பக்கம் எண் :

376

(கு - ரை.) 1. போர்வு - நெற்கதிர்ப்போர்; ‘‘கயலார் நாரை போர்விற் சேக்கும்” (ஐங்குறு. 9)

2. தொழுவர் - தொழில் செய்யும் உழவர். புறநா. 24 : 1; ‘‘நெல்லரி தொழுவர்” (நற். 195)

3. மு. புறநா. 383 : 7; ‘‘ஆம்ப லாயிதழ் கூம்புவிட்” (குறிஞ்சிப். 223)

6. மு. புறநா. 42 : 18. 8. புறநா. 91 : 8.

7. அல்குதல் - தங்குதல்.

9. கை, செய்வதென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; குறள், 925, பரிமேல்.

12, வினையெச்சத் தன்மைவினைக்குறிப்பு முற்றுக்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. .)

14. புறநா. 205 : 9.

19. இருக்கை - நாளோலக்கம். காலைப்பொழுதில் தன்னையாவரும் எளிதிற் காணும்படி அரசன் வீற்றிருக்குமிடம்.

(209)

210

மன்பதை காக்குநின் புரைமை நோக்கா
தன்புகண் மாறிய வறனில் காட்சியொடு
நும்ம னோருமற் றினைய ராயின்
எம்ம னோரிவட் பிறவலர் மாதோ
5செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி
உயர்சிறி துடைய ளாயி னெம்வயின்
உள்ளா திருத்தலோ வரிதே யதனால்
அறனில் கூற்றந் திறனின்று துணியப்
பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென
10நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும்
இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை
விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
15பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறத்தே.

திணையும் துறையும் அவை.

சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது,

(இ - ள்.) உயிர்ப்பன்மையைக்காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது காதல் கண்மாறிய அறமில்லாத பார்வையுடனேகூடி நும்போல்வார் யாவரும் இதற்கு ஒத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்;