அகநானூறு மூலமும் உரையும் கடவுள்வாழ்த்து | கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த1 கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலடடுக் | 5. | கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செவ்வா னன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற் | 10. | றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய | 15. | யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே. | | -பாரதம் பாடிய பெருந்தேவனார். |
(சொற்பொருள்) 8-15. செவ்வான் அன்னமேனி - சிவந்த வானை யொத்த திருமேனியினையும், அவான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று -அவ்வானில் விளங்கும் பிறையை யொத்த வளைந்தவெள்ளிய கூரிய எயிற்றினையும், எரி அகைந்தன்னஅவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடுசுடரு சென்னி நெருப்புக் கப்புவிட் டெரிந்தாலொத்த விட்டு விளங்கம் முறுக்குண்ட சடைஇளம்பிறையுடன் ஒளிரும் சென்னியினை யுமுடைய, மூவாஅமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியா -மூப்புறாத தேவரும் முனிவரு ஏனோரும் ஆகிய யாவரும்அறியாத, தொல்முறை மரபின்-பழமையாகியதன்மையையுடைய, வரிகிளர்வயமான் உரிவை தைஇய-கோடுகள்விளங்கும் வலிய புலியின் தோலை யுடுத்த, யாழ் கெழுமணி மிடற்று-மறையிசை பொருந்திய நீலமணிபோலும்திருமிடற்றனையுடைய, அந்தண்ன் - அந்தணனாகியசிவபிரான்;
(பாடம்) 1. ததைந்த. |