பக்கம் எண் :

377

குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பியகாதலி இறந்துபடாது உயிர்வாழ்வுடையாளாகக் கூடின்எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால், அறனில்லாதகூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய இறந்துபட்டான்கொல்லோ? என்னுயிர் கெடுவதாகவென்று சொல்லுதலுற்றநோயையுடையாளாய்ப் பலபட வெறுத்துறையும் மனைவியதுதுன்பம் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடைகொண்டேன்; வாழ்வாயாக; இறைவ!இதனைப் பாராய்: இன்னாமையையுடைய நெஞ்சத்துடனேபோவேன், நின்னை வெகுண்டாரது அணுகுதற்கரிய காவலையுடையமுனையிடத்து அரணைப்போலப் பெரிய செயலற்ற எனது வறுமையைமுன்போகவிட்டு-எ - று.

குருசிலே! நும்மனோரும்இனையராயின் எம்மனோர் இவட்பிறவார்; எம் காதலிஉயிர் சிறிது உடையளாயின் நினையாதிருத்தல் அரிது;அதனால், அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டிஇப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக்கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன்; வாழியரெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

‘உதுக்காண்’என்றது அச்செலவை.

என்வறுமை என்னை விட்டு்நீங்கப்போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக்கொண்டுபோகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால், வாழியர் குருசில்என்பது இகழ்ச்சிக்குறிப்பாயிற்று.

‘உயிர்வெங்காதலி’ என்று பாடமோதுவாரும் உளர்.

(கு - ரை.) 1. புறநா. 71 : 17; கலித். 65 : 3.

2. கண்மாறிய - நீங்கிய.

3. ‘நும்ம னோருமற் றினையராயி னென்புழி அன்னோரென்பது உவமவுருபாகிய இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயர்” (தொல். எச்ச. சூ. 18, .)

3-4. தொல். எச்ச. சூ. 14, . மேற்.; ‘நும்ம னோருமற் றினையராயின், எம்ம னோரிவட் பிறவலர் மாதோ: என்புழி அன்னோரென்பது இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த குறிப்புப்பெயராகலானும், நும்மையன்னோர் எம்மையன்னோரென இரண்டாவது விரித்தற்கேற்புடைமையறிக’ (தொல். எச்ச. சூ. 18, சே.)

5. ‘‘செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ” (புறநா. 3 : 6)

7. மு. புறநா. 237 : 9.

14. முனை - பகைப்புலம்.

15. புலம்பு - வறுமை.

(210)

211

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே
றணங்குடை யரவி னருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக்
குன்றுதூ வெறியு மரவம் போல