகிய இவை மறமும் அறமும்உடையாரிடத்து உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாயிருத்தலல்லதுமாற்றாருயிரின்கண்ணும் கேளிருயிரின் கண்ணும்அதனை மாற்றுதற்றொழிலும் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலுமுடையையல்லை; நினக்கு மாற்றோரும் கேளிரும் இலராதலான். (பி - ம்.)41 ''ஒன்றுயர்கொடி'' 42''லுயிர் நுங்குவணம்'' |