பக்கம் எண் :

களிற்றியானை நிரை5

முதலாவது

களிற்றியானை நிரை

1. பாலை

[பிரிவிடை யாற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவே ளாவி
அறுகோட் டியானைப் பொதினி யாங்கண்
5.சிறுகா ரோடன் பயினொ சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொற்றம்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
10.அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்
நிழல்தேய்ந் துலறிய மரத்த அறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெற் பொரியும் வெம்மைய யாவரு
வழங்குநர் இன்மையின் வௌவுர் மடியச்
15.சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை
நாரின் முரங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி எடுப் ஆருற்
றுடைதிரைப் பிதிர்வில் பொங்கிமுன்
கடல்போல் தோன்றல காடிறந தோரே.

- மாமூலனார்.

(சொ - ள்.) 7-9. தோழி-, சேய்நாட்டு - சேய்மைக்கண் ணுள்ள நாட்டினின்று, பொலம் கல வெறுக்கை தருமார்-பொன்னணி முதலாய செல்வங்களை ஈட்டிவரவேண்டு, சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழ - சிறந்த மூங்கிலை யொத்த பரிய தோள் மெலியுமாறு (விட்டுப் பிரிந்து),