6 | தலைவி கூற்று
| | | மரையா மரல் கவர, மாரி வறப்ப | | வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர், | | சுரை அம்பு, மூழ்கச் சுருங்கி, புரையோர் தம், | | உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு | 5 | தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் | | கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால், | | என், நீர் அறியாதீர் போல இவை கூறல்? | | நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும், | | அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு | 10 | துன்பம் துணையாக நாடின், அது அல்லது | | இன்பமும் உண்டோ, எமக்கு? | | | தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து, ‘நீர் செல்லும் கடுஞ் சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ எனத் தலைவி கூறியது |
|
|
8 | தோழி கூற்று
| | | நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க, | | கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு | | கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின், | | உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம், | 5 | வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர, | | விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் | | சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் | | சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய! | | வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் | 10 | ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம் | | யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? | | மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, | | பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும் | | திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? | 15 | புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை | | வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும் | | அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? | | என ஆங்கு | | நச்சல் கூடாது பெரும! இச் செலவு | 20 | ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று; | | மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி, | | தன் நகர் விழையக் கூடின், | | இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே |
| | சொல்லாது பிரியலுற்ற தலைவன் குறிப்பு அறிந்து, தோழி பொருளது நிலையாமை கூறி, ‘அவளோடு கூடிச் செல்கின்ற இல்வாழ்க்கைச் செலவே பொருள்’ என, அவன்்செலவு அழுங்கக் கூறியது |
|
|
11 | தலைவி கூற்று
| | | ‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், | | பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், | | புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என, | | பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் | 5 | வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி: | | ‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், | | கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள், | | துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் | | பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே | 10 | ‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், | | துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள், | | அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை | | மென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே | | ‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், | 15 | துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள், | | இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் | | தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே | | என ஆங்கு | | இனை நலம் உடைய கானம் சென்றோர் | 20 | புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின் | | பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; | | நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே |
| | தலைவி, மூன்றன் பகுதி தலைவன் கூறிப் பொருள்வயிற் பிரிகின்ற காலத்து,‘காடு கடியவாயினும், இவ் வகைப் பட்டனவும் உள’ என்று கூறினார்; அவை காண்டலின் வருவர்’ எனத் தோழிக்குக் கூறி, அதற்கு நிமித்தமும் கூறி, ஆற்றுவித்தது. மூன்றன் பகுதி கூறுதலாவது: ‘அறத்தினால் பொருள் ஆக்கி, அப் பொருளால் காமம் நுகர்வேன்’ என்றலாம். ‘உடைமையது உயர்ச்சி கூறிப் பிரிந்தான்’ எனக்கிளவி கூறின், பொருள் வயிற் பிரிதல் இன்றாம், அது பொருள்வயிற் பிரிவை விலக்கும் என்றலின் (10) |
|
|
13 | தோழி கூற்று
| | | செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, | | எரி மேய்ந்த கரி வறல்வாய், புகவு காணாவாய், | | பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், | | திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, | 5 | மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, | | உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, | | ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, | | சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும் | | புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம் | 10 | எல்வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் | | மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை | | அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல, | | கல் உறின், அவ் அடி கறுக்குந அல்லவோ? | | நலம் பெறும் சுடர்நுதால்! எம்மொடு நீ வரின், | 15 | இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் | | துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை | | விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ? | | கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், | | தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, | 20 | முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த | | வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ? | | என ஆங்கு, | | அனையவை காதலர் கூறலின், ‘வினைவயிற் | | பிரிகுவர்’ எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇ; | 25 | கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது, | | கொடுங்குழாய்! துறக்குநர்அல்லர் | | நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே |
| | தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகள், ‘யான் நும்மோடு போதுவல்’ என்றாட்கு, தலைவன் அவளது மென்மையும் காட்டின் கடுமையும் கூறி,உடம்படானாக, ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘அவர் நம்மோடு நகையாடிச் சொன்னார், பிரிவரல்லர்’ என வற்புறுத்தியது(12) |
|
|
17 | தோழி கூற்று
| | | படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை | | புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும், | | ‘உடையதை எவன் கொல்?’ என்று ஊறு அளந்தவர்வயின் | | நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் நறுநுதால்! | 5 | ‘தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ, | | வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, | | நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது, | | நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ? | | ஆற்றல் நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ, | 10 | தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன்; முயல்வளவை, | | நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக் | | கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ? | | வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ, | | பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவை, | 15 | தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் | | முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?’ | | என ஆங்கு, | | பொருந்தி யான் தான் வேட்ட பொருள்வயின் நினைந்த சொல், | | திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய | 20 | மருந்து போல், மருந்து ஆகி, மனன் உவப்ப | | பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே |
| | பகைவர் திறை தந்த நாடு காத்தற்கு (தலைவன்) பிரிகின்றமை உணர்ந்து, தலைவி வேறுபட்டமை கண்டு, தோழி அவனை எதிர்ப்பட்டு, அவளது ஆற்றாமையும் இளமையது அருமையும் கூறிச் செலவு அழுங்குவித்தமை தலைமகட்குக் கூறியது |
|
|
18 | தோழி கூற்று
| | | அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப, | | பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ, | | என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் | | மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்: | 5 | சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; | | ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; | | இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் | | வளமை விழைதக்கது உண்டோ? உள நாள், | | ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை | 10 | ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும், | | ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ, | | சென்ற இளமை தரற்கு! |
| | ‘ஒன்றாத் தமரினும்’ என்னும் சூத்திரத்தில் ‘நாளது சின்மையும், இளமையதுஅருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ எனக் கூறிய எட்டினையும் தலைவன் கூறக் கேட்ட தோழி, அவற்றை ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ என்னும் விதியால் தலைவற்குக் கூறிச் செலவு அழுங்குவித்தது.(17) |
|
|
24 | தலைவி கூற்று
| | | ‘நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் | | அஞ்சியது ஆங்கே அணங்காகும்’ என்னும் சொல் | | இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற: நின் கேள் | | புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், | 5 | ‘இது ஒன்று உடைத்து’ என எண்ணி, அது தேர, | | மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், | | பாயல் கொண்டு என் தோள் கனவுவார், ‘ஆய் கோல் | | தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள், | | கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ | 10 | இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் | | நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்று, | | செய் பொருள் முற்றும் அளவு?’ என்றார்; ஆயிழாய்! | | தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி | | யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின், | 15 | ‘தொய்யில் துறந்தார் அவர்’ என, தம்வயின், | | நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு | | போயின்று, சொல், என் உயிர் |
| | தலைமகன் குறிப்புக் கண்டு, ‘பிரிவன்’ என ஐயுற்றுச் செல்கின்ற தலைவி,அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமை கேட்டு, ‘பொருள்வயிற் பிரிகின்றான்’எனத் துணிந்து, ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்பதனால், அந்தணன் அறம் கருதித் தூதின் பிரிந்து, அவ் அரசர் செய்த பூசனை வாங்கிக் கொண்டு வருதற்குப் பிரிகின்றது என்று கொள்க. ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமம்’ கூறுகின்றது.(23) |
|
|
26 | தோழி கூற்று
| | | ‘ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், | | பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், | | மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், | | ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், | 5 | ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, | | தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல, | | போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற, | | நோ தக வந்தன்றால், இளவேனில் மே தக | | பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து, | 10 | தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் | | ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, | | வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர் | | திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை, | | வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் | 15 | நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம் | | இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர் | | அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி, | | திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் | | ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, | 20 | ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்’ | | என, நீ | | தெருமரல் வாழி, தோழி! நம் காதலர், | | பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் | | செரு மேம்பட்ட வென்றியர்; | 25 | ‘வரும்’ என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே |
| | ‘மேவிய சிறப்பின் ஏனோர்’ என்னும் சூத்திரத்தில், பகைமேற் சென்ற அரசன் திறை பெற்ற நாடு காத்து, அதன்கண் தன் நெறி முறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் என்றலின், பிரிவின்கண் தலைவன் இளவேனிற் காலம் குறித்துப் பிரிய,அக் கால வரவின்கண் தலைவி ஆற்றாளாய், ‘அவர் நமக்கு அருளும் காலையில் அருளார் காண்’ என்றாட்கு, தோழி, ‘அவர் வரவிற்கு இக் காலம் தூதாயன்றே வந்தது; நீ ஆற்றுவாயாக’ என வற்புறுத்தியது(25) |
|
|
27 | தோழி கூற்று
| | | ‘ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய | | தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த; | | பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; | | மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப; | 5 | காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு | | தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற; | | பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, | | ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில் | | நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, | 10 | நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; | | கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய, | | புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? | | கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, | | தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க; | 15 | ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, | | வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்? | | மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள, | | பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க; | | தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் | 20 | வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்?’ | | என ஆங்கு, | | நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி! | | நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின், | | காமவேள் விழவாயின், ‘கலங்குவள் பெரிது’ என, | 25 | ஏமுறு கடுந் திண் தேர் கடவி, | | நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே |
| | தலைவன் குறித்துப் பிரிந்த இளவேனில் வரவின்கண், ‘எம்மையோ மறக்க; இக்காலத்து, இவ் ஊரின்கண், தாம் விளையாடும் விளையாட்டும் மறந்தாரோ?’ எனச் சொல்லி ஆற்றாளாய தலைவிக்கு, தோழி தலைவன் வரவு உணர்ந்து, கழி உவகையால் கூறியது.(26) |
|
|
31 | தோழி கூற்று
| | | ‘கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, | | நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல் | | வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக, | | பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப் | 5 | புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, | | மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், | | கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் | | "பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை | | மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர், | 10 | தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ | | பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு, | | வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை? | | தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு, | | வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ | 15 | நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, | | தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை? | | பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் | | வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ | | புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா | 20 | முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி?' | | என ஆங்கு, | | வாளாதி, வயங்கிழாய்! ‘வருந்துவள் இவள்’ என, | | நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, | | மீளி வேல் தானையர் புகுதந்தார் | 25 | நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே |
| | ‘இளவேனிற் காலத்து வருவல்; அத்துணையும் ஆற்றியிரு’ என்று மண் நசையால் வேந்தன் சென்றவழி, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் வந்து வருத்தலின்,ஆற்றாத தலைவியைத் தோழி, ‘வருவர்’ என வற்புறுப்பவும், வன்புறை எதிர் அழிந்த வழி, தலைவன் ‘யாம் குறித்த பருவம் வரும்துணையும் ஆற்றியிராள்’ எனப் பின்பனிக் காலத்து வருகின்ற வரவு உணர்ந்து, தோழி கழி உவகையால் கூறியது(30) |
|
|
35 | தோழி கூற்று
