சொல்ல, என்னை எப்பரிசறிந்தான்பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன்? என்னை யழைத்துக்காணாதேதந்த இப்பொருட்கு யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலனல்லேன்; விரும்பித்தினைத்துணையளவாயினும் நன்று, அந்தப் பரிசிலரதுகல்விமுதலாகிய பொருந்திய எல்லையையறிந்து கொடுத்து விடின்-எ - று. ஈங்கனஞ்செல்கவென்றது, காணாதே அவன் சொல்லிவிட்டவார்த்தையை. அவர்துணையளவறிந்துபேணி நல்கினர் விடின், தினையளவாயினும் இனிதெனக்கூட்டி வினைமுடிவு செய்க. யான்தரங்கெடப் பொருள் கொடுபோமவன் அல்லேன்; அவனாயின் இதுவும்கொடுபோவன்; நீ எனக்கு தரமறிந்து தரவேண்டுமென்பதாம். ‘அவர் துணையளவு’எனத் தம்மை உலகின்மேலிட்டுக் கூறினார். (கு - ரை.) 1-2. ‘‘சேட்சென்று,நல்குவார் கட்டே நசை” (நாலடி. 263) 9. புறநா. 121 : 3. 7-9. புறநா. 159 : 22 - 5, 205 : 1 - 2. மு. பரிசில்நிலை கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந. (208) 209 | பொய்கை நாரை போர்விற் சேக்கும் நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர் கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல் அகலடை யரியன் மாந்தித் தெண்கடற் | | 5 | படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும் மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப் பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப் | | 10 | பெறாது பெயரும் புள்ளினம் போலநின் நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந ஈயா யாயினு மிரங்குவே னல்லேன் நோயிலை யாகுமதி பெரும நம்முட் | | 15 | குறுநணி காண்குவ தாக நாளும் நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித் தெரியிழை மகளிர் பாணி பார்க்கும் பெருவரை யன்ன மார்பிற் செருவெஞ் சேஎய்நின் மகிழிருக் கையே. |
|