வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே? உள்ளம் உள்ளவிந்தடங்காது யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வரிசையோர்க்கு யாளிபோல உள்ளம் உள்ளவிந்தடங்காதென முற்றாக்கி உரைப்பாரும் உளர். (கு - ரை.) 1. ‘‘எழுவினி வாழியென் னெஞ்சே” (குறுந். 11 : 4) வன்ன வருகா நோக்கமொடு” (பொருந. 77) ; ‘‘பருகு வன்ன நோக்கமொடு” (பெருங். 3. 7 : 80) ; ‘‘பருகுவ னன்ன வார்வத்த னாகி” (நன். பாயிரம்) ; ‘‘பருகுவான் போல நோக்கும்”, ‘‘பருகுவனள்போனோக்கி” (பாக. 4. துருவன்பதம். 35; 10. சகடமுதைத்த 21) ; ‘‘மலர்த்தடங் கண்ணே வாயாப், பருகுவான் போல நோக்கி” (கூர்ம. திருக்கல்யாண, 61) 7. இவ்வடியுடன், ‘‘காத மிருபத்து நான்கொழியக் காசினியை’ ஓதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியிற், கொல்லிமலை தேன் சொரியுங் கொற்றவா நீமுனிந்தால், இல்லையோ வெங்கட் கிடம்” (கம்பர் பாடல்) என்பது ஒப்புநோக்கற்பாலது. 8. ‘‘ஆளி நன்மா னணங்குடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி” (பொருந. 139 - 40) 11, ‘‘நற்றோண் மருவரற் குலமரு வோரே” (ஐங்குறு. 464) (207) 208 | குன்று மலையும் பலபின் னொழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென நின்ற வென்னயந் தருளி யீதுகொண் டீங்கனஞ் செல்க தானென வென்னை | | 5 | யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன் காணா தீத்த விப்பொருட் கியானோர் வாணிகப் பரிசில னல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே. |
திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமானஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது இதுகொண்டுசெல்கென்று அவன் பரிசில்கொடுப்பக் கொள்ளாது அவர் சொல்லியது. (இ - ள்.) குன்றுகளும் மலைகளும் பல பின்கழிய வந்தேன் யான் பரிசில்கொண்டேனாய்ப் போதற்கெனச் சொல்லி நின்றவென்னை அன்புற்றருளி இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக,தானெனச்
|