| | | ‘மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் | | படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப; | | மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித் | | தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக; | 5 | மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, | | அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார; | | நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், | | துறந்து உள்ளார் அவர்’ எனத் துனி கொள்ளல் எல்லா! நீ | | ‘வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர், | 10 | தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ | | கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால், | | ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? | | மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர், | | வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ | 15 | "வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், | | ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? | | நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் | | புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ | | பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், | 20 | சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? | | என ஆங்கு, | | உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி, | | எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் | | காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன் | 25 | வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே |
| | வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி, ‘இக் காலம் அல்லவோ, அவர் வருதும் எனச் சொன்ன காலம்?’ என வன்புறை எதிர் அழிந்தாளை, ‘நீ துனி கொள்ளல்; அவர் வந்தார்’ எனத் தலைவன் வரவு உணர்ந்து, தோழி ஆற்றுவித்தது |
|
|
40 | தோழி கூற்று
| | | ‘பாடுவோம்’ என்ற தோழியை நோக்கித் தலைவி உடம்பட்டுக் கூறுதல் | | ‘அகவினம் பாடுவாம், தோழி!’ ‘அமர் கண் | | நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல், | | தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, | | முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் | 5 | வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி, | | பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி, | | அகவினம் பாடுவாம், நாம்’ | | தோழியின் மறுமொழி | | ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள், | | தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு | 10 | வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை | | தலைவி இயற்படப் பாடாமையின் தோழி பாடுதல்
| | கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல், | | எடுத்த நறவின் குலை அலங்காந்தள் | | தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார் | | இடுக்கண் தவிர்ப்பான் மலை | 15 | கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, | | மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே | | தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும் | | அல்லற்படுவான் மலை | | தலைவி இயற்பழித்துப் பாடுதல்
| | புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத் | 20 | தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் | | அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் | | விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட, | | தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே | | பெண்டிர் நலம் வௌவி, தண் சாரல் தாது உண்ணும் | 25 | வண்டின் துறப்பான் மலை | | தோழி இயற்பட மொழிதல்
| | ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற | | கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத் | | தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின் | | நீங்கலம்' என்பான் மலை | | தலைவன் வரைவொடு புகுந்தமையைத் தோழி தலைவிக்கு அறிவித்தல்
| 30 | என நாம், | | தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி, | | மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா | | மென் முலை ஆகம் கவின் பெற, | | செம்மலை ஆகிய மலைகிழவோனே |
| | தோழியும் தலைமகளும் தலைமகனது மலையை வாழ்த்திப் பாடுகின்ற வள்ளைப்பாட்டில்,தோழி இயற்பட மொழிய, தலைமகள் இயற்பழித்தமை தலைமகன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைய வருகின்றமை தோழி, தலைமகட்கு உரைத்தது |
|
|
41 | தோழி கூற்று
| | | வள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்
| | பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் | | கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, | | ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் | | பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று | 5 | இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், | | கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து, | | பிடியொடு மேயும் புன்செய் யானை | | அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் | | நெடு வரை ஆசினிப் பணவை ஏறி, | 10 | கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், | | இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி, | | ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா, | | தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, | | நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி, | 15 | குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, | | பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் | | பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று | | தலைவி
| | இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே; | | வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற | 20 | சூள் பேணான் பொய்த்தான் மலை | | தோழி
| | பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? | | ‘அஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? | | குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின், | | திங்களுள் தீத் தோன்றியற்று | | தலைவி
| 25 | இள மழை ஆடும்; இள மழை ஆடும்; | | இள மழை வைகலும் ஆடும் என் முன்கை | | வளை நெகிழ வாராதோன் குன்று | | தோழி
| | வாராது அமைவானோ? வாராது அமைவானோ? | | வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன் | 30 | ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து | | நீருள் குவளை வெந்தற்று | | தலைவி
| | மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; | | மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத் | | துன்னான் துறந்தான் மலை | | தோழி
| 35 | துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; | | தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் | | தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் | | சுடருள் இருள் தோன்றியற்று | | தந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்
| | என ஆங்கு | 40 | நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள் | | ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி, | | மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும் | | மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, | | மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே |
| | இருவரும் இவ் வகையால் பாடிய வள்ளைப் பாட்டு, தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவு வேண்டிவிட, தந்தையும் வரைவு உடம்பட்டமை தோழி, தலைவிக்கு உரைத்தது |
|
|
42 | தலைவி கூற்று
| | | வள்ளைப் பாட்டுப் பாடத் தோழி அழைக்க, தலைவி இசைதல்
| | ‘மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த | | முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி, | | கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் | | பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன் | 5 | மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச் | | சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம், | | கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம், | | வள்ளை அகவுவம், வா’ ‘இகுளை! நாம் | | வள்ளை அகவுவம், வா’ | | தோழி இயற்பழித்தல் | 10 | காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு | | வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா | | நாணிலி நாட்டு மலை | | தலைவி இயற்பட மொழிதல்
| | ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ | | ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் | 15 | அறம் புரி நெஞ்சத்தவன்? | | தோழி
| | தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம் | | பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக் | | கொன்னாளன் நாட்டு மலை | | தலைவி
| | கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை | 20 | நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் | | தேர் ஈயும் வண் கையவன் | | தோழி
| | வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல் | | மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ | | எவ்வம் உறீஇயினான் குன்று | | தலைவி
| 25 | எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி | | அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என் | | நெஞ்சம் பிணிக்கொண்டவன் | | என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன், | | தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா, | 30 | சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர, | | ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என் | | ஆயிழை மேனிப் பசப்பு |
| | முன்பு பெற்ற வழி மலிந்ததனைப் பின்பு பிரிந்த வழிக் கலங்கிக் கூறியது. என்னை? தலைவன் அருமை செய்து அயர்த்தவழி, தோழி தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தலைவன் இயற் பழிப்ப, தலைவி இயற்பட மொழிந்ததனைச் சிறைப்புறமாகக் கேட்டு,தலைவன் முன் ஒருகால் வந்து சிறு புறம் சாரத் தான் ஆற்றினமை குறித்து, பின் ஒருகால் அவ்வாறு பாட, அவன் சிறு புறம் சாராமையின் கலங்கி, நெஞ்சொடு கூறியது ஆகலின்(6) |
|
|
43 | தோழி கூற்று
| | | தோழி வள்ளைப் பாட்டுப் பாடத் தலைவியை அழைத்தல்
| | வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து | | ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் | | சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், | | ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், | 5 | ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற | | மை படு சென்னிப் பய மலை நாடனை, | | தையலாய்! பாடுவாம், நாம் | | தோழியின் பாடல்
| | தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள் | | முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின், | 10 | கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் | | தோற்றலை நாணாதோன் குன்று | | தலைவியைப் பாடுமாறு தோழி வேண்டுதல்
| | வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம், | | இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் | | வருடைமான் குழவிய வள மலை நாடனைத் | 15 | தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை | | தலைவி
| | நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் | | கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே | | மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம் | | கூறுதல் தேற்றாதோன் குன்று | | தோழி
| 20 | புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட | | புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் | | வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை | | மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை | | தலைவி
| | கடுங் கண் உழுவை அடி போல வாழைக் | 25 | கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் | | இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால், | | தன் மெய் துறப்பான் மலை | | தோழி
| | என ஆங்கு | | கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு | 30 | வாடிய மென் தோளும் வீங்கின | | ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே |
| | வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தோழி தானும் தலைவியும் வள்ளைப் பாடலுள் முருகனைப் பாடுவார் போல இருவர்க்கும் ஏற்பத் தலைவனைப் பாட, தலைவி ஆற்றினமை தோழி தன்னுள்ளே கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகக் கூறியது. |
|
|
45 | தோழி கூற்று
| | | விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை, | | கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை, | | அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து, | | பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல் | 5 | உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, | | நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென, | | சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப! | | கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் | | மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ | 10 | புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி | | பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை? | | புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் | | அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ | | கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி | 15 | தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை? | | சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த | | விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ? | | யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி | | காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை? | 20 | என ஆங்கு, | | தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி | | மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான், | | பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம் | | உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே |
| | வரைவிடை ஆற்றாத தலைவிக்கு, தோழி தான் தலைவனை நெருங்கி வரைவு கடாவ,அது கேட்ட தலைவன் வரைவு முயற்சியான் வருதல் இடையிட்டதூஉம், தமர் வரைவு எதிர்ந்ததூஉம், கூறி, அவளை ஆற்றுவித்தது |
|
|
46 | தோழி கூற்று
| | | வீயகம் புலம்ப, வேட்டம் போகிய | | மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி, | | வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு | | ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின், | 5 | ‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும், | | பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், | | வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை | | நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும் | | அயம் இழி அருவிய அணி மலை நல் நாட! | 10 | ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன், | | மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப | | கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப் | | பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக | | அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன், | 15 | வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப | | நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப் | | பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக | | கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன், | | புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப | 20 | துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன் | | அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக | | என ஆங்கு, | | கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின் | | புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை | 25 | இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச் | | சிலம்பு போல், கூறுவ கூறும், | | இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே |
| | அல்ல குறிப் பட்டுத் தலைவன் மீள, அதனை ‘என் பிழையாகக் கருதுவன்’ எனக்கவன்று ஆற்றாளாகி, ‘தன் குறி தள்ளிய தெருளாக் காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கி, தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிய’ தலைவியது நிலைமை தோழி தலைவற்குக் கூறி, "இவ் இடையீடு நின் தோழியின் ஆயிற்று" என, எனது பிழைப்பு ஆக்கி, அவளை ஆற்றுவிப்பாய்; நீ உரைத்ததே உரையாம் அவட்கு' என அவளது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது(10) |
|
|
55 | தலைவி கூற்று
| | | மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல், | | பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு, | | போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை, | | இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய், | 5 | நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி: | | ‘நில்’ என நிறுத்தான்; நிறுத்தே வந்து, | | நுதலும் முகனும், தோளும், கண்ணும், | | இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ, | | ‘ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று; | 10 | மை தீர்ந்தன்று, மதியும் அன்று; | | வேய் அமன்றன்று, மலையும் அன்று; | | பூ அமன்றன்று, சுனையும் அன்று; | | மெல்ல இயலும், மயிலும் அன்று; | | சொல்லத் தளரும், கிளியும் அன்று' | 15 | என ஆங்கு, | | அனையன பல பாராட்டி, பையென, | | வலைவர் போல, சோர் பதன் ஒற்றி, | | நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப் | | புலையர் போல, புன்கண் நோக்கி, | 20 | தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்; | | காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன் | | தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை | | ஏழைத் தன்மையோ இல்லை, தோழி! |
