30 | அன்ன மரபி னனையோய் நின்னை இன்னனென் றுரைத்த லெமக்கெவ னெளிது;(இது பேரெண்) அருமைநற் கறியினு மார்வ நின்வயிற் பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை | 35 | மெல்லிய வெனாஅ வெறாஅ தல்லியந் திருமறு மார்பநீ யருளல் வேண்டும்;(இஃது ஆசிரியம்) விறன்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கும் அறனு மார்வலர்க் களியு நீ திறனிலோர்த் திருத்திய தீதுதீர் சிறப்பின் | 40 | மறனு மாற்றலர்க் கணங்கு நீ அங்கணேர் வானத் தணிநிலாத் திகழ்தரும் திங்களுந் தெறுகதிர்க் கனலியு நீ ஐந்தலை உயிரிய வணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனு மடங்கலு நீ | 45 | நலமுழு தளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனு நாற்றமு நீ |
பரிமேலழகருரை 1 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .வாறு. 43-6. ஐந்து தலையைத் தோன்றுவித்தஅணங்குடை அருந்திறலையுடைய. . .வீசன். மடங்கல் - அவனினாகிய உலகுயிர்களினது ஒடுக்கம். 45-6. அறமுழுதினை . . . ய பூவினான்முகனும்அவனினாகிய உலகுயிர்களின் தோற்றமும் நீ. வேதமென்னும் வடமொழித் . . . ளுணர்வென்பாதகலான் ஈண்டு அப்பொருள்பற்றி அதற்குப் புலமென்று பெயராயது .பி . .நடாத்துகின்ற நான்முகற்குப் பெயராயிற்று. அழிப்பும் படைப்பும் கூறியவாறு. 1 மிகச் சிதைந்திருப்பினும், ஆயிரம் விரித்த என்னும் செய்யுளை இந்நூலின் முதற்செய்யுளென்று நன்கு அறிந்து கொள்ளும்படி பேருதவியைச் செய்த இந்த உரைப்பிரதிதிருவாவடுதுறை யாதீனத்துப் புத்தகசாலையிலிருந்துகிடைத்தது. (பி - ம்.)32 ''ணெளிது'' 38 ''கருளுநீ'' 39 ''தீதுதீர்கொள்கை, 43 ''ஐந்தனையுயிரிய'' 46 ''புலனும் பூவினு ணாற்றமுநீ'' |