கொணர்ந்த பதினெண்வகைக்குடிப்பிறந்த வேளிர்’ (தொல்.பாயிரம்; அகத்திணை. சூ. 32) என வரும் நச்சினார்க்கினியர்வாக்கியங்களால் உணர்க. 14. புறநா. 203 : 11. 15. மு. புறநா. 202 : 10; தபங்கரென்னுமுனிவர் ஒருகாட்டில் தவஞ்செய்கையில் ஒருபுலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க. அதுகண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடிவந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூற, அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்துகடிந்தமையால் ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸந்திகாதேவியைச் சளனென்னும் அரசன் வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக்கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அது கொண்டு அதனைக் கொன்றமைபற்றி ‘ஹொய்ஸளன்’ என்றும், ‘புலிகடிமால்’ என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர். 17. புறநா. 363 : 1. (201) 202 | வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக் கட்சி காணாக் கடமா நல்லேறு கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக் கடிய கதழு நெடுவரைப் படப்பை | | 5 | வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்க் கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய நீடுநிலை யரையத்துக் கேடுங் கேளினி நுந்தை தாய நிறைவுற வெய்திய | | 10 | ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் நும்போ லறிவி னுமரு ளொருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே யியறே ரண்ணல் எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர் | | 15 | கைவண் பாரி மகளி ரென்றவென் தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும விடுத்தனென் வெலீஇயர்நின் வேலே யடுக்கத் தரும்பற மலர்ந்த் கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ தாய துறுகல் | | 20 | இரும்புலி வரிப்புறங் கடுக்கும் பெருங்கல் வைப்பி னாடுகிழ வோயே. |
|