| | ‘பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி, ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்,அருமை சான்ற நால் இரண்டு வகையின், பெருமை சான்ற இயல்பின் கண்’ தலைவி கூறியது என்றது, ‘ஒருமைக் கேண்மையின் உறு குறை தான் அவள் என்னும் வேற்றுமை இல்லாத நட்பினாலே தோழி தனக்கு வந்து கூறிய குறையை; பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள் முன்னர்த் தெய்வப் புணர்ச்சி நிகழ்ந்தமை நோக்கி, அது காரணத்தான் முடிப்பதாகத் தெளிந்த தலைவி; அருமை சான்ற நால் இரண்டு வகையில் தான் முன் அருமை அமைந்து நின்ற நிலையால், தலைவன்தன்கண் நிகழ்த்திய மெய் தொட்டுப் பயிறல் முதலிய எட்டினாலே; பெருமை சான்ற இயல்பின்கண்ணும் தனக்கு உளதாம் பெருமை கூறுதற்கு அமைந்தது ஓர் இயல்பின் கண்ணும்: என்றவாறு. ’ இதனால் போந்த பொருள், ‘தலைவன் இத் துணை இளிவந்தன செய்யவும், யான் நாணும் மடனும் நீங்கிற்றிலேன்’ என்று தன் பெருமை தோழிக்குத் கூறுதலாயிற்று (19) |
|
|
56 | தலைவன் கூற்று
| | | ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால், | | கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு, | | கழும முடித்து, கண் கூடு கூழை | | சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி | 5 | தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, | | ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர் | | வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார் | | உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால், | | வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்? ஆண்டார், | 10 | கடிது, இவளைக் காவார் விடுதல்: கொடி இயல், | | பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஓர் | | நல்கூர்ந்தார் செல்வ மகள்! | | இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து | | நல்லாய்! கேள்: | 15 | ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என, | | தூது உண் அம் புறவு என, துதைந்த நின் எழில் நலம் | | மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நிற் கண்டார்ப் | | பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ? | | நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என, | 20 | முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் | | வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்! நிற் கண்டார்க்கு | | அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ? | | முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என, | | பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை | 25 | மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நிற் கண்டார் | | உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ? | | என ஆங்கு, | | பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய், | | யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள், இனி: | 30 | நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப் | | போதர விட்ட நுமரும், தவறு இலர்; | | நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு, | | ‘பறை அறைந்தல்லது செல்லற்க!’ என்னா | | இறையே தவறு உடையான் |
| | ‘காமம் சாலா இளமையோள்வயின், ஏமம் சாலா இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என இரு திறத்தால், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து, சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே’ என்பதனால், தருக்கிச் சொல்லி, சொல் எதிர் பெறான் இன்புற்றது (20) |
|
|
57 | தலைவன் கூற்று
| | | வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், | | மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி | | ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, | | கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் | 5 | தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, | | வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் | | இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி: | | பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல், | | தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண், | 10 | ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், | | சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி! | | பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள், | | கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை, | | பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த | 15 | கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? கனங்குழாய்! | | வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின்மேல், | | தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்! | | மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் | | கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை | 20 | என ஆங்கு, | | இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி, | | நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே | | துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள், | | மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே |
| |
|
58 | தலைவன் கூற்று
| | | வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள், | | பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின், | | கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல், | | கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்! | 5 | நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை, | | ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்: | | உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக, | | இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், | | களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம் | 10 | வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் | | நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய் | | மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், | | இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம் | | உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் | 15 | அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய் | | சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும், | | ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம் | | செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் | | என ஆங்கு | 20 | ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய் | | பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்! | | மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி, | | நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே |
| |
|
59 | தலைவன் கூற்று
| | | தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை | | முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி, | | அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் | | துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை, | 5 | சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் | | விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை | | ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின் | | பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால | | என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி: | 10 | மருளி, யான் மருள் உற, ‘ "இவன் உற்றது எவன்?" என்னும் | | அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், | | வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ | | தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? | | உருளிழாய்! ‘ "ஒளி வாட, இவன் உள் நோய் யாது?" என்னும் | 15 | அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், | | பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ | | எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ? | | ஆய்தொடி! ' "ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?" என்னும் | | நோய் இலை இவட்கு’ என நொதுமலர் பழிக்குங்கால், | 20 | சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ | | நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ? | | என ஆங்கு, | | அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை | | இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்! | 25 | செய்ததன் பயம் பற்று விடாது; | | நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே |
| | இரந்து குறையுற்றுப் பின்னின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி ‘இங்ஙனம் வருத்துவையாயின், நீ செய் தவம் இன்றாம்’ எனக் கூறியது |
|
|
61 | தோழி கூற்று
| | | தலைவன் வருகை கண்டு, தோழி தலைவியை நோக்கிக் கூறுதல்
| | எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்: | | செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர் | | அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று, | | சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல | 5 | பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், | | மெல்ல இறைஞ்சும் தலை | | தலைவன் எதிர் சென்று, அவனை நோக்கித் தோழி வினாவுதல்
| | எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை; | | நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்! | | என், நீ பெறாதது? ஈது என்? | | தலைவன்
| 10 | சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? | | செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின், | | சாதலும் கூடுமாம் மற்று | | தோழி
| | இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்; யாது, நீ வேண்டியது? | | தலைவன்
| | பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ | 15 | மருளி மட நோக்கின் நின் தோழி என்னை | | அருளீயல் வேண்டுவல், யான் | | ‘அன்னையோ?’ என, அறியாதாள் போன்று, தலைவனுக்குத் தோழி கூறி, அவன் நீங்கிய பின்னர், தலைவியொடு உசாவுதல்
| | "அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?' | | தோழி தலைவியை நோக்கிக் குறை நயப்பித்தல்
| | ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் | | ஆயின், ஏஎ! | 20 | ‘பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி, | | மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல் | | நல்காள் கண்மாறிவிடின்’ எனச் செல்வானாம் | | எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் | | கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது | 25 | கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன் | | உள்ளம் குறைபடாவாறு |
| | தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன் குறை மறாமைக்கு ஏற்பன சொல்லி, தலைமகளைக் குறை நயப்பித்தது |
|
|
62 | தலைவனும் தலைவியும் உறழ்ந்து கூறுதல்
| | | தலைவி
| | ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு | | மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் | | தலைவன் பதிலும், தலைவி வேட்கை மறுத்து உரைத்தலும்
| | ‘மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம் | | நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற | 5 | மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் | | புல் இனிது ஆகலின், புல்லினென்’ எல்லா! | | தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா | | செய்வது நன்று ஆமோ மற்று?’ | | ‘மகளிரை வலிதிற் புணர்திற் புணர்தலும் அறநூல் வழக்கு’ என, தலைவன் மொழிதல்
| | சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்! | 10 | வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று | | உண்பவோ, நீர் உண்பவர்? | | செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ | | ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? | | ‘மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை | 15 | வௌவிக் கொளலும் அறன்’ எனக் கண்டன்று | | புணர்ச்சிக்கு உடம்பட்டு, தலைவி நெஞ்சொடு கூறுதல்
| | ‘அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி, | | கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம் | | வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு | | மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு? |
| | ‘ஏறிய மடல் திறம்’ என்னும் சூத்திரத்து ‘மிக்க காமத்து மிடல்’ என்றதனால் தலைவனும் தலைவியும் உறழ்ந்து கூறி, தலைவி கூடக் கருதிய பெருந்திணை |
|
|
64 | தலைவன் கூற்று
| | | தலைவன்
| | அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும், | | மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண் | | விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி | | அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப, | 5 | அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் | | விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப் | | பெரும் பொன் படுகுவை பண்டு | | தலைவி
| | ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில் | | எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்; | 10 | உழுவது உடையமோ, யாம்? | | தலைவன்
| | உழுதாய் | | சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின் | | திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ, | | கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே | 15 | துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த | | குவளையும், நின் உழவு அன்றோ? இகலி | | முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல, | | என் உழுவாய் நீ, மற்று இனி | | தலைவி
| | எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு; | 20 | முற்று எழில் நீல மலர் என உற்ற, | | இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம், | | பெரும் பொன் உண்டு என்பாய்! இனி | | தலைவன்
| | நல்லாய்! இகுளை! கேள்: | | ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின், | 25 | வேந்து கொண்டன்ன பல | | தலைவி ஆக!’ என உடம்பட்டுக் கூற, தலைவன் உரைத்தல்
| | ‘ஆங்கு ஆக!’ ‘அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ | | முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் | | பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ, | | முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம் | 30 | உத்தி எறிந்துவிடற்கு’ |
| | அருமை செய்து அயர்த்த தலைவன் வந்துழி, தலைவி எள்ளின இடத்து, தலைவன் அவளோடு உறழ்ந்து கூறி, நகையாடி, கூட்டத்திற்கு உடம்படுவித்தது. இதற்கு விதி ‘உயர் மொழிக்கு உரிய உறழும் கிளவி’ என்பதனுள், ‘தலைவன் உயர் மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறும்’ என்றாம் (28) |
|
|
65 | தோழி கூற்று
| | | திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும் | | பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே | | மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல், | | அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ், நம் | 5 | இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக | | தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், | | காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் | | சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, | | தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே, | 10 | பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி, | | யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென, | | வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, | | ‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன் | | பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும் | 15 | வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, | | ‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான் | | ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின், | | இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்’ | | எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப | 20 | முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, | | ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே, | | கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே, | | ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண், | | இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர் | 25 | ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன் | | காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம் | | ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் | | வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான் | | வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து |
| | ‘இரவுக் குறி அலராம்’ என்று அஞ்சி, தலைவனை நீக்கி நிறுத்தக் கருதிய தோழி,‘அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே, அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே’என்னும் சூத்திரத்தான், அல்லகுறிப்படுதல் தனக்கும் உரித்தாகலின், அவன் செய்த குறி அறிதற்குப் புறத்துச் சென்ற வழி, ஆண்டுப் பிறந்தது ஓர் செய்தியாக, ஒரு பொய்யை நாடக வழக்கும் உலகியல் வழக்கு்மாகப் புனைந்துரை வகையால் படைத்துக் கொண்டு, பிற்றை ஞான்று தலைவன் சிறைப் புறமாகத் தலைவிக்குக் கூறியது. இதனை, ‘இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி, நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும், வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும், நல் வகை உடைய நலத்தில் கூறியும், பல் வகையானும் படைக்கவும் பெறுமே’ எனப் பொருள் இயல் சூத்திரத்து,'பொய் தலைப்பெய்தலையும் படைக்கவும் பெறும்' என வழு அமைத்தவாற்றால் கொள்க. |
|
|
66 | தலைவி கூற்று
| | | வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட | | ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு, | | ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் | | ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான், | 5 | வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் | | தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை | | பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய | | பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர! | | அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ, | 10 | 'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ | | பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின் | | வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை? | | கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு | | புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ | 15 | தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் | | ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை? | | தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு | | துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ | | ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் | 20 | களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை? | | என ஆங்கு, | | அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது | | வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும், | | 'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்; | 25 | பூட்டு விடாஅ நிறுத்து |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தனது ஆற்றாமையே வாயிலாகத் தலைவி யுழைச் சென்றாற்கு, அவன் முன்பு வதுவை அயர்ந்ததூஉம், அப்பொழுது புனல் ஆடியதூஉம்,இப்பொழுது துணங்கை ஆடியதூஉம், கூறிப் புலந்தாள் தலைவி; அவள் புலந்தவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது (1) |
|
|
70 | தோழி கூற்று
| | | மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் | | அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென, | | கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை | | மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி, | 5 | துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, | | பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்: | | நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின், | | பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்; | | துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட, | 10 | மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே | | அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம் | | புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்; | | நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் | | தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே | 15 | வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே | | நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்; | | நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் | | தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே | | என ஆங்கு | 20 | மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல், | | எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர் | | இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப் | | பாணன் புகுதராக்கால்! |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது |
|
|
75 | தலைவி கூற்று
| | | 'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய | | நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், | | சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும் | | ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, | 5 | ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி | | உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, | | அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் | | தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் | | உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் | 10 | புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், | | வதுவை நாளால் வைகலும், அஃது யான் | | நோவேன், தோழி! நோவாய், நீ' என | | எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென: | | 'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச் | 15 | சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, | | விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த | | விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும் | | 'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என | | ஊடியிருப்பேனாயின், நீடாது, | 20 | அச்சு ஆறாக உணரிய வருபவன் | | பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல் | | 'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான் | | இகலியிருப்பேனாயின், தான் தன் | | முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற | 25 | புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் | | ஆங்க | | விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், | | அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும், | | ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது, | 30 | அவ்அவ் இடத்தான் அவைஅவை காண | | பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் | | மாய மகிழ்நன் பரத்தைமை | | நோவென், தோழி! கடன் நமக்கு எனவே |
| | 'தலைவன் நாள்தோறும் வதுவை அயர்ந்து வந்தால், யான் அதற்குப் பொறேனாக, நீ ஊடல் இன்றி, அவன் வந்த பொழுதே எதிர்கொள்ளுதி' என்ற தோழிக்குத் தலைமகள் அதற்குக் காரணம் கூறியது |
|
|
79 | தலைவி கூற்று
| | | புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த | | முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் | | வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர், | | அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் | 5 | வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் | | தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: | | அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; | | மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்; | | 'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின் | 10 | சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? | | புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில் | | பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்; | | மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் | | பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ? | 15 | கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி | | வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; | | 'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின் | | கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ? | | என ஆங்கு | 20 | பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, | | நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி; | | ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் | | ஈங்கு எம் புதல்வனைத் தந்து |
| | செல்லாக் காலை, 'செல்க!' எனக் கூறி விடுத்தது. அது தலைவன் இனிச் செல்லான் என்பது இடமும் காலமும் பற்றி அறிந்த காலத்து, ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள், 'செல்க!' எனக் கூறி, விடுத்து ஆற்றுதலாம் |
|
|
80 | தலைவி கூற்று
| | | நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, | | கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், | | பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி | | திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் | 5 | பவழம் புனைந்த பருதி சுமப்ப, | | கவழம் அறியா நின் கை புனை வேழம் | | புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, | | அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே | | வருக! எம் பாக மகன்! | 10 | கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் | | தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே, | | 'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார் | | வளை நெகிழ்பு யாம் காணுங்கால் | | ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் | 15 | தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, | | உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் | | எவ்வ நோய் யாம் காணுங்கால் | | ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை | | அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே, | 20 | நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் | | அல்குல் வரி யாம் காணுங்கால் | | ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும், | | போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் | | ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் | 25 | தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய | | கோதை பரிபு ஆட; காண்கும் |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி மகனுக்கு உரைத்தது |
|
|
81 | தலைவன் கூற்று
| | | புதல்வனை நோக்கித் தலைவி கூறுதல்
| | மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் | | மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர, | | பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், | | நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர, | 5 | உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் | | அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப, | | பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக் | | கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா, | | ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் | 10 | போல, வரும் என் உயிர்! | | பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய், | | பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற, | | திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப, | | மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா, | 15 | பெருந்தகாய்! கூறு, சில | | தோழியை நோக்கித் தலைவி கூறிய செய்தி
| | எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே | | வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா, | | 'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட, | | ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண | 20 | வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன் | | வாயுள்ளின் போகான்அரோ | | தலைவன் கேட்ப, தோழியை நோக்கித் தலைவி உரைத்தல்
| | உள்ளி உழையே ஒருங்கு படை விடக் | | கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை | | எள்ளுமார் வந்தாரே, ஈங்கு | | தலைவன்
| 25 | ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர் | | கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல, | | சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின் | | ஆணை கடக்கிற்பார் யார்? | | தலைவி
| | அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல், | 30 | முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி | | உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப | | எதிர் வளி நின்றாய்; நீ செல் | | தலைவன்
| | இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி | | யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின், | 35 | மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், | | தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் | | ஆ போல் படர் தக, நாம் |
| | தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்துழி, தலைவி தன் மகனைத் தழீஇ விளையாடுகின்ற விளையாட்டின்கண் தன் வரவு அறியாமைச் சென்று நின்ற தலைவன், அவள் ஊடல் உணர்வளவும் உறழ்ந்து சொல்லி, மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது |
|
|
86 | தலைவி கூற்று
| | | மை படு சென்னி மழ களிற்று ஓடை போல், | | கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ, | | பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட | | நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய் | 5 | கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல் | | பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப, | | கடி அரணம் பாயா நின் கை புனை வேழம், | | தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த | | தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என் | 10 | போர் யானை, வந்தீக, ஈங்கு! | | செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை | | நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி; | | கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும் | | வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, | 15 | 'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல், | | மென் தோள் நெகிழ விடல் | | பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக் | | கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, | | கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல், | 20 | சால்பு ஆய்ந்தார் சாய விடல் | | வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு | | ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, | | மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல், | | நோய் கூர நோக்காய் விடல் | | பின்னே மறைய நின்ற தலைவனைத் தலைவி கண்டமை | 25 | ஆங்க | | திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம் | | மகன் அல்லான் பெற்ற மகன்? | | மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர் | | தலைவன் உரையும், அப்பொழுது தலைவன் மார்பில் பாய்ந்த புதல்வன் செயல் கண்டு, தலைவி உரைத்தலும் | | 'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ? காவாது ஈங்கு | 30 | ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம் | | கன்றி அதனைக் கடியவும், கை நீவி, | | குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு, | | தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா | | அன்பிலி பெற்ற மகன் |
| | 'தந்தையார் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தம் இல் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்' என்பதனால், மகனைத் தலைவனை ஒக்கலாம் குணனும் ஒக்கலாகாக் குணனும் தலைவி கூறுகின்றுழி,மறைந்து புக்க தலைவன் அவள் ஊடல் உணர்வன சொல்ல, மகன் வாயிலாக ஊடல் தீர்வாள் தன்னுள்ளே கூறியது (21) |
|
|
87 | தலைவி கூற்று
| | | தலைவி | | ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை | | வெரூஉதும், காணுங்கடை | | தலைவன் | | தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய், | | மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு? | | தலைவி | 5 | ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்; | | இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி; | | நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் | | புலப்பார் உடையர், தவறு | | தலைவன் | | அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி; | 10 | காயும் தவறு இலேன் யான் | | தோழி | | மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது | | நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின் | | ஊடுதல் என்னோ, இனி? | | தலைவி நெஞ்சொடு கூறல் | | 'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும் | 15 | தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் | | பாடு இல் கண் பாயல் கொள |
| | பரத்தையர் சேரி் சென்றமை அறிந்திலள் எனத் தலைவிமாட்டுச் சென்றவனோடு அவள் ஊடி உறழ்ந்து கூறி, தோழி வாயிலாக ஊடல் தீர்வாள், தன் நெஞ்சொடு கூறியது |
|
|
88 | தலைவி கூற்று
| | | தலைவி | | ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற | | முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக, | | தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு | | அடியரோ ஆற்றாதவர்? | | தலைவன் | 5 | கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று? | | தலைவி | | வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது. கூறு நின் | | மாயம், மருள்வாரகத்து | | தலைவன் | | ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா | | என்கண் எவனோ, தவறு? | | தலைவி | 10 | இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், | | வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும், | | ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார் | | சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும், | | தவறாதல் சாலாவோ? கூறு | | தலைவன் | 15 | 'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை | | தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு | | தலைவி | | இனித் தேற்றேம் யாம் | | தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் | | தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி, | 20 | நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி | | யார் மேல்? விளியுமோ? கூறு |
| | அவ் ஆற்றால் புக்க தலைவனுடன் ஊடியும் உறழ்ந்தும் சொல்லி, பொய்ச் சூள் அஞ்சி, ஊடல் தீர்ந்தது |
|
|
89 | தலைவி ஊடல் தீர்தல்
