88. குறஞ்சி [இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.] | முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை ஓங்குவணர்ப் பெருங்குரல் ஊணீஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புதுபை் பன்றி வருதிறம் நோக்கிக் | 5. | கடுங்ககைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம் நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே குன்றத் திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் | 10. | கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம் இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியம் கெண்டும் | 15. | வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. | | -ஈழத்துப் பூதன்தேவனார். |
(சொ - ள்.) 1-7. முதைச் சுவல் கலித்த - பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த, மூரிச் செந்தினை - கொழுத்த செந்தினையின், ஓங்க வணர்ப் பெருங் குரல் உணீஇய - உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ண, பகுவாய்ப் பல்லி பாங்கர் பாடு ஓர்த்து - பிளந்த வாயினையுடைய பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து, குறுகும்-அணுக வரும், புருவைப் பன்றி வருதிறம் நோக்கி-இளைமை பொருந்திய பன்றியின் வரும் வகையினை நோக்கி, கடுங்கைக் கானவன் - வலிய கையினையுடைய தினைப்புனங் காப்போன், கழுது மிசைக் கொளீ இய - பரண்மீது கொளுத்தி வைத்த, நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி-நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி, வந்துநம் நடுங்கு தயர் களைந்த நன்னராளன் - வந்து நமது நடுக்கத்தைத் தரும் துயன ஒழித்த நன்மையாளனாகிய நம் தலைவன்; 8-15. குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை குன்றின்கண்ணுள்ள பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையின், கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்-கன்னத்தி
(பாடம்) 1. ஏறத்துப் பூதன் தேவன். |