(பி - ம்.) 2 ‘விளைந்தது நிலம்’ 3 - 4 ‘மில்வாழ்க்கையேயின்னுந்’ 7 ‘நிரப்பதாற்றாது’ திணையும் துறையும் அவை. சேரமான்பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியைஊன்பொதி பசுங்குடையார் பாடியது. (இ - ள்.) கழிந்தகாலம்பெய்தேனெனக் கருதி மழை பெய்யாது மாறினும் முற்காலத்துவிளைந்தேனெனக் கருதி நிலம் விளைவை ஒழியினும்எல்லாவுயிர்கட்கும் உயிர்வாழ்க்கையில்லை; அதுபோலஇன்னமும் எமக்குப் பரிசில் தாருமென்று சொல்லிஎம்போல்வார் இரப்பின் அவர்க்கு முன்னும் பரிசில்கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது; கேளாய்:இயற்றப்பட்ட தேரையுடைய அண்ணலே! இல்லாத பொருளைத் தேடிநிரப்பமாட்டாத வறுவியோரினும், அவராற் பரிசில்நினைந்து வரப்படுவார் (வரப்படுவார்-கொடையாளர்) கொடாராயின் அவ் 1விரப்போரால் நச்சப்படும்இன்பத்தையிழப்பர்; தம் வறுமையாற் கொடுக்கமுடியாமையின் நாணிஅவரெதிர்முகம் நோக்கமாட்டாது இன்பமிழக்கும்மாந்தர் தன்மையையு மல்லை நீ, 2இறந்துபடுவை;பகைவரது அரிய அரண் அவரிடத்ததாகவும் அதனை அழித்துக்கொள்ளுவதன்முன்னே நும்முடையதெனப்பாணர்க்குக் கடனாகக்கொடுக்கும்வென்றியோடுகூடிய வண்மையை யுடையோயாதலான் எம் இறைவ! நீஇரப்போரைப் பாதுகாத்தலை முறைமையாகப் பரிகரிப்பாயாக-எ - று. அனையையுமல்லையென்பதற்கு இரவலர் வேண்டுமளவும் பாணியாது (தாமதியாது) முன்னே அளித்தலின், நசையிழப்போர் தன்மையையுடையாயல்லை யென்றுமாம். எம்மனோரென்றதுபிறரை நோக்கியன்றெனவுணர்க. ‘பொழிந்தென’, ‘விளைந்தென’என்பனவற்றை வினையெச்சமாக்கி மாறினும் கரப்பினுமென்னும் வினையோடுமுடிப்பினும் அமையும். (கு - ரை.) 1-2. ‘தகரவுகரம்,கழிந்தது......கரப்பினும் என்னும் புறப்பாட்டினுள்,பொழிந்து எனவும், விளைந்து எனவும் இறந்தகாலம் பற்றிவந்தமையின் ஏனையவற்றிற்குஞ் சிறுபான்மை இறந்தகாலமுமுண்டெனஅறிந்துகொள்க’, ‘கழிந்தது....கரப்பினும்: என்புழிப்பொழிந்தெனவும் விளைந்தெனவும் இறந்தகாலம் உணர்த்தின’ (தொல். வினை. சூ. 6,கல். ந.) ; ‘கழிந்தது.....கரப்பினும் : எனப் பொழிந்துவிளைந்தென்னும் துவ்வீற்றுத் தன்மையொருமை வினைமுற்றுக்கள்
1.‘‘ஈத்துவக்குமின்பம்” (குறள், 228) 2. ‘‘இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை” (கலித். 43 : 26 - 7)
|