பக்கம் எண் :

253

135

கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின்
வளைக்கை விறலியென் பின்ன ளாகப்
5பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி
10வந்தனெ னெந்தை யானே யென்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு
கறையடி யானை யிரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவே ளாஅய்
களிறு மன்றே மாவு மன்றே
15ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே
பாணர் பாடுநர் பரிசில ராங்கவர்
தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப்
பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ
டன்ன வாகநின் னூழி நின்னைக்
20காண்டல் வேண்டிய வளவை வேண்டார்
உறுமுரண் கடந்த வாற்றற்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே.

திணை - அது; துறை - பரிசிற்றுறை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) புலி இயங்கும் சிகரம்உயர்ந்த நெடிய மலையின்கண் ஏறுதற்கரியபிளப்பின்கட் சிறியவழியை யேறுதலான் வருத்தமுற்றுஉடல் வளைவைப் பொருந்திய பயில அடியிட்டு நடக்கின்றமெல்லிய நடையினையுடைய வளையையணிந்த கையையுடையவிறலி என்பின்னே வரப்பொன்னைக் கம்பியாகச்செய்தாற்போன்ற முறுக்கடங்கிய நரம்பினை யுடையவரிப்பொருண்மையோடு பயிலும் பாட்டு 1நிலந்தோறும்மாறிமாறி யொலிப்பப் படுமலைப்பாலை நிலைபெற்றபயன்பொருந்திய சிறிய யாழைத் தளர்ந்த நெஞ்சத்துடனே ஒருமருங்கிலே அணைத்துக்கொண்டு புகழ்தற்கமைந்ததலைமையையுடைய நினது


1. ஐந்திணைக்கும் உரியனவாக ஐந்துயாழும் பண்களும் உண்மையின் இங்ஙனம் கூறினார்.