பக்கம் எண் :

208அகநானூறு

89. பாலை

[மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.]

தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்
உறுபெயல் வறந்த ஓடுநேர் நனந்தலை
உருத்தெழு குரல
1குடிஞைச் சேவல்
புல்சாய் விடரகம் புலம்ப வரைய
5.  கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்
சிற்வீடு கறங்கும் சிறியிலை வேலத்
தூழுறு விளைநெற் றுதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழியக்
களரி பரந்த கல்நெடு மருங்கின்
10.  விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு
2 திண்டோள் மலிர வாட்டிப்
பொறைமலி கழுதை நெடுநிறை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பில் துடியிகுத்
15.  தருங்கலந் தெறுத்த பெரும்புகல் வலத்தார்
வில்கெழு குறும்பிற் கோள்முறை பகுக்குங்
கொல்லை யிரும்புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே தேம்பெய்
20.  தளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள்
இடுமணற்
3பந்தருள் இயலும்
நெடுமென் பணைத்தோள் மாஅ யோளே.

-மதுரைக் காஞ்சிப் புலவர்.

(சொ - ள்.) 19-22. தேம் பெய்து அளவுறு தீம்பால் - தேனைச் சொரிந்து கலந்த இனிய பாலை, அலைப்பவும் உண்ணாள்-அலைத் தூட்டவும் உண்ணாளாய், இடுமணல் பந்தருள் இயலும்-மணல் பரப்பிய பந்தருள்அங்கும் இங்கும் ஓடும், நெடுமென் பணைத்தோள் மா அயோள்-ந்ணட மெல்லிய மூங்கில் போலும் தோளினையுடைய மாமை நிறத்தின ளாகிய உன் மகள்;

1-2. தெறு கதிர் ஞாயிறு - யாவற்றையும் அழிக்கும் கதிர்களை யுடைய ஞாயிறு, நடு நின்று காய்தலின் - முதுவேனிற் காலத்து இடை


(பாடம்) 1. குடுமிச்சேவல்.

2. திணிதோள்.

3. பந்தரியலும்.