பெயரையும் அன்பு பொருந்திய நெஞ்சத்தையுமுடையஅந்தணர்களது அறத்தை விரும்பியோய்! அத்தன்மைகளையுடையாயாதலின்நாங்கள் விரும்பி நின்பாற் பொருந்திப் பொருந்திவழிபாடுசெய்கின்றோம்; அங்ஙனம் செய்வதன் பயனாகப்பின்னும் பின்னும் நின்புகழைக் காட்டிலும் பலவாகஅவ்வழிபாடுகள் ஆகும்படி அருள்புரிவாயாக. (14) | கார்மலி கதழ்பெய றலைஇ யேற்ற நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே தண்ணறுங் கடம்பின் கமழ்தா தூதும் வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே | 5 | அடியுறை மகளி ராடுந் தோளே நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே வாகை யொண்பூப் புரையு முச்சிய தோகை யார்குரன் மணந்து தணந்தோரை நீடன்மின் வாரு மென்பவர் சொற்போன் றனவே | 10 | நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின அழுகை மகளிர்க் குழுவை செப்ப நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள |
(பரி - ரை.) 1 - 2. மிக்க கதழ்பெயலை மேகம்பெய்தலால் அதனை ஏற்ற மிக்க நீரான் நிறைதலையுடைய சுனைகள் பூமலர்ந்தன. 2. இடத்துநிகழ் பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது. 4. பண்ணையென்புழி ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி. 5 - 6. வேய் ஆடும் அடியுறைமகளிர் தோள்களை ஒத்தன. 7 - 8. சூட்டினவாகிய மயில்களின் குறைவற்ற குரல். 8. கூடிப் பிரிந்தோரை. 10. கொன்றை மலர்களும். 11 - 2. அழுகையையுடைய மகளிர்க்கு அது தீர்தற்பொருட்டுத் தாயர் புலிபுலியென்று சொல்லுமாறு வேங்கைப்பூ வியலறைக்கட் பரந்தன. 13 - 7. இவற்றோடு நெருங்கிய முகையையுடைய காந்தள் அவிழ்ந்த இதழ்நிரைதொறும் தோன்றியது விட்டகொடிக்கட்பூத்த செம்பூப் பரக்க நின்குன்று கார்காலத்தன்மை மிக்கது. இவற்றோடென்பது வருவிக்கப்பட்டது. (பி - ம்.)4 ''வண்டின் குரல்'' 13 ''நொமுசைக் காந்தள்'' |