பக்கம் எண் :

206அகநானூறு

88. குறஞ்சி

[இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.]

முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் ஊணீஇய பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்
புதுபை் பன்றி வருதிறம் நோக்கிக்
5.  கடுங்ககைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்
திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
10.  கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்
திருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும்
காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியம் கெண்டும்
15.  வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே.

-ஈழத்துப் பூதன்தேவனார்.

(சொ - ள்.) 1-7. முதைச் சுவல் கலித்த - பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த, மூரிச் செந்தினை - கொழுத்த செந்தினையின், ஓங்க வணர்ப் பெருங் குரல் உணீஇய - உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ண, பகுவாய்ப் பல்லி பாங்கர் பாடு ஓர்த்து - பிளந்த வாயினையுடைய பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து, குறுகும்-அணுக வரும், புருவைப் பன்றி வருதிறம் நோக்கி-இளைமை பொருந்திய பன்றியின் வரும் வகையினை நோக்கி, கடுங்கைக் கானவன் - வலிய கையினையுடைய தினைப்புனங் காப்போன், கழுது மிசைக் கொளீ இய - பரண்மீது கொளுத்தி வைத்த, நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி-நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி, வந்துநம் நடுங்கு தயர் களைந்த நன்னராளன் - வந்து நமது நடுக்கத்தைத் தரும் துயன ஒழித்த நன்மையாளனாகிய நம் தலைவன்;

8-15. குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை குன்றின்கண்ணுள்ள பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையின், கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்-கன்னத்தி


(பாடம்) 1. ஏறத்துப் பூதன் தேவன்.