பக்கம் எண் :

38

அன்னோ ரல்லா வேறு முளவவை
65நின்னோ ரன்னோ ரந்தண ரருமறை
அழல்புரை குழைகொழு நிழறரும் பலசினை
ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
70எவ்வயி னோயு நீயேநின் னார்வலர்
தொழுதகை யமைதியி னமர்ந்தோயு நீயே
அவரவ ரேவ லாளனு நீயே
அவரவர் செய்பொருட் 1கரணமு நீயே.
கடவுள் வாழ்த்து.
கடுவனிள வெயினனார் பாட்டு.
பெட்டனாகனார் இசை.
பண்ணுப் பாலையாழ்.


64 - 5. அத்தன்மையவல்லாத இயல்புகள்நினக்கு வேறுமுள; அவை நின்னையொத்த தெய்வமுனிகள்உணரும் உபநிடப்பொருள்; யாம் உணர்வனவல்லவென்றவாறு.

65. ''அன்ன'' எனற்பாலது ''அன்'' எனக் குறைந்துநின்றது.''ஓர்'' இரண்டும் அசைநிலை. அருமறை : ஆகுபெயர்.

66 - 70. அழல்புரை குழையையும் நிழலைத்தரும் சினையையுமுடைய ஆலும் கடம்பும் யாற்றிடைக்குறையும்குன்றும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்தியபலதெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோய்!

68. காற்றும் வழங்காத திணிந்த நிலைமையையுடையகுன்றமென்க.

70 - 71. நின் அன்பர் தொழுத கையினதுதாழ்ச்சிக்கண் அகப்பட்டோயும் நீ.

72. நினைத்தன முடித்தலான் அவரவர்ஏவல் செய்வானும் நீ.

73. அவரவர் செய்த பொருள்கட்குக்காவலும் நீ.

செய்பொருளாவன: அறம் பொருள்இன்பம் வீடென்பன.

70 - 73. ஏகாரம் நான்கும் ஈற்றசை.

1 திருச்சந்தவிருத்தம்69-ஆவதில் வரந்தர மிடுக்கிலாத தேவரை யாணமென்றடைந்து வாழு மாதர்காள் என்புழிக் காவலென்னும்பொருளில் ஆணமென்பது எதுகையில் வந்திருத்தலால்இங்கே ''ஆணமு நீயே'' என்று பாடங்கொள்ளுதலும் பொருந்தும்.