குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பியகாதலி இறந்துபடாது உயிர்வாழ்வுடையாளாகக் கூடின்எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால், அறனில்லாதகூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய இறந்துபட்டான்கொல்லோ? என்னுயிர் கெடுவதாகவென்று சொல்லுதலுற்றநோயையுடையாளாய்ப் பலபட வெறுத்துறையும் மனைவியதுதுன்பம் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடைகொண்டேன்; வாழ்வாயாக; இறைவ!இதனைப் பாராய்: இன்னாமையையுடைய நெஞ்சத்துடனேபோவேன், நின்னை வெகுண்டாரது அணுகுதற்கரிய காவலையுடையமுனையிடத்து அரணைப்போலப் பெரிய செயலற்ற எனது வறுமையைமுன்போகவிட்டு-எ - று. குருசிலே! நும்மனோரும்இனையராயின் எம்மனோர் இவட்பிறவார்; எம் காதலிஉயிர் சிறிது உடையளாயின் நினையாதிருத்தல் அரிது;அதனால், அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டிஇப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக்கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன்; வாழியரெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. ‘உதுக்காண்’என்றது அச்செலவை. என்வறுமை என்னை விட்டு்நீங்கப்போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக்கொண்டுபோகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால், வாழியர் குருசில்என்பது இகழ்ச்சிக்குறிப்பாயிற்று. ‘உயிர்வெங்காதலி’ என்று பாடமோதுவாரும் உளர். (கு - ரை.) 1. புறநா. 71 : 17; கலித். 65 : 3. 2. கண்மாறிய - நீங்கிய. 3. ‘நும்ம னோருமற் றினையராயி னென்புழி அன்னோரென்பது உவமவுருபாகிய இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயர்” (தொல். எச்ச. சூ. 18, ந.) 3-4. தொல். எச்ச. சூ. 14, ந. மேற்.; ‘நும்ம னோருமற் றினையராயின், எம்ம னோரிவட் பிறவலர் மாதோ: என்புழி அன்னோரென்பது இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த குறிப்புப்பெயராகலானும், நும்மையன்னோர் எம்மையன்னோரென இரண்டாவது விரித்தற்கேற்புடைமையறிக’ (தொல். எச்ச. சூ. 18, சே.) 5. ‘‘செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ” (புறநா. 3 : 6) 7. மு. புறநா. 237 : 9. 14. முனை - பகைப்புலம். 15. புலம்பு - வறுமை. (210) 211 | அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே றணங்குடை யரவி னருந்தலை துமிய நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக் குன்றுதூ வெறியு மரவம் போல |
|