பக்கம் எண் :

5

வலனுய ரெழிலியு மாக விசும்பும்
நிலனு நீடிய விமயமு நீ;(இவை ஆறும் பேரெண்)
அதனால், (இது தனிச் சொல்)
50இன்னோ ரனையை யினையை யாலென
அன்னோர் யாமிவட் காணா மையிற்
பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய
மன்னுயிர் முதல்வனை யாதலின்
நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே;(இது சுரிதகம்)
55நின்னொக்கும் புகழ்நிழலவை
பொன்னொக்கு முடையவை
புள்ளின் கொடியவை புரிவளை யினவை
எள்ளுநர்க் கடந்தட்ட விகனே மியவை
மண்ணுறு மணிபா யுருவினவை
60எண்ணிறந்த புகழவை யெழின் மார்பினவை(இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்)
ஆங்கு,(இது தனிச்சொல்)
காமரு சுற்றமோ டொருங்குநின் னடியுறை
யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
65வாய்மொழிப் புலவநின் றாணிழ றொழுதே.
இது கடவுள் வாழ்த்து.

(இது சுரிதகம்)


47. . . . . . . ெ. . . யங்கு மாகமாகிய விசும்பும்.

மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவ . . . . .

50. . . . .யாய்இவரையனையை யென்றற்கு.

52. வலப்பக்கத்துக்கொண்டு முத. . . .

54. . . . யையென்புழி. . . பத . . ணுதலுற்ற நீயே.

59. மணிபரந்தாலொத்தஉருவினையுடையை. இம்மு . . .செ. . .ச. . .

62. . . .ரென்புழிஉகரம் பகுதிப்பொருள் விகுதி.

62-5. யாம் ஏமுற்றநெஞ்சத்தேமாய் இம்மைக்கட் காமரு சுற்ற மோடொருங்கு.. . .தலைப்பொருந்தியும் பொலிகவென நின் தாணிழல்தொழுது வைகலும் பரவுதும், வாய்மொழிப் . . .

பரிபாட்டென்பதுஇசைப்பாவாதலான், இஃது இசைப்பகுப்புப் படைத்தபுலவரும் பண்ணுமிட்டெ. . . .

(பி - ம்.) 65. ''முதல்வநின்''