வேங்கைவீ தாய துறுகல் இரும்புலி வரிப்புறங் கடுக்குமென்ற கருத்து: ஏதம் செய்யாததூஉம் ஏதம்செய்வதுபோலக் கண்டார்க்கு அச்சம் வரத் தோன்றுமென்றமையான், இதுவும் இகழ்ச்சிதோன்ற நின்றது. (கு - ரை.) வெட்சிக்கானம் : குறுந். 209 : 5. 2. மு. புறநா. 157 : 10. 1-2. புறநா. 193 : 1 - 2. 6. மு. மணி. பதி. 32, 4 : 39. 10. புலிகடிமால் : புறநா. 201 : 15, குறிப்புரை. 16. ‘தேற்றகில்லேமென்பது, தேற்றாப் புன்சொ னோற்றிசின்: என்பது போலத்தெளிதற்கண் வந்தது’ (திருச்சிற். 45, பேர்.) கலித். 92 ; 50. 18. ‘‘அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை” (நற். 112; குறுந். 26) ; ‘‘கருங்காற், பொன்னிணர் வேங்கை”, ‘‘கருங்கால் வேங்கை” (நற். 151, 168, 257) 18-20. வேங்கைப்பூப் பரந்த பாறை புலிபோற்றோன்றுமென்பது பின்வருவனவற்றாலும் விளங்கும்: ‘‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகல், இரும்புலிக் குருளையிற் றோன்றும்” (குறுந். 47) ; ‘‘மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின, அழுகை மகளிர்க் குழுவை செப்ப” (பரி. 14 : 11 - 2) ; ‘‘குறவ ரூன்றிய குரம்பை புதைய, வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம், புலிசெத்து” (அகநா. 12) ; ‘‘கருங்கா லின வேங்கை கான்றபூக் கன்மேல், இருங்கால் வயவேங்கை யேய்க்கும்” (திணைமாலை. 26) : ‘‘நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாக நண்ணி, மறமனை வேங்கை யெனநனி யஞ்சும்” (திருச்சிற். 96) ; கலித். 38 : 6. 21. தொல். விளிமரபு, சூ. 12, ந. மேற். (202) 203 | கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம்வளங் கரப்பினும் எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை இன்னுந் தம்மென வெம்மனோ ரிரப்பின் | | 5 | முன்னுங் கொண்டிரென நும்மனோர் மறுத்தல் இன்னா தம்ம வியறே ரண்ணல் இல்லது நிரப்ப லாற்றா தோரினும் உள்ளி வருநர் நசையிழப் போரே அனையையு மல்லை நீயே யொன்னார் | | 10 | ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய் பூண்கட னெந்தைநீ யிரவலர் புரவே. |
|