பக்கம் எண் :

44

நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடைக்
குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து
10மாலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை
மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்
ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள
15வேல னேத்தும் வெறியு முளவே
அவை வாயு மல்ல பொய்யு மல்ல
நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை

8 - 10. நாவலந்தீவினுள் வடகூற்றிற்கௌஞ்சமென்னும் மால்வரையைத் துளைத்து அதனை வழிப்படுத்தினஆறு மென்றலையினையுடையாய்!

ஈண்டுக் குருகென்றது அன்றிலை. அதற்குவடமொழிப் பெயர் அதுவாதலின் ''குருகொடு பெயர்பெற்றமால்வரை'' என்றார். வழிப்படுத்துதல் - வழிக்கண்நிகழும் இயக்கத்தை அதன்கண் நிகழ்வித்தல். குழவிப்பருவத்து இவ்வீரமெல்லாம் செய்தாயென்னும்கருத்தால் ''கயந்தலை'' என்றார்.

ஊர்ந்து (2) புக்கு (1) உழக்கி (2)உடைத்து (9) ஆற்றுப்படுத்த (10) வெனக் கூட்டுக.

10. கயந்தலையென்பது பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; அஃது ஈண்டு ஆகுபெயராய்அண்மைவிளி ஏற்று நின்றது.

11-2. மூவிரு கயந்தலையுடனும் முந்நான்குமுழவுத்தோளுடனும் ஞாயிற்றின் எழுச்சிபோலும் நிறவழகுடனும்தாமரைப்பூவின்கட் பிறந்த பிறப்பையுடையை.

13. உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே!

14. சால்வ - சால்பினையுடையாய்!

14-5. நீ வெளிப்படுதலிற் கண்டார்க்குஅச்சம் செய்யும் வெறியாட்டு விழவினுள் வேலன்கண்டுஇவ்வாறு சொல்லி ஏத்தும் வெறிப்பாட்டும் உள.

15. வெறி : ஈண்டு ஆகுபெயர்.

16-21. இவ்வுலகிற்கெல்லாம் தலைவன்நீயேயாகலான் அவ்விடத்து அவன்கண்டு ஏத்துகின்றஅப்பாட்டுக்கள் மெய்யுமல்ல;

(பி - ம்.)9 ''யுடைத்தம்மலை'' 12''நிறத்ததை'' 17 ''வரம்பிற் றுலக''