| | | தலைவி | | யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் | | ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை | | வாரல்; நீ வந்தாங்கே மாறு | | தலைவன் | | என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று | 5 | போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் | | ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? | | தலைவி | | ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா! | | பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, | | வருந்தல் நின் வஞ்சம் உரைத்து | | தலைவன் | 10 | மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த, | | இன்னகை! தீதோ இலேன் | | தலைவி | | மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர் | | புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப் | | பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன் | 15 | என்று அடி சேர்தலும் உண்டு! |
| | தலைவன் 'காமத்தின் வலியும்' என்றதனால் ஆற்றாமை வாயிலாக வலிந்து புக்கு நெருங்கிக் கூடுமிடத்து, அவனுடன் தலைவி ஊடிச் சில சொல்லி, அவன் ஆற்றாமை கூறுவது கேட்டு ஊடல் தீர்ந்தது |
|
|
90 | காமக்கிழத்தி கூற்று
| | | தலைவி | | கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா, | | மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் | | பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு? | | தலைவன் | | ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு? | | தலைவி | 5 | கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, | | பாடு பெயல் நின்ற பானாள் இரவில் | | தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும், | | வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா | | ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா, | 10 | ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் | | சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின் | | போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ? | | ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர் | | தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ? | 15 | மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் | | நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ? | | 'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள் | | சீறடி தோயா இறுத்தது அமையுமோ? | | கூறு இனி; காயேமோ, யாம்? | | தலைவன் | 20 | தேறின், பிறவும் தவறு இலேன் யான்; | | அல்கல் கனவுகொல் நீ கண்டது? | | தலைவி | | 'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் | | கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று | | பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! | 25 | நின்றாய்; நின் புக்கில் பல' | | தலைவன் | | மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு | | தலைவி
| | ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை | | பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ | 30 | நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்? |
| | 'புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்' என்பதனால், தலைவன் புலப்படப் பரத்தையரிடத்து ஒழுகாது மறைந்து ஒழுகி வந்து நின்றவனுடன் காமக் கிழத்தி ஊடிச் சொல்லி, தலைமகன் ஆற்றாமை கண்டு, தன் ஆற்றமையும் சொல்லி, ஊடல் தீர்ந்தது |
|
|
91 | காமக்கிழத்தி கூற்று
| | | தலைவி
| | அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம், | | புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த | | தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் | | பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின் | 5 | இன்று நன்று, என்னை அணி | | தலைவன்
| | அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், | | ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை | | தெய்வத்தான் கண்டீ தெளிக்கு | | தலைவி
| | மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார் | 10 | செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் | | கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின் | | தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி | | அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின், | | பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும் | 15 | செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி | | தலைவன்
| | தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை | | ஆற்றின் நிறுப்பல் பணிந்து | | தலைவி
| | அன்னதேல், ஆற்றல் காண்: | | வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின், | 20 | மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் | | கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ | | மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின் | | காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய், | | பேணாய் நீ பெட்பச் செயல்? |
| |
|
92 | தலைவன் கூற்று
| | | தலைவன்
| | புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக் | | கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே: | | முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி, | | மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது, | 5 | உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; | | அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும், | | உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்ப் | | பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் | | தருதல் தகையாதால் மற்று | 10 | நனவினால் போலும், நறுநுதால்! அல்கல் | | கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் | | வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக் | | கரை அணி காவினகத்து | | தலைவி
| | உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக் | 15 | கண்டது எவன் மற்று நீ? | | தலைவன்
| | கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும் | | மட நடை மா இனம், அந்தி அமையத்து, | | இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால், | | இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன், | 20 | துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை, | | தலைவி
| | ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து | | வேட்டதே கண்டாய், கனா | | 'முற்றும் கேட்டு வெகுள்' ஏன்ற தலைவனுக்குத் தலைவி 'உரை' என்ன அவன் உரைத்தல்
| | 'கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்!' 'உரை' 'ஆண்டு | | இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக | 25 | தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் | | பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே | | சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத | | முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில் | | துனை வரி வண்டின் இனம் | 30 | மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் | | காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச, | | அவருள், | | ஒருத்தி, செயல் அமை கோதை நகை; | | ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப; | 35 | ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்; | | ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க, | | ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்; | | ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப: | | ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று | 40 | வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் | | தண் தார் அகலம் புகும் | | ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை | | முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த | | கடி கயம் பாயும், அலந்து | 45 | ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட | | மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி, | | வணங்கு காழ் வங்கம் புகும் | | ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள், | | பறந்தவை மூசக் கடிவாள், கடியும் | 50 | இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை | | ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக் | | கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல், | | தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு | | வண்டலவர்; கண்டேன், யான்' | | தலைவி
| 55 | நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் | | முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண் | | கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான் | | செய்வது இல் என்பதோ? கூறு | | தலைவன்
| | பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் | 60 | நல் வாயாக் காண்டை நறுநுதால்! 'பல் மாணும் | | கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப் | | பிரிந்தீர்! புணர் தம்மின்' என்பன போல, | | அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில் | | ஆனாது அகவும் பொழுதினான், மேவர, | 65 | நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் | | தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார், | | ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு | | வேனில் விருந்து எதிர்கொண்டு |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் பெறாது ஆற்றாமை வாயிலாகப் புக்கு,தலைவியை நயப்பித்தல் காரணமாக, 'தெய்வ மகளிர் பொய்தல் அயர்வது ஓர் கனாக் கண்டேன்;அது நன் வாயாப் பருவம் வந்து இறுத்தது பாராய்' என ஊடல் தீர்வது பயனாகத் தலைவிக்குக் கூறியது (27) |
|
|
93 | தலைவியின் புலவி
| | | தலைவி
| | வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, | | தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப! | | பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய, | | கண்டது எவன்? மற்று உரை | | தலைவன்
| 5 | நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் | | உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் | | கடவுளர்கண் தங்கினேன் | | தலைவி
| | சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ | | கடவுண்மை கொண்டு ஒழுகுவார் | 10 | அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் | | தலைவன் கூற்றும் தலைவியின் மாற்றமும்
| | 'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால், | | "இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய | | அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும் | | நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் | 15 | மாயமோ; கைப்படுக்கப்பட்டாய் நீ; கண்டாரை | | வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி: | | பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப, | | பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு | | இறு முறை செய்யும் உருவொடு, நும் இல், | 20 | செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ? | | நறுந் தண் தகரமும் நானமும் நாறும் | | நெறிந்த குரற் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப, | | நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ | | பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ? | 25 | ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் | | சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும், | | ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு | | மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ? | | கண்ட கடவுளர்தம்முளும், நின்னை | 30 | வெறி கொள் வியல் மார்பு வேறாகச் செய்து, | | குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும் | | சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்! | | தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல், | | நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய | 35 | நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும் | | முட்டுப்பாடு ஆகலும் உண்டு' |
| | 'காவற் பாங்கின் ஆங்கு ஓர் பக்கமும், என்புழி, 'ஆங்கு ஓர் பக்கமான கடவுளரைக் கண்டு தங்கினேன்' என்ற தலைவற்கு, 'நீ கண்ட கடவுளர் இவர்' எனக் கூறிப் புலந்தது |
|
|
95 | தலைவி கூற்று
| | | தலைவி
| | நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ | | நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி, | | ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே | | மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப | | தலைவன்
| 5 | செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த | | குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும் | | அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது | | தலைவி
| | குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்; | | புதுவன ஈகை வளம் பாடி, காலின் | 10 | பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின் | | இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன | | ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின், | | தபுத்த புலர்வில் புண் | | ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின் | 15 | தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு, | | போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும் | | பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம் | | ஈரமாய்விட்டன புண் | | கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின் | 20 | துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் | | ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே | | கொட்டிக் கொடுக்கும் குறிப்பு | | தலைவன்
| | ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை | | போற்றிய, நின் மெய் தொடுகு | | தலைவியின் இகழ்ச்சியும் தலைமகன் மாற்றமும்
| 25 | 'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று | | அறிகல்லாய் போறிகாண், நீ | | நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து, | | கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி' | | 'அருள்' என்ற தலைவனுக்குத் தலைவி
| | அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள? | 30 | அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் | | விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி | | விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்; | | நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ் |
| | 'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ, பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைப் பூழ் ஆக்கிக் கூறியது |
|
|
96 | தலைவி கூற்று
| | | தலைவி, 'யாங்குச் சென்று வந்தாய்' என, தலைவன் உரைத்த பதில்
| | 'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்; | | பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; | | சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை; | | யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி: | 5 | ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! | | குதிரை வழங்கி வருவல்' | | தலைவி
| | அறிந்தேன், குதிரைதான்; | | பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல், | | மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை, | 10 | நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் | | ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை, | | மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற | | உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி, | | நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை, | 15 | தார் மணி பூண்ட தமனிய மேகலை, | | நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த | | வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ | | காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை, | | ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள், | 20 | ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, | | வாதுவன்; வாழிய, நீ! | | சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட | | மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண் | | குதிரையோ, வீறியது? | 25 | கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே | | கோரமே வாழி! குதிரை | | வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் | | குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண் | | குதிரையோ, கவ்வியது? | 30 | சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே | | வியமமே வாழி! குதிரை | | மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை; | | பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட | | பருமக் குதிரையோ அன்று; பெரும! நின் | 35 | ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் | | வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி | | உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை | | பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த் | | திரி; குதிரை ஏறிய செல் |
| | 'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ,பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைக் குதிரையாக்கிக் கூறியது |
|
|
97 | தலைவி கூற்று
| | | தலைவி
| | அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ | | என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான் | | சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த | | அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர, | 5 | 'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல் | | தலைவன்
| | முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர் | | புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன் | | 'புதிய யானை காணத் தங்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி
