(2) | தொன்முறை யியற்கையின் மதியொ . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மரபிற் றாகப் பசும்பொ னுலகமு மண்ணும் பாழ்பட விசும்பி லூழி யூழூழ் செல்லக் | 5 | கருவளர் வானத் திசையிற் றோன்றி உருவறி வாரா வொன்ற னூழியும் உந்துவளி கிளர்ந்த வூழூ ழூழியும் செந்தீச் சுடரிய வூழியும் பனியொடு தண்பெய றலைஇய வூழியு மவையிற் | 10 | றுணமுறை வெள்ள மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய விருநிலத் தூழியும் |
(பரி - ரை.) 1- 4. மண்ணுலகமும் பசும்பொனுலகமும் பாழ்பட ஒன்றற்கொன்றுமாறிவருதலாகிய பழைய இயல்பினையுடைய மதியமும்ஞாயிறுங் கெடுதலால் அழகிழந்த இயல்பிற்றாகவிசும்பு கெட்ட ஊழிகள் முறை முறையாகக் கழிந்தனவாக. ''பாழ்பட''எனவும், ''மரபிற்றாக'' எனவுமுள்ள எச்சங்கள்''விசும்பி லூழி'' என்புழி, இன்மையாகிய குறிப்புவினைகொண்டன. 5 - 6. தன் குணமாகியஒலியுடனே தோன்றி உருவுகாணப் படாத வளிமுதற் பூதங்களின்பரமாணுக்கள் வளர்கின்ற வானமாகிய முதற் பூதத்தினதுஊழியும். ''உருவறிவாரா'' எனக் குறைந்துநின்றபெயரெச்சம், ''கரு'' என்னும் . . . பொருட்பெயர் கொண்டது. ''வளர்வானம்'' என்புழி வளர்தலாகியஇடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல்நின்று, ''தோன்றி'' என்னும் வினையெச்சத்திற்கு வினைமுதல்முடிபாயிற்று. ''வானத்து'' என்புழி;அத்து அல்வழிக்கண் வந்தது. 7 - 12. அவ்வானத்தினின்றுஎல்லாப் பொருள்களையுஞ் சலிப்பிக்கும் காற்றுத்தோன்றிய முறைமுறையாகிய ஊழிகளும், அக்காற்றினின்றும்செந்தீத் தோன்றிய ஊழிகளும், அத்தீயினின்றுந்தோன்றிப் பனியும் மழையும் பெய்த ஊழிகளும், அவற்றிற்குப்பின்புஅப்புனலினின்றுந் தோன்றுதலான் மீண்டும் வெள்ளத்தினுட்கிடந்து முன் தோன்றிய நான்குபூதங்கட்கும்உள்ளீடாகிய இருநிலத்தினூழியும். முன் அழிகின்றகாலத்தும் வெள்ளமூழ்குதலான், மீண்டும் வெள்ள மூழ்கியென்றார்.உள்ளிடப்பட்டதனை ''உள்ளீடு'' என்றார், ஆகுபெயரான். (பி - ம்.)2 ''மரபிற்றாகிப்''4 ''செய்யக்'' 9 - 11 ''மவற்றுண் முறை வெள்ள மூழ்கிமீணடியாககுபபீடுயர்பிண்டியவதற்கு'' |