இறந்தகாலமும் சிறுபான்மைகாட்டுமெனவுங் கொள்க.’ (இ. வி.சூ. 50, உரை) .கண்மாறல், ஒரு சொல். 9-11. ‘‘பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, அரிய வென்னா தோம்பாது வீசி” (பதிற்.44) ; ‘‘அரிய வெல்லா மெளிதி னிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி” (மதுரைக். 145 - 6) . ‘ஒன்னா, ராரெயிலவர்கட் டாகவு நுமதெனப் பாண்கடனிறுக்கும் வள்ளியோய்’ என்பதற்கு இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்கு அந்நகரைக் கொடுத்தது இங்கே உதாரணமாக அறியற்பாலது. மு.‘கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான்போல் வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்தவெற்றியும்; தன்னையிகழ்ந்தோரையும், தான் இகழ்ந் தோரையும் கொள்ளாரென்ப....கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டினுள், ஒன்னார்....வள்ளியோய் என்பதுமது’ (தொல். புறத்திணை. சூ. 12, ந.) (203) 204 | ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர் கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று | | 5 | தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச் சேறொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணீர் மருங்கி னதர்பல வாகும் | | 10 | புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற் புலவேன் வாழிய ரோரி விசும்பிற் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே. |
(பி - ம்.) 4 ‘லதனி னுயர்ந்தன்று’ 6 ‘ராகுவர்’ 8 ‘சேற்றொடு’ 10 ‘பழிப்பி னல்லதை’ திணையும் துறையும் அவை. வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது. (இ - ள்.) 1இழிந்தோன்கூற்றால் ஈயெனச் சொல்லி இரத்தல் இழிந்தது;அவ்வீயென்றதனெதிர் ஈயேனென்று சொல்லி மறுத்தல்அவ்விரத
1. ‘‘ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே” (தொல். எச்ச. சூ. 49)
|