| | ஒக்கும் | | அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்: | 10 | அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு | | ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை, | | தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு, | | தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி, | | உத்தி பொறித்த புனை பூண் பருமத்து | 15 | முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, | | நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து, | | தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும், | | தொடர் தொடராக வலந்து; படர் செய்யும் | | மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார் | 20 | நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை | | இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ? | | எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித் | | தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ | | குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா, | 25 | உவா அணி ஊர்ந்தாயும் நீ | | மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் | | நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ | | சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் | | சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல, | 30 | விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை | | கடாஅம் படும்; இடத்து ஓம்பு |
| | 'கொடியோர் கொடுமை சுடும் என .............. பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரை யானையாகக் கூறிப் புலந்தது. |
|
|
98 | தலைவி கூற்று
| | | தலைவி
| | யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும் | | புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ | | வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் | | மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர, | 5 | பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் | | பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை | | காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் | | கேட்டும் அறிவேன்மன், யான் | | தலைவன்
| | தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் | 10 | பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை | | வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் | | செய்யா மொழிவது எவன்? | | தலைவி
| | ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே | | நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, | 15 | மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக, | | கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம், | | நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ் | | யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை, | | பாணன் புணையாகப் புக்கு | 20 | ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, | | வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி, | | குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே | | போர்த்த சினத்தான் புருவத் திரை இடா, | | ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச் | 25 | சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, | | ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர் | | ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க, | | புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் | | கரை கண்டதூஉம் இலை | | தலைவன்
| 30 | நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன் | | வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத் | | தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச் | | செய்யா மொழிவது எவன்? | | தலைவி
| | மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் | 35 | பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக் | | களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு | | இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் | | முறுவலார்க்கு ஓர் நகை செய்து |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ஆற்றாமையே வாயிலாகச் சென்றுழி, அவனைக் கண்டு, 'நீ தாழ்த்த காரணம் என்?' என, 'புதுப் புனல் ஆடித் தாழ்த்தது' என்ன, தலைவி, 'இன்ன புதுப் புனலே ஆடியது' என நெருங்கிக் கூறியது |
|
|
102 | தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று
| | | தலைவன்
| | கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற | | தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும், | | வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும், | | அன்னவை பிறவும், பல் மலர் துதைய, | 5 | தழையும் கோதையும் இழையும் என்று இவை | | தைஇயினர், மகிழ்ந்து, திளைஇ விளையாடும் | | மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு | | என் உயிர் புக்கவள், இன்று? | | பாங்கன்
| | ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால், | 10 | திரு மா மெய் தீண்டலர்' என்று, கருமமா, | | எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும் | | சொல்லால் தரப்பட்டவள் | | சுற்றத்தார்க்குத் தலைவன் செய்தி சொல்லி அனுப்ப, அவர், 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' எனல்
| | 'சொல்லுக!' 'பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார், பாரித்தார், | | மாணிழை ஆறாகச் சாறு | | கண்ட சுற்றத்தார் கூற்று
| 15 | சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய்! எல்லாம் | | மிடை பெறின், நேராத் தகைத்து | | தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன் | | எதிர்எதிர் சென்றார் பலர் | | கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து, | 20 | உருத்து எழுந்து ஓடின்று மேல் | | எழுந்தது துகள்; | | ஏற்றனர் மார்பு; | | கவிழ்ந்தன மருப்பு; | | கலங்கினர் பலர் | 25 | அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ | | எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி, | | வருத்தினான்மன்ற, அவ் ஏறு | | ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ | | ஏறு உடை நல்லார்: பகை? | 30 | மடவரே, நல் ஆயர் மக்கள் நெருநை, | | அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும், | | உடல் ஏறு கோள் சாற்றுவார்! | | ஆங்கு, இனி | | தண்ணுமைப் பாணி தளராது எழூஉக | 35 | பண் அமை இன் சீர்க் குரவையுள், தெண் கண்ணி, | | திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி, | | அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த | | முறுவலாள் மென் தோள் பாராட்டி, சிறுகுடி | | மன்றம் பரந்தது, உரை! |
| | ஆயன் தலைவனாய் ஏறு தழுவினமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது. |
|
|
103 | தோழி கூற்று
| | | பொதுவர் ஏறு தழுவுதல்
| | மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும், | | புல் இலை வெட்சியும், பிடவும், தளவும், | | குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும் | | கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர், | 5 | பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார் | | முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன | | பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த | | சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர், | | நல்லவர் கொண்டார், மிடை | 10 | அவர் மிடை கொள | | மணி வரை மருங்கின் அருவி போல | | அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும், | | மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் | | வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும், | 15 | கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் | | வளையுபு மலிந்த கோடு அணி சேயும், | | பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து | | அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும், | | பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ, | 20 | படு மழை ஆடும் வரையகம் போலும் | | கொடி நறை சூழ்ந்த தொழூஉ | | தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் | | தெரிபு தெரிபு குத்தின, ஏறு | | ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி, | 25 | எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் | | உருவ மாலை போல, | | குருதிக் கோட்டொடு குடர் வலந்தன | | தோழி தலைவிக்குக் காட்டல்
| | கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன், | | ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண் | 30 | செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை | | முந் நூலாக் கொள்வானும் போன்ம் | | இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்: | | கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான் | | போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு, | 35 | தார் போல் தழீஇயவன்? | | இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்; | | கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான் | | மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி | | ஊர்வான் போல் தோன்றுமவன்? | 40 | தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை | | ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன் | | மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை | | ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு, | | சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல் | 45 | கூற்று என: உட்கிற்று, என் நெஞ்சு | | இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்: | | புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி | | வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள் | | மறுப் போல் பொருந்தியவன்? | 50 | ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற | | சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும் | | காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை | | மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை | | வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல் | 55 | மாயோன் என்று: உட்கிற்று, என் நெஞ்சு | | 'குரவை ஆடுவோருடன் கூடி, ஆடிப் பாடித் தெய்வம் பரவுவோம்' எனத் தோழி தலைவியை அழைத்தல்
| | ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும் | | மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும் | | ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே | | மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ | 60 | பயில் இதழ் மலர் உண்கண் | | மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் | | தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ | | கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் | | புல்லாளே, ஆய மகள் | 65 | அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, | | நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து | | நைவாரா ஆய மகள் தோள் | | வளியர் அறியா உயிர், காவல் கொண்டு, | | நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு | 70 | எளியவோ, ஆய மகள் தோள்? | | விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர் | | கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின் | | முலையிடைப் போல, புகின் | | ஆங்கு, | 75 | குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, | | தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும் | | மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம் | | ஆளும் கிழமையொடு புணர்ந்த | | எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே! | | | ஆயர் ஏறு தழுவி நின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டி,பின்னர், அவர் ஏறு தழுவிவிட்டுக் குரவை ஆடுகின்றமையும் கூறி, 'ஆண்டு யாமும் சென்று, நின்னை ஏறு தழுவிக் கோடற்கு நிற்கின்ற தலைவன் கேட்டு, ஏறு தழுவிக் கொள்ளுமாறு, நமக்குச் சுற்றத்தார் கூறிக் கிடக்கின்ற முறைமையைப் பாட்டிலே தோன்றப் பாடி, குரவை ஆடி, ''வழுதி வாழ்க!'' என்று தெய்வம் பராவுதும்' நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாக!' எனக் கூறியது (3) | |
|
108 | அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று
| | | தலைவன்
| | இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல | | அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி, | | நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி, | | கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு, | 5 | அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், | | 'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட | | இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்? | | தலைவி
| | அஃது அவலம் அன்று மன | | ஆயர் எமர் ஆனால், ஆய்த்தியேம் யாம், மிக; | 10 | காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை, | | மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர் | | ஆயனை அல்லை; பிறவோ அமரருள் | | ஞாயிற்றுப் புத்தேள் மகன்? | | தலைவன்
| | அதனால் வாய்வாளேன்: | 15 | 'முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன | | பல்லும் பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும், | | நல்லேன், யான்' என்று, நலத்தகை நம்பிய | | சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்? | | தலைவி
| | சொல்லாதி | | 'போகாமல் உன்னை விலக்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி
| 20 | 'நின்னைத் தகைத்தனென்,' 'அல்லல் காண்மன் | | மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே, | | கண்ட பொழுதே கடவரைப் போல, நீ | | பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நிற் | | கொண்டது எவன் எல்லா! யான்?' | | தலைவன்
| 25 | கொண்டது: | | அளை மாறிப் பெயர்தருவாய்! அறிதியோ? அஞ் ஞான்று, | | தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல், | | இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம் | | களமாக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ? | | தலைவி
| 30 | நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்? | | புனத்துளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? | | இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? | | தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ? | | தலைவன்
| | அனைத்து ஆக | 35 | வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி, | | அண்ணணித்து ஊர் ஆயின், நண்பகல் போழ்து ஆயின், | | கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை | | மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன | | வெயிலொடு, எவன், விரைந்து சேறி? உதுக்காண்: | 40 | பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின் | | தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடி, | | பனிப் பூந் தளவொடு முல்லை பறித்து, | | தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி, | | பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு | | தலைவி
| 45 | இனிச் செல்வேம், யாம் | | மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர் | | நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை, அவை: | | ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக் | | காமுற்றுச் செல்வாய்; ஓர் கட்குத்திக் கள்வனை; | 50 | நீ எவன் செய்தி, பிறர்க்கு? | | யாம் எவன் செய்தும், நினக்கு? | | தலைவன்
| | கொலை உண்கண், கூர் எயிற்று, கொய் தளிர் மேனி, | | இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார் | | நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி; | 55 | மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் | | தலையினால் தொட்டு உற்றேன், சூள் | | தலைவி
| | ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் | | தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் | | வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை, | 60 | காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத் | | தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை, | | ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக் | | காஞ்சிக்கீழ்ச் செய்தேம் குறி |
| | 'அடியோர் பாங்கினும் வினை வல பாங்கினும், கடிவரை இல புறத்து என்மனார் புலவர்'என்பதனால், பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்ல அகப்புறத் தலைவனும் தலைவியும் முன் ஒருகால் கூடி, பின்னர் அவன் எதிர்ப்பட்டுழி, அவன்வயின் பரத்தமையால் ஊடி, குறி நேர்ந்தது(8) |
|
|
109 | வினை வல பாங்கின் தலைவன் கூற்று
| | | கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப் | | பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி, | | நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும், | | போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில் | 5 | தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள் | | பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல், | | மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும் | | சொல்லியாள் அன்றே வனப்பு | | பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய | 10 | கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் | | புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும் | | கண்ணளோ? ஆயர் மகள் | | இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி, | | வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை | 15 | ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது | | நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு | | இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் | | உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ? | | படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும் | 20 | பாலொடு கோட்டம் புகின் | | இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள் | | 'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர், | | 'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும் | | எழு நின் கிளையொடு போக' என்று தத்தம் | 25 | கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும், | | வாயில் அடைப்ப, வரும் |
