பக்கம் எண் :

243

126

ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை யுரவோன் மருக
5வல்லே மல்லே மாயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல்
துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற்
பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந
தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
10நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற வந்த ணாளன்
இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடற்
15பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப்
பிறகலஞ் செல்கலா தனையே மத்தை
இன்மை துரப்ப விசைதர வந்துநின்
வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற்
றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப
20அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய
அருஞ்சமந் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே.

(பி - ம்.) 10 ‘நிலமிசைப் பிறந்த’ 15 - 6 ‘வழிப்பிறர் கலஞ்’

திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை.

மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து (பி - ம். மாறோக்கத்து) நப்பசலையார் பாடியது.

(இ - ள்.) பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக் கொண்டு பாணரது தலை பொலியும்படி செய்து வாடாத பொற்றாமரையைச் சூட்டிய சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையும் உடைய பெரியோன்மரபினுள்ளாய்! ஒன்றைக் கற்றறிவேமாயினும் அறியேமாயினும் விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின், இராப்பொழுதுதான் ஓரிடத்தே உறங்குவதுபோன்ற செறிந்த இருளையுடைய சிறுகாட்டையும் பறையொலிபோலும் ஒலிபொருந்திய அருவியையுமுடைய முள்ளூர்க்கு வேந்தே! அழித்தற்கரிய தன்மையையுடைய