பக்கம் எண் :

களிற்றியானை நிரை17

5. பாலை

[பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.]

 அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
விளிநிலை கேளாள் தமியள்
1 மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற 
 5.வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
 10.மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
ாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரனுதி சிதைக்கும் நிரைநிலை அதர
 15.பரன்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
 20.ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
 25.மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.
 

-பாலை பாடிய பெருங்கடுங்கோ.


(பாடம்) 1. கொள்ளாள் தமியள்