| | வினை வல பாங்கின் தலைவியைக் கண்ட வினை வல பாங்கின் தலைவன் 'காமம் சாலா இளமையோள் வயின்,ஏமம் சாலா இடும்பை எய்தி', கூறியது |
|
|
110 | வினைவல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
| | | 'எம்மை எளியமாக் கருதினையோ?' என்ற தலைவியை நோக்கித் தலைவன் உரைத்தல்
| | 'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர் | | குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா! | | இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத் | | துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத் | 5 | திளைத்தற்கு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள் | | வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்! | | ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக | | அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து, | | நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்! | 10 | மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம் | | சுற்றிச் சுழலும் என் நெஞ்சு | | விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது, | | கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் | | கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும், | 15 | நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு | | எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும், | | நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி, | | கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி | | அறியாது அளித்து என் உயிர்' | | தலைவி
| 20 | அன்னையோ? மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை | | இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்; | | நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும் | | கன்றொடு சேறும், புலத்து |
| | வினை வல பாங்கினால் வெண்ணய் நொடைக்குச் சென்ற தலைவியைக் கண்டு வினை வல பாங்கின் தலைவன் மெய் தீண்டி, தனது ஆற்றாமையை அறிவித்துழி, அவள், 'ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்' என இடம் கூறியது |
|
|
112 | வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
| | | தலைவி
| | யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர் | | பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க் | | கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு | | சொல்லல் ஓம்பு என்றார், எமர் | | தலைவன்
| 5 | எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் | | நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின், | | விடாஅல்; ஓம்பு' என்றார், எமர் | | தலைவி
| | கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர் | | பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட, | 10 | நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும் | | வல்லர், எமர்கண் செயல் | | தலைவன்
| | ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல், | | வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை | | இகழ்ந்தாரே அன்றோ, எமர்? | | தலைவி
| 15 | ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு | | 'என்னை முயங்கு' என்ற தலைவனை நோக்கித் தலைவி உரைத்தல்
| | 'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்! | | நின்னை, "என் முன் நின்று, | | சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ | | புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல | 20 | முயங்கு; நின் முள் எயிறு உண்கும். ' எவன்கொலோ? | | மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம் | | வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின், | | சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின் | | ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள் | 25 | சாயினும், ஏஎர் உடைத்து.' |
| | வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, வினை வல பாங்கின் தலைவன் விலக்கி,நகையாடி, இருவரும் சில மொழி கூறியவழி, அவள் கூட்டத்திற்கு உடம்பட்டது. இது கைக்கிளை |
|
|
113 | வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
| | | தலைவன்
| | நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள், | | அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ, | | உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் | | தலைவி
| | பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய் | 5 | யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி? | | தலைவன்
| | தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப் | | புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான் | | தலைவி
| | ஒக்கும்மன் | | புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு | 10 | நல் இனத்து ஆயர், எமர் | | தலைவன் கூற்றும் தலைவி மாற்றமும்
| | 'எல்லா! | | நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்' | | 'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு' | | தலைவன்
| | விடேன். | 15 | உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு, | | மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்! | | நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு | | என் நெஞ்சம் ஏவல் செயின்? | | தலைவி
| | 'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய | 20 | காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார் | | பொய்ம் மொழி தேறுவது என்? | | தலைவன்
| | தெளிந்தேன், தெரியிழாய்! யான் | | பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில், | | அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி, | 25 | முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை | | இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று, | | உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண் | | நல் ஏறு நாகுடன் நின்றன, | | பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே |
| | வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, அவளை வினை வல பாங்கின் தலைவன் விலக்கி, அவளோடு சிறிது கூறியவழி, அவள் கூடலுறுகின்றாள் கூறியது, இது கைக்கிளை |
|
|
114 | தலைவி கூற்று
| | | தலைவி
| | வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த | | ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ | | புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால், | | வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா | 5 | ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ | | தோழி! அவனுழைச் சென்று | | தோழி
| | சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி | | தலைவி
| | 'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா! | | நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று; | 10 | நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச் | | சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு | | தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி, | | எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும் | | பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய | 15 | வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த | | திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த | | ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும் | | தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த | | விரி நீர் உடுக்கை உலகம் பெறினும், | 20 | அரு நெறி ஆயர் மகளிர்க்கு | | இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே? | | | 'ஆங்கு அதன் புறத்துப் புரைபட வந்த, மறுத்தலொடு தொகைஇ' என்பது, அவன் வரைவு வேண்டின இடத்து, அவ் வரைவு புறத்ததாகிய வழி, தலைவி தன் உயர்வு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே முன் கூறியவற்றைத் தொகுத்து' என்று பொருள் கூறி, 'அதன் புறம் எனவே, அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவு ஆயிற்று' என்றாம். உயர்வு குடிப் பிறப்பும் கற்பும்; அதற்கு ஏற்ப, 'பிறர் வரைவு மறுத்து, தலைவன் வரையுமாறு நீ கூறு' எனத் தோழிக்குக் கூறியது (14) |
|
|
116 | வினை வல பாங்கின் தலைவனும் தலைவியும்
| | | தலைவி
| | பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம் | | தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை | | முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ | | என்னை ஏமுற்றாய்? விடு | | தலைவன்
| 5 | விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் | | கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில் | | நீங்கி, சினவுவாய் மற்று | | தலைவி
| | நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு, | | வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு | | தலைவன்
| 10 | யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின் | | கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான், | | நீ அருளி நல்கப் பெறின் | | தலைவி
| | நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ' | | கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம் | 15 | மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! | | கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும் | | வருவையால் நாண்இலி! நீ | | | வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு விலக்கிய தலைவனோடு அவள் சில மொழி, கூறி, குறியிடம் கூறியது |
|
|
117 | தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்
| | | கையில் உள்ளது யாது?' எனத் தலைவியைத் தலைவன் வினாவுதல்
| | மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ, | | பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின் | | முதிரா இள முகை ஒப்ப, எதிரிய | | தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின் | 5 | கையது எவன்? மற்று உரை | | தலைவியின் விடையும் தலைவன் வினாவும்
| | 'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர் | | மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர் | | போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள? | | காண் தக்காய்! எற் காட்டிக் காண்.' | | தலைவி
| 10 | காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு | | காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை | | தலைவன்
| | முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்! | | எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்; | | 'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு | 15 | மெல்லியது, ஓராது அறிவு | | | ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது |
|
|
120 | கண்டார் கூற்று
| | | 'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான், | | வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய | | இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர | | உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை | 5 | இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக் | | கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப | | தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக, | | நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை, | | கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை! | 10 | மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண், | | வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல், | | அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ? | | மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி, | | போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல், | 15 | ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ? | | மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண், | | வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல், | | காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ? | | என ஆங்கு, | 20 | இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை, | | துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர | | மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை | | ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும் | | நல் இறை தோன்ற, கெட்டாங்கு | 25 | இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே |
| | பிரிவிடை ஆற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு, கழிய ஆற்றாளாயின இடத்து, தலைவன் வரவும் அவளது அக மலர்ச்சியும் கண்டார் கூறியது |
|
|
121 | தோழி கூற்று
| | | ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது, | | தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம், | | தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர, | | புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று, | 5 | வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி | | பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப! | | தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற, | | தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே | | உறையொடு வைகிய போது போல், ஒய்யென | 10 | நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு | | வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு | | ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே | | கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ | | இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு | 15 | இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி, | | தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே | | ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும் | | நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு | | என ஆங்கு | 20 | எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை | | மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து, | | சாயினள் வருந்தியாள் இடும்பை | | பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே |
| | தலைவன் ஒருவழித் தணந்த இடத்துத் தலைவி ஆற்றாமை கூறி, வரையக் கருதினாய் ஆயின், 'இஃது இடம்' எனச் சொல்லியது |
|
|
122 | தலைவி கூற்று
| | | 'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற, | | போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப, | | காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி, | | சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை; | 5 | பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; | | அலவலை உடையை' என்றி தோழீ! | | கேள், இனி: | | மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன் | | காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், | 10 | பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் | | நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் | | இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன் | | தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், | | அருளி அவன் சிறிது அளித்தக்கால், என் | 15 | மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் | | ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன் | | உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், | | புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என் | | அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் | 20 | அதனால், | | யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த | | காம நோயின் கழீஇய நெஞ்சம் | | தான் அவர்பால் பட்டதாயின், | | நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே |
| | 'காமம் சாலா இளமையோள்வயின்' பின் களவொழுக்கம் ஒழுகிய தலைவன் இடையிட்டுப் பிரிந்து,தொன் முறை மனைவியரொடு புணர்ச்சி எய்தி இருந்தானாக, அதனை அறிந்து ஆற்றாளாய தலைவி ஆற்றாமையைக் கண்டு வினாய தோழிக்கு, அத் தலைவி அவன் ஒழுகுகின்றவாறும், தன் நெஞ்சு அவன் வயத்தது ஆயவாறும்,கூறியது. 'மறையின் வந்த மனையோள் செய்வினை, பொறை இன்று பெருகிய பருவரற்கண்னும்'என்பதனாலும், 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை' என்னும் சூத்திரத்தானும் உணர்க. (5) |
|
|
123 | தலைவி கூற்று
| | | கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும் | | சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத, | | ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு | | அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல், | 5 | பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல் | | காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான், | | மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ | | காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே! | | கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை, | 10 | அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ | | புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே! | | வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான், | | செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ | | அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே! | 15 | என ஆங்கு | | எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ் | | அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ, | | இருங் கழி ஓதம் போல் தடுமாறி, | | வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே! |
