(21) | ஊர்ந்ததை எரிபுரை யோடை யிடையிமைக்குஞ்சென்னிப் பொருசமங் கடந்த புகழ்சால் வேழம் தொட்டதை தைப்பமை சருமத்திற் றாளியை தாமரை துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய | 5 | வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த வரிமலி யரவுரி வள்புகண் டன்ன புரிமென் பீலிப் போழ்புனை யடையல் கையதை கொள்ளாத் தெவ்வர்கொண் மாமுத றடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல் | 10 | பூண்டதை சுருளுடை வள்ளி யிடையிடு பிழைத்த உருளிணர்க் கடம்பி னொன்றுபட கமழ்தார் அமர்ந்ததை புரையோர் நாவிற் புகழ்நல முற்றி நிரையே ழடுக்கிய நீளிலைப் பாலை அரைவரை மேகலை யணிநீர்ச் சூழித் | 15 | தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம் குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது; |
(பரி - ரை.) 1 - 2. விளக்கத்தால்எரியையொத்த ஓடைநடுவே கிடந்து விளங்குஞ்சென்னியை யுடைத்தாய வேழம். 3 - 7. தொட்டது தாமரைத்தாளிற்குஇயைந்த பவழம்போலும் துவர்நீர்த் துறையிலே மறையஅழுத்திய சருமத்தால் தைத்தல் அமைந்தமுதுகிற்றோலுடனே அதன் முழுமயிர் மிடைந்தபாப்புத்தோலைக் கீறின வாரையொத்தபீலிப்போழாற் புனைந்த அடையற் செருப்பு. தாளியை தைப்பமை யென்பனவும்அடையலென்பனோடு இயையும். 8. நின்னை மதியாத அவுணர் தமக்குத்துணையாக மதித்த மா. 9. புள் - அன்றில். புடை - பக்கம். 10-11. சுருளுதலையுடைய. இடையிட்டுத்தொடுத்த கடம்பம் பூவினையுடைய ஒன்றுபட்டு அலர்ந்ததார். 13. ஏழு நிரையாக அடுக்கிய நீண்டஇலையையுடைய பாலை; என்றது ஏழிலைப்பாலையை. 14 - 5. அதனையுடைய அரைமலையாகியஇலகடத்தினையும் அருவியாகியபடாத்தினையுமுடைத்தாய்த் தரையின்கணின்றுவிசும்பையுற ஓங்கிய பரங்குன்றம். 16. இக்குன்றத்து அடியின்கண் உறைதல்மறுபிறப்பினும் இயைகவென. 17. வென்றியாற் கொடியை அலங்கரித்த செல்வ! |