| நினையுங் காலை நீயுமற்றவர்க் கனையை யல்லை யடுமான் றோன்றல் பரந்துபடுநல்லிசை யெய்தி மற்றுநீ | | 10 | உயர்ந்தோ ருலகமெய்திப் பின்னும் ஒழித்த தாய மவர்க்குரித்தன்றே அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும் இன்னுங்கேண்மதி யிசைவெய் யோயே நின்ற துப்பொடு நிற்குறித்தெழுந்த | | 15 | எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின் நின்பெருஞ்செல்வம் யார்க்கெஞ் சுவையே அமர்வெஞ் செல்வநீயவர்க் குலையின் இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே அதனால்,ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந் | | 20 | தெழுமதிவாழ்கநின் னுள்ள மழிந்தோர்க் கேம மாகுநின்றாணிழன் மயங்காது செய்தல் வேண்டுமா னன்றே வானோர் அரும்பெற லுலகத்தான்றவர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர்கொளற்கே. |
(பி - ம்.) 24 ‘விதுப்புறு’ திணை -வஞ்சி; துறை - துணைவஞ்சி. அவன்மக்கண்மேற் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார்(பி - ம்.எயிற்றியார்) பாடியது. (இ - ள்.) மடுத்தெழுந்தபோரின்கட் கொன்ற மிகுதிபொருந்திய வலியமுயற்சியையுடையவெண்கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும்வென்றியையுடைய வேந்தே! கிளர்ந்த நீரையுடைய கடலாற்சூழப்பட்ட இப்பரந்தவிடத்தையுடைய உலகத்தின்கண்நின்னிடத்துப் போர்செய்யவந்த இருவரையும் கருதின்,பழையதாய்த் தங்கப்பட்ட வலியை யுடைய நின் பகைவேந்தராகியசேரபாண்டியருமல்லர், போரின்கண் விரும்பிய காட்சியுடனேநின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்தாம்;நினையுங்காலத்து நீயும் அவர்க்கு அத்தன்மையையாகியபகைவனல்லை; பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ! நீபரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தித்தேவருலகத்தின்கட் போய்ப் பின்பு நீ ஒழித்தஅரசாட்சியுரிமை அவர்க்குரித்து; ஆதலால், அப்பெற்றித்தாதலும்அறிவோய்! பெரிதும் இன்னமும் கேட்பாயாக; புகழை விரும்புவோய்;நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்குஎழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடையநின்புதல்வர் தோற்பின் நினது பெரிய செல்வத்தைஅவர்க்கொழிய
|