93. பாலை [வினைமுற்றி மீளலுறுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.] | கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும் கேளல் கேளிர் கெழீ இயினர் ஒழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந் தாரங் கண்ணி அடுபோர்ச் சோழர் | | 5. | அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன பெறலரு நன்கலன் எய்தி நாடும் செயலருஞ் செய்வினை முற்றின மாயின் அரண்பல கடந்த முரண்கொள் தானை வாடா வேம்பின் வழுதி கூடல் | | 10. | நாளங் காடி நாறும் நறுநுதல் நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து | | 15. | நலங்கேழ் ஆகம் பூண்டுவடுப் பொறிப்ப மயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல் வயந்திகழ் பிமிழ்தரும் வாய்புகு கடாத்து மீளி மொய்ம்பொடு நிலனெறியாக் குறுகி ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக் | | 20. | கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீர் உயர்கரைக் கவைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே. | | -கணக்காயனார் மகனார் நக்கீரனார். |
(சொ - ள்.) 16. நெஞ்சே-, 1-3. கேள் கேடு ஊன்றவும்-உறவினரைக் கேட்டினை நீக்கித் தாங்கவும், கிளைஞர் ஆரவும்-கிளைகளாயுள்ளார் உண்ணவும், கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்-நொதுமலாளர் கெழுதகையினராகி ஒழுகவும் வேண்டி, ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு-பொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதாய ஊக்கங்கொண்டு, புகல் சிறந்து-விருப்பம் மிக்கு, |