| | காப்பு மிகுதிக்கண் ஆற்றாத தலைவி தலைவன்பால் சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறியது |
|
|
130 | வாயில்கள் கூற்று
| | | 'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும், | | இவனின் தோன்றிய, இவை' என இரங்க, | | புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட | | அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல், | 5 | நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல, | | கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், | | பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை | | இம் மாலை, | | ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என் | 10 | கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! | | இம் மாலை, | | இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என் | | அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்! | | இம் மாலை, | 15 | கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என் | | பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்! | | என ஆங்கு, | | படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை, | | குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை | 20 | விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் | | தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே |
| | பிரிவிடை ஆற்றாத தலைவியது ஆற்றாமை தலைவன் வந்து சார்தலின் நீங்கினமை கண்டு, வாயில்கள் தம்முள்ளே கூறியது |
|
|
133 | தோழி கூற்று
| | | மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் | | கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல், | | சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த | | நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் | 5 | பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்: | | 'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; | | 'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; | | 'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்; | | 'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை; | 10 | 'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; | | 'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை; | | 'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை; | | 'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்; | | 'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்; | 15 | ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி | | நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க! | | தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; | | நின்தலை வருந்தியாள் துயரம் | | சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே! |
| | 'வரைவு உடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும்' என்பதனால், தலைவன் தெருளாதவனைத் தெருட்டி, வரைவு கடாயது |
|
|
134 | வாயில்கள் கூற்று
| | | மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண் தார் அகலத்தோன், | | ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின், | | கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், | | கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின், | 5 | இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல, | | பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர, | | போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய், | | பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப, | | ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற, | 10 | இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை | | தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், | | இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே, | | கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி, | | அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ? | 15 | நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், | | கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, | | நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி, | | இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ? | | வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், | 20 | கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, | | மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி, | | எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ? | | என ஆங்கு, | | கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன் | 25 | திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு, | | விரைவனர் காதலர் புகுதர, | | நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே |
| | பிரிவிடை மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, 'இவ் வகைப்பட்டனவும் நமது இடுக்கண் கண்டு எவ்வம் கொண்டன போன்ற; அவரும் நமக்கு அருளுவார் கொல்லோ?' எனச் சொல்லிய நேரத்துக்கண், தலைவன் புக, அவ்வளவில் அவள் அவலம் நீங்கினமை கண்டு, வாயில்கள் தம்முள்ளே கூறியது (17) |
|
|
137 | தலைவி கூற்று
| | | அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; | | பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே; | | பலவே யாமம்; பையுளும் உடைய; | | சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்; | 5 | அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, | | எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின் | | அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே | | மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம் | | சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை | 10 | வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை | | வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை! | | வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய், | | நகை முதலாக, நட்பினுள் எழுந்த | | தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை | 15 | வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, | | பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை! | | பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய், | | நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம் | | சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப் | 20 | பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் | | தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை! | | தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய் | | ஆங்கு | | அன்னர் காதலராக, அவர் நமக்கு | 25 | இன் உயிர் பேர்த்தரும மருத்துவர் ஆயின், | | யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம் | | தாங்குதல் வலித்தன்று ஆயின், | | நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே |
| | வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தலைவி ஆற்றாமையை அவள்தன்னாலே தலைவற்கு அறிவிக்கல் உற்ற தோழி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை வற்புறுக்க, அவள் வன்புறை எதிர் அழிந்து கூறியது |
|
|
138 | தலைவன் கூற்று
| | | எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் | | தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு, | | அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு, | | வறிதாக பிறர் என்னை நகுபவும், நகுபு உடன், | 5 | மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி | | என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி, | | தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்கொலோ? | | மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை | | அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து, | 10 | மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன் | | எல்லீரும் கேட்டீமின் என்று | | படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை, | | நல்கியாள், நல்கியவை | | பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த | 15 | நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற | | உப்பு இயல் பாவை உறை உற்றது போல, | | உக்குவிடும் என் உயிர் | | பூளை, பொல மலர் ஆவிரை வேய் வென்ற | | தோளாள் எமக்கு ஈத்த பூ | 20 | உரிது என் வரைத்து அன்றி, ஒள்ளிழை தந்த | | பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த | | நெய்யுள் மெழுகின் நிலையாது, பை பயத் | | தேயும் அளித்து என் உயிர் | | இளையாரும், ஏதிலவரும் உளைய, யான் | 25 | உற்றது உசாவும் துணை | | என்று யான் பாடக் கேட்டு, | | அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் | | துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற | | இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று, | 30 | அடங்கு அருந் தோற்றத்து அருந் தவம் முயன்றோர் தம் | | உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே |
| | மடல் ஊர்ந்து தலைவியை எய்திய தலைவன் தான் மடல் ஊர்ந்தவாறும், அவளை எய்தியவாறும், தனக்குப் பாங்காயினார்க்குக் கூறியது |
|
|
139 | தலைவன் கூற்று
| | | சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும் | | பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் | | சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த | | சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற | 5 | துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, | | ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் | | நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன், | | அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் | | பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப, | 10 | ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் | | தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக | | வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது, | | பாடுவேன், பாய் மா நிறுத்து | | யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப, | 15 | 'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் | | தே மொழி மாதர் உறாஅது உறீஇய | | காமக் கடல் அகப்பட்டு | | உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல் | | உறீஇயாள் ஈத்த இம் மா | 20 | காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என் | | ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் | | 'மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது | | ஆணையால் வந்த படை | | காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் | 25 | எழிநுதல் ஈத்த இம் மா | | அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும் | | வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ | | முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் | | தகையால் தலைக்கொண்ட நெஞ்சு! | 30 | அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற, | | நேரிழை ஈத்த இம் மா | | ஆங்கு அதை, | | அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம் | | ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர் | 35 | உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் | | உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என் | | துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே |
| | மடல் ஏறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறியது |
|
|
140 | தலைவன் கூற்று
| | | கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, | | பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது | | மா என்று உணர்மின்; மடல் அன்று: மற்று இவை | | பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த | 5 | புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, | | பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, | | அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி: | | நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய | | வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம் | 10 | இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு | | அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்; | | அன்னேன் ஒருவனேன், யான் | | என்னானும், 'பாடு' எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே, | | 'ஆடு' எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ | 15 | என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, | | நன்னுதல் ஈத்த இம் மா? | | திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், | | தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல் | | ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் | 20 | கண்டும், கண்ணோடாது, இவ் ஊர் | | தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் | | பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண் | | வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் | | உணர்ந்தும், உணராது, இவ் ஊர் | 25 | வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் | | அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச் | | செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம் | | அறிந்தும், அறியாது, இவ் ஊர் | | ஆங்க | 30 | என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண் | | தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன | | மருளுறு நோயொடு மம்மர் அகல, | | இருளுறு கூந்தலாள் என்னை | | அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே |
| | 'மடல் ஏறுவேன்' என்ற தலைவன் கண்டார்க்குக் கூறியது |
|
|
141 | தலைவன் கூற்றும் கண்டோர் கூற்றும்
| | | அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் | | வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே, | | அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன் | | திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று | 5 | அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி | | அணி நலம் பாடி வரற்கு | | ஓரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி | | நீருள் நிழல் போல், கொளற்கு அரியள் போருள் | | அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல் | 10 | மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்! | | பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை, | | மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் | | புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் | | இன்னா இடும்பை செய்தாள் அம்ம, சான்றீர்! | 15 | கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ | | பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு? | | இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும் | | கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின் | | வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் | 20 | கல்லாமை காட்டியவள் வாழி, சான்றீர்! | | என்று, ஆங்கே, | | வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட, | | திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே, | | பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை | 25 | போல, கொடுத்தார், தமர் |
| | இரந்து பின்னின்ற தலைவன் மடல் ஏறியவழி, அவள் தமர் அஞ்சி, தலைவியைக் கொண்டு வந்து கொடுத்தலைக் கண்டோர் கூறியது |
|
|
148 | தலைவியின் வருத்த மிகுதி கண்டோர் கூற்று
| | | தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு, | | வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல், | | கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர; | | அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, | 5 | மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; | | இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப; | | செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை! | | மாலை நீ | | இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்; | 10 | அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய | | துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு? | | மாலை நீ | | கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்; | | நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண் | 15 | அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? | | மாலை நீ | | எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை; | | பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி, | | திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு? | 20 | என ஆங்கு | | ஆய் இழை மடவரல் அவலம் அகல, | | பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல, | | போய் அவர் மண் வௌவி வந்தனர் | | சேய் உறை காதலர் செய் வினை முடித்தே |
| | 'வெளிப்படை தானே கற்பினொடு ஒப்பினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக,வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை' என்பதனான், அரசன் மண் கோடற்கு ஏவுதலின்,வாளாண் எதிரும் பிரிவின் கண், தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழி,அவள் வருத்த மிகுதி கண்டார் கூறியது (31) |
|
|