பக்கம் எண் :

களிற்றியானை நிரை1

அகநானூறு

மூலமும் உரையும்

கடவுள்வாழ்த்து

கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த
1 கண்ணியன்
மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
நுதல திமையா நாட்டம் இகலடடுக்
5.கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே
ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
செவ்வா னன்ன மேனி அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்
10.றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
15.யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

-பாரதம் பாடிய பெருந்தேவனார்.

(சொற்பொருள்) 8-15. செவ்வான் அன்னமேனி - சிவந்த வானை யொத்த திருமேனியினையும், அவான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று -அவ்வானில் விளங்கும் பிறையை யொத்த வளைந்தவெள்ளிய கூரிய எயிற்றினையும், எரி அகைந்தன்னஅவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடுசுடரு சென்னி நெருப்புக் கப்புவிட் டெரிந்தாலொத்த விட்டு விளங்கம் முறுக்குண்ட சடைஇளம்பிறையுடன் ஒளிரும் சென்னியினை யுமுடைய, மூவாஅமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியா -மூப்புறாத தேவரும் முனிவரு ஏனோரும் ஆகிய யாவரும்அறியாத, தொல்முறை மரபின்-பழமையாகியதன்மையையுடைய, வரிகிளர்வயமான் உரிவை தைஇய-கோடுகள்விளங்கும் வலிய புலியின் தோலை யுடுத்த, யாழ் கெழுமணி மிடற்று-மறையிசை பொருந்திய நீலமணிபோலும்திருமிடற்றனையுடைய, அந்தண்ன் - அந்தணனாகியசிவபிரான்;


(பாடம்) 1. ததைந்த.