242

திரட்டு : 7

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவ மிதழகத்
தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில்
5தாதி னனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை யனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
ஏம வின்றுயி லெழுத லல்லதை
10வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்
கோழியி னெழாதெம் பேரூர் துயிலே.

(கு - ரை) 1 - 4.''''நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் நான்முகவொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டிற்காண்வரத் தோன்றிச் சுடும ணோங்கியநெடுநகர் வரைப்பின்'''' (பெரும்பாண்.402 - 5).பெருங்கதையில் இராசகிரியமென்னும் நகரத்தைத்தாமரைப்பூவாக உருவகஞ்செய்திருத்தல் இங்கே அறிந்துஇன்புறுதற்குரியது. 6. தாதுண்பறவை: ''''தாதுண் பறவை பேதுறலஞ்சி'''' (அகநா. 4: 11).

பரிசில் வாழ்நர்; பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்'''' (சிறுபாண். 218)

8.''''ஓத லந்தணர் வேதம் பாட'''' (மதுரைக்.656); ''''கோதிலாத செஞ் சூட்டுடை வாரணங் கூவ ஓத ஞாலத்து மற்றைய தலத்துளார் விழிப்பர் ஈத லேற்றலோ டறுதொழி லிருபிறப் பாளர் வேத நாதத்தின் விழிப்பதவ் வியனகர் மாக்கள்'''' (திருவாப்பனூர்ப் புராணம்ஆப்பனூர்ச். 9). 11. கோழி - உறையூர்.

(7)


(பி - ம்.) 2 ''சீறூர்''''புரையும்பேரூர்'' 3 ''டனையதே'' 5 ''னனைய'' 7 ''னாவினிற்'' 11 ''பேரிருந்துயிலே''