முதலாவது களிற்றியானை நிரை 1. பாலை [பிரிவிடை யாற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.] | வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவே ளாவி அறுகோட் டியானைப் பொதினி யாங்கண் | 5. | சிறுகா ரோடன் பயினொ சேர்த்திய கற்போற் பிரியலம் என்ற சொற்றம் மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக | 10. | அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின் நிழல்தேய்ந் துலறிய மரத்த அறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின் உகுநெற் பொரியும் வெம்மைய யாவரு வழங்குநர் இன்மையின் வௌவுர் மடியச் | 15. | சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை நாரின் முரங்கை நவிரல் வான்பூச் சூரலங் கடுவளி எடுப் ஆருற் றுடைதிரைப் பிதிர்வில் பொங்கிமுன் கடல்போல் தோன்றல காடிறந தோரே. | | - மாமூலனார். |
(சொ - ள்.) 7-9. தோழி-, சேய்நாட்டு - சேய்மைக்கண் ணுள்ள நாட்டினின்று, பொலம் கல வெறுக்கை தருமார்-பொன்னணி முதலாய செல்வங்களை ஈட்டிவரவேண்டு, சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழ - சிறந்த மூங்கிலை யொத்த பரிய தோள் மெலியுமாறு (விட்டுப் பிரிந்து), |