எட்டுத்தொகையுள்எட்டாவதாகிய புறநானூறு மூலமும் உரையும் 1 | கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியு மவ்வே றென்ப | 5 | கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை மறைநவி லந்தணர் நுவலவும் படுமே பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத் தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும் பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை | 10 | பதினெண் கணனு மேத்தவும் படுமே எல்லா வுயிர்க்கு மேம மாகிய நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. |
கடவுள் வாழ்த்து. பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது. இதன் பொருள் - திருமுடிமேற் சூடப்படுங் (பி - ம்.. சூட்டிய) கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக் கொன்றைப்பூ; ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு; மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்று சொல்லுவர்; நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறுப்பு, தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின், வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண் வடிவு ஒருபக்கமாயிற்று; ஆய அவ்வடிவுதான், தன்னுள